Friday, December 31, 2010

என் இனிய தமிழ் மக்களே...




ஹலோ, வெயிட்டீஸ்! வெயிட்டீஸ்! இந்த சிங்கப்பூர் சமையல் மாமிகள் மாதிரி
Puliyodarai is tempting di!
mouth watering di!
draging my legs to your blog di!நு கமண்ட் போட்டுட்டு ஓடாம ஒழுங்கா தீர்த்தத்துக்கு கீழ க்ளிக் பண்ணினா ஒரு விஷயம் கிட்டும்!...:)



இங்கதான் க்ளிக் பண்ணனும்.


Wish you a happy new year

Thursday, December 23, 2010

ப்ளவுஸ் சங்கரன்

கல்லிடைல இருந்த தோழர்கள் படைல ‘ப்ளவுஸ்’ சங்கரன் ரொம்ப முக்கியமான ஒரு ஆள். அவனோட பேரை பாத்துட்டு அவன் எதோ பாக்யராஜ் ரசிகனோ?னு எல்லாம் தப்பா நினைக்க வேண்டாம். மன்மோஹன்சிங் மாதிரியே அவனும் பரமசாது. நார்த்தங்காய் ஊறுகாய் பாட்டில்ல இருக்கும் கரண்டியும் கடைசி துண்டு ஊறுகாயும் மாதிரி நானும் சங்கரனும் அவ்ளோ தோஸ்த். எங்களுக்குள்ள பல ஒத்துமை உண்டு. ரெண்டு பேருக்குமே கணக்கு சுத்தமா வராது, பொங்கல் புளியோதரை குடுக்காத சமயங்கள்லையும் கோவில்லயே தான் எப்போதும் குடி இருப்போம். இந்த மாதிரி சொல்லிண்டே போகலாம். பரிட்சை சமயத்துல ரெண்டு பேரும் பக்கத்துல தான் உக்காருவோம். பரிட்சை எல்லாம் ஒரு டீம் Effort-டோட எதிர்கொள்ளனும்ங்கர நல்ல எண்ணம் தான் அதுக்கு காரணம்.



நண்பேன்ன்ன்டா!!....:)

அவனோட அம்மா மாதிரி வேகமா யாராலையும் தெலுங்கு பேசவே முடியாது, அதுலையும் பக்கத்து தெருல அவாளோட யாரோ ஒரு தூரத்து சொந்தம், நெருங்கின சொந்தம் கூட கிடையாது, ஆச்சாளுக்கு பீச்சா மதினிக்கு உடப்பொறந்தா தான். அந்த மாமியும் இந்த மாமியும் தெருல வெச்சு பாத்துட்டா போதும் "அக்கட போயிஸ்தானு! இக்கட போயிஸ்தானு!"னு ஒரே தெலுங்கு மழை தான் அப்புறம். நாக பஞ்சமி!னு ஒரு விஷேஷம் இருக்கர்தே அந்த மாமியாத்துல அஞ்சு விதமான கொழுக்கட்டை, கடலைபருப்பு பாயாசம் சாப்டதுக்கு அப்புறம் தான் தெரியும். கொழுக்கட்டைல தெலுங்காளை அடிச்சுக்கவே முடியாது. எக்ஸ்ட்ரா கொழுக்கட்டைக்கு ஆசை பட்டுண்டு பக்கி மாதிரி "மாமி! ஹேப்பி நாகபஞ்சமி!"னு எல்லாம் சொல்லி(வழிஞ்சி) நின்னது உண்டு.

வெயில் அடிச்சா வயித்து வலி/ தலை வலினு சொல்லி லீவு போடுவான், மழை பெஞ்சுதுன்னா காய்ச்சல்! ஜலதோஷம்!னு சொல்லி லீவு போடுவான். பாவம் அவன் உடம்பு வாக்கும் அப்பிடி தான். இதுல சுவாரசியமான விஷயம் என்னன்னா தலைவர் அதிதீவிர ஆஞ்சனேய பக்தர். தீபாவளிக்கு முந்தின நாள் அவாத்து பட்டாசாலைல அல்வா கிண்டர்துக்கு எல்லா சாமனையும் எடுத்து வெச்சுட்டு பக்கத்தாத்து வரைக்கும் அவனோட அம்மா போயிருந்த சமயம், கொல்லைபக்கம் வழியா 4 குரங்கு உள்ள வந்துடுத்து, காவலுக்கு இருந்த சங்கரன் ஆஞ்சனேயரை பாத்த பக்தி பரவசத்துல இருந்தப்பவே நெய் பாக்கெட்,பொறிகடலை (டப்பாவோட) எடுத்துண்டு போயிடுத்து. திருப்பி வந்து பதறி போய் நின்ன அவன் அம்மா கிட்ட, "அம்மா, ஆஞ்சனேயர் ஒச்சாயினு!ஒச்சாயினு!"னு சொல்ல, கடுப்பான அந்த மாமி இவனை அடி நொறுக்கிட்டா.

சங்கரனுக்கு இங்க்லிபீஸ்ல க்ஷேக்ஸ்பியரோட சித்தி புள்ளை மாதிரி அப்பிடி ஒரு பாண்டித்யம். 5 ஆம் கிளாஸ்ல முதல் தடவையா லீவு லெட்டர் எழுத சொல்லி குடுத்ததுலேந்து எல்லாரும் இங்கிலிபீஸ்லதான் லெட்டர் எழுதனும்னு டீச்சர் சொல்லிட்டாங்க. பாவம் சங்கரன் தான் ரொம்ப கஷ்டப்பட்டான். மாசத்துல ஒழுங்கா 8 நாள் தொடர்ச்சியா அவன் லீவு போடாம ஸ்கூலுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. ராமஜெயம் நோட்டு மாதிரி ஒரு குயர் நோட்ல எப்போதும் ஒரு ஸ்டேன்டேட் பார்மெட்ல 10 லெட்டர் எழுதி அவனோட நைனாட்ட கையெழுத்து வாங்கி ரெடியா வெச்சுருப்பான். இந்த அதிரடி உத்தரவுக்கு அப்புறமும் அவன் அதே முறையை தான் பாலோ பண்ணினான். AS i am suffering from feverகு பதிலா suffering from அத்தை பொண்ணு கல்யாணம், As i am suffering from மாமா பையன் உப நயனம்-னு போட்டு பட்டையை கிளப்பிட்டான். இதெல்லாம் விட பெரிய காமெடி am suffering from குலதெய்வம் கோவில் கொடை விழா/னு ஒரு தடவை எழுதி டீச்சரை கலங்கடிச்சுட்டான். அதே மாதிரி எப்போதுமே grand me 3 days leaveநு தான் கேப்பான். “ரொம்ப கிராண்டான கல்யாணம் போலருக்கு!”னு டீச்சரும் தலைல அடிச்சுப்பா.



கவாஸ்கர் தொப்பி!...:)


எங்க தெருலையே ஒரு அண்ணாட்ட மட்டும் தான் நெஜமான கிரிக்கெட் மட்டை உண்டு, மத்தவா கிட்ட எல்லாம் பீமன் கைல இருக்கும் வஸ்து மாதிரி தான் இருக்கும். அந்த அண்ணா கிட்ட ஒரு கவாஸ்கர் தொப்பியும் உண்டு, யாரு பேட்ஸ்மேனுக்கு பின்னாடி நின்னுன்டு கீப்பிங் பண்ணறாளோ அவா மட்டும் தான் அந்த தொப்பி போட்டுக்கலாம். இந்த கூத்துக்காகவே கீப்பிங் பண்ணர்த்துக்கு சுண்டல் வாங்கர்த்துக்கு நிக்கர மாதிரி எல்லாரும் வரிசையா நிப்பா. ‘ரொட்டி சால்னா’ சேகருக்கும் ‘சக்கப்பழம்’ ஹரீஷுக்கும் இந்த விஷயத்துல அடிக்கடி சண்டை வரும். இருந்தாலும் ரொட்டிசால்னா மேல சக்கப்பழத்துக்கு கொஞ்சம் பயம் உண்டு. இந்த மாதிரி இருந்தப்பதான் ஒரு சமயம் பொத்தை(ஈடன் கார்டன் மாதிரி அது ஒரு பெரிய மைதானம்) மாட்ச்ல க்ளவுஸ் (கையுரை) போட்டு கீப்பிங் பண்ணின ஆளை முதல்தடவையா சங்கரன் நேர்ல பாத்தான். அந்த ஆளு சுச்சா போகர்த்துக்கு போன கேப்ல அந்த க்ளவுஸை ஒரு தடவை கைல போட்டுண்டு 2 - 3 ஓவர் கீப்பிங் பண்ணி பாத்துட்டான். சங்கரனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

அடுத்த நாள் நாங்க எல்லாரும் முடுக்கு மூச்சா மாமாவாத்து திண்ணைல உக்காச்சுண்டு பேசிண்டு இருக்கும் போது சங்கரன் தடாலடியா பேச ஆரம்பிச்சான். “நம்ம டீமுக்கு எப்பிடியாவது ஒரு ப்ளவுஸ் வாங்கனும்டா, ஒன்னு வாங்கினா கூட போதும் எல்லாரும் மாத்தி மாத்தி போட்டுக்கலாம்"னு அவன் முடிக்கவும் எங்க எல்லாருக்கும் ஒன்னுமே புரியலை, இருந்தாலும் காட்டிக்காம “ப்ளவுஸ் எல்லாம் ரெடிமேட்ல கிடைக்கர்தா என்ன? அதுவும் போக ஒரே டிசைன் எல்லாருக்கும் பிடிச்சி வரவேண்டாமா”னு அவன் வாயை பிடிங்கினோம். “எங்க வாங்கினாலும் ப்ளவுஸ்ல ஒரே டிசைந்தான் கிடைக்கும் அதுவும் போக ரெடிமேட்லதான் நன்னா இருக்கும்”னு சங்கரன் சளைக்காம பதில் சொன்னான். பசங்க விடாமா "ப்ளவுஸ் போட்டுண்டு தெருல எல்லாம் விளையாட முடியுமாடா? தெருல உள்ள மாமிகள் எல்லாம் சண்டைக்கு வரமாட்டாளோ?"னு கிண்டிவிட்டானுங்க, " இந்த மாமிகளுக்கு வேற ஜோலியே கிடையாது, நாம ப்ளவுஸ் போட்டுண்டு விளையாண்டா அவாளுக்கு என்ன வந்தது? யார் என்ன கேக்கறா?னு நான் பாக்கறேன். நாம பயந்து பயந்து நடுங்கர்துனால தான் மாமிகள் எல்லாம் நம்ப கணக்கு டீச்சர் மாதிரி ரொம்ப பாடாபடுத்திண்டு இருக்கா நான் போட்டு விளையாடி காட்டரேன் பாருங்கோ!"னு ஒரு வீரசபதமே போட்டான் சங்கரன்.



கிரிக்கெட் க்ளவுஸ்..:) (RVS அண்ணா! நீங்க என்ன படம் எதிர்பார்த்தேள்னு எனக்கு தெரியும்!..:P)

ஜன்னல் வெச்சதா? ஜன்னல் இல்லாததா? ஜன்னல் வெச்சதுன்னா தாத்தா டெயிலர் கிட்ட தைக்கலாம், ஜன்னல் இல்லாத சாதா டிசைனுக்கு மணி டெய்லர்தான் பெஸ்ட்!”னு ஹரிகுட்டி சொன்னப்பதான் சங்கரனுக்கு மெதுவா புரிஞ்சது, இனிமே புரிஞ்சு என்ன பிரயோஜனம்? அந்த சுபவேளைலேந்து சங்கரனோட பேருக்கு முன்னாடி ‘ப்ளவுஸ்’ அடைமொழி அட்டையா ஒட்டிண்டுருத்து. அதுக்கு அப்புறம் வாசல்ல புடவைகாரர் ராஜேந்திரன் வந்தா போதும், எல்லா பயலுகளும் “சங்கரா, புது குஷ்பு டிசைன் ப்ளவுஸ் வந்துருக்காம்! வாங்கிக்கோடா!”னு அவனை அழ அழ விட்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கர்துதான் முக்கியமான பொழுது போக்கே!..:)

எல்லாருக்கும் ஹேப்பி கிறிஸ்த்மஸ்!!

Thursday, December 16, 2010

கணக்கு பண்ணும் துறை

முடி வெட்டுர கடைலேந்து டீ கடை வரைக்கும் இப்போ இதுதான் பேச்சு, //ராஜா, ஸ்பெக்ட்ரம், நிராடியா,கனிமொழி// இது போக இப்போ பரவலா புழக்கத்தில் அடிபடும் ஒரு வார்த்தை மத்திய தணிக்கை துறை(CAG). என்னடா இது தக்குடுவுக்கு என்ன ஆச்சு? நு எல்லாரும் முழிப்பேள்னு எனக்கு தெரியும். பொதுவா இதெல்லாம் எழுதர்துக்குன்னே பல ஜாம்பவான்கள் இருக்கா, குறையொன்றும் இல்லை பாட்டை எப்படி எம் எஸ் அம்மா பாடி கேட்டா தான் நன்னா இருக்குமோ அது மாதிரி இதெல்லாம் அவா எழுதி படிச்சா தான் நன்னா இருக்கும், அதனால நான் எழுதர்து கிடையாது.

அப்போ இப்ப என்ன ஆச்சு கோந்தைக்கு?னு கேக்காதீங்கோ! சமீபத்துல உச்ச நீதிமன்றத்துல நடந்த ஒரு வாக்குவாதத்துல ராஜாவோட வக்கீல் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கார். “CAG அறிக்கை யூகத்துல எழுதினது, உண்மை கிடையாது" அப்பிடின்னு, அதுக்கு தான் இந்த பதிவு.

நம்ப சர்க்கார்ல உருப்படியா இருக்கற சொச்சம் அமைப்புல மத்திய தணிக்கை துறை முதன்மையானது. சொல்லப்போனா அசோகதூண்ல இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நாலாவது சிங்கங்கள்ல இவாளும் ஒன்னு. இது 1935 தனி நாடாளுமன்ற சட்டம் மூலமா உண்டாக்கப்பட்டது. இது எந்த இத்தாலிய உளவாளிகளுக்கும் சலாம் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. (இதே மாதிரி இருக்க வேண்டிய CBI இப்போ congress investigation bureau வா இருக்குனு எல்லாருக்கும் தெரியும்)




தனித்தன்மை வாய்ந்த ஒரு அமைப்பு, இதோட அறிக்கை நாடாளுமன்றத்துல மட்டும் தான் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கைல இருக்கும் விஷயத்தை ஆடிட் பாயிண்ட் அப்பிடின்னு சொல்லுவா. மத்திய சர்க்காருக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இவாளோட தணிக்கைக்கு உட்பட்டவாதான். மாநிலங்களுக்கு குடுக்கும் நிதியோட அடிப்படைல அதையும் தணிக்கை பண்ணுவா.

தனி தனி குழுவா தணிக்கை பண்ணர்த்துக்கு அனுப்பிவைப்பா. அதுக்கு மூனு மூத்த அதிகாரியும்,2 செக்ஷன் அதிகாரியும், 1 ப்ரதான அதிகாரியும் இருப்பார். மத்திய தணிக்கைத்துறையோட தலைமை அதிகாரி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமான அந்தஸ்து உள்ளவர். நம்ப பக்கமெல்லாம் ஆவின் சொசைட்டி/ வேளாண்விற்பனை வாரியம் இதுக்கு எல்லாம் ஆளுங்கட்சியோட கடாமீசை உள்ள வட்டத்தையோ மாவட்டத்தையோ தான் தலைவரா நியமனம் பண்ணுவா அதை மாதிரி இது கிடையாது, தணிக்கை துறையில் குறைஞ்சபட்சம் 25 வருஷம் அனுபவம் இருக்கும் ஒரு திறமையான முக்கியமா நேர்மையான தணிக்கை அதிகாரியை தான் தலைமை அதிகாரியா நியமிக்க முடியும்.

தணிக்கை முடிஞ்சு இவாளோட அறிக்கை முதல்ல உயரதிகாரிகிட்ட சமர்ப்பிக்கப்படும், இதை மாதிரி 10 நிலைகள் தாண்டி தான் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வரும். அறிக்கையோட நம்பகத்தன்மை,துல்லியத்தன்மை எல்லாத்தையும் பொறுத்து ஆரம்ப அறிக்கைல 10 பாயிண்டோட ஒரு அறிக்கை போனா கடைசி நிலைல 2 பாயிண்ட்டுக்கு இறுதி நிலை ஒப்புதல் கிடைச்சாலே பெரிய அதிசயம்.

இது எதுக்குன்னா நாடாளுமன்றத்துல சமர்ப்பனம் பண்ணினதுக்கு அப்புறம் யாரும் நாக்கு மேல பல்லை போட்டு பேசிட கூடாதுனு தான். இதன்படி ஒரு பாயிண்ட் அறிக்கைல பிரசுரமாகர்துன்னா அது 100% உறுதியான ஊழல் அபாய அறிவிப்புனு அர்த்தம். எல்லா விதத்துலையும் புரியும் படியும், சகல விதமான ஆதாரத்தோடும் அந்த அறிக்கை இருக்கும். சில கோபாலபுரத்து கோமகன்கள் எழுதும் நெஞ்சுக்கு நீதி! குஞ்சுக்கு பீதி! எல்லாம் இந்த அறிக்கையோட ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

இதுவரைக்கும் இவாளோட அறிக்கையால வெளிச்சம் காட்டப்பட்ட முக்கியமான முறைகேடுகள்,

1) போப்பர்ஸ் பீரங்கி ஊழல் 2) மாட்டுத் தீவண ஊழல் 3) காமென்(காங்கிரஸ்) வெல்த் கேம்ஸ் 4)ஸ்பெக்ட்ரம் இது தவிர எண்ணிக்கைல அடங்காத பல முக்கிய ஊழல்கள்.

இதெல்லாம் தக்குடுவுக்கு எப்பிடி தெரியும்னு யோசிக்காதீங்கோ! நான் மேய்க்கர அரசாங்க ஒட்டகத்துல சவாரி பண்ணின இந்திய அதிகாரிகள் சொன்ன விஷயம் இது. இவாளோட திறமை,துல்லியத்தன்மை எல்லாம் பாத்துட்டு வளைகுடா நாடுகள் எல்லாத்துலையும் ரொம்ப வருஷமாவே இவாளுக்கு ராஜ உபசாரம். ஐக்கிய நாடுகள் சபையோட பெரும்பாண்மையான தணிக்கை பொறுப்பும் இவாளோட கைலதான் இருக்கு என்பது உபரி தகவல்.

இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தியால இவா கண்டுபிடிச்சு அறிக்கை குடுத்தாலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை எல்லாம் தேசத் துரோகிகளோட பொதுக்குழுலையும் செயற்குழுலையும் தீர்மானம் பண்ணர்தை பாக்கும் போதுதான் வயத்தெரிச்சலா இருக்கு. அதிசயமா இந்த தடவை உச்ச நீதிமன்றம் தலையிடர்துனால கொஞ்சம் குடைச்சலா இருக்கு இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கு.




வளைகுடா நாடுகள்ல இருக்கும் தலைமை தணிக்கை துறைக்கு “திவான் மஹாசபை”னு பேரு. இங்க இருக்கும் அதிகாரிகளை பாத்தாலே அரசாங்க நிறுவன தலைமை நிதி அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனம். ஏன்னா நம்ப ஊர் மாதிரி அறிக்கையை வாங்கி @#துக்கு அடில போட்டுண்டு ஆட்சியாளர்கள் உக்காசுக்க மாட்டா. நடவடிக்கை எல்லாம் அதிரடியா இருக்கும்.. ஜனநாயகம்! வெங்காயம்!னு சொல்லிண்டு இந்தியால நாம பல்லை இளிச்சுண்டு இருக்க்கர்துனால தான் இப்போ உலகமே நம்மை பாத்து சிரிக்கர்து!..:((

Thursday, December 9, 2010

யானை! யானை! - II

Part I
நானும் என்னோட நண்பனும் முன் பக்கமும் பின் பக்கமுமா சரி பண்ணி உக்காந்து பாத்தும் மனசுக்கு திருப்தியாவே இல்லை. நாங்க சரி பண்ணி உக்காசுக்க ட்ரை பண்ணிண்டு இருக்கும் போதே யானை மெதுவா நகர ஆரம்பிச்சது. எங்க ரெண்டு பேருக்குமே வயத்தை கலக்க ஆரம்பிச்சது. என்னோட கைல வெள்ளிக்குடம், அவனோட கைல ஒரு பெரிய கோவில் குடை. நான் மெதுவா யானையோட கழுத்துல இருந்த ஒரு பள்ளத்துல குடத்தை வச்சுண்டு நன்னா கெட்டியா கட்டிப்புடிச்சுண்டேன்.



யான் ஏறிய யானை!!..:)

ஒரு கையால யானை மேல போர்த்தி இருந்த துணியை பிடிச்சுண்டேன். அந்த சமயம் பாத்து வெடிக்காரன் ஒரு வெடியை கொளுத்தி வானத்துல விட்டான். 'டமால்'னு அது வெடிக்கவும் யானையோட நடைல ஒரு அதிர்வு தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் பயந்து போய்ட்டோம். என்னல ஆச்சு யானைக்கு?னு என்கிட்ட கேட்டான். ‘யானை மனசுக்குள்ள சிரிக்கர்து போலருக்கு!’னு நான் பதில் சொன்னேன். இது வரைக்கும் ஒழுங்கா போயிண்டுருந்த யானையோட நடைல ஒரு வித்தியாசம் தெரிஞ்சது. வலது பக்க முன்னங்காலை ஒருமாதிரி வட்டம் போட்டு வட்டம் போட்டு நடந்தது. என்னடா மாப்ள இது!னு மறுபடியும் குடைக்காரன் தொணதொணத்தான். யானை ஓ! போடுதுடா மாப்ள!னு நான் பதில் சொல்லிண்டே கீழ இருந்த யானைப் பாகன்ட என்ன ஆச்சு?னு விசாரிச்சேன். ‘ஒன்னும் இல்லை தம்பி! முன்னங்கால் முட்டி கொஞ்சம் தேஞ்சுருக்கு, அதனால யானை இப்படித்தான் நடக்கும்!’னு சாதாரணமா பதில் சொன்னார். ‘இதெல்லாம் ஏறர்த்துக்கு முன்னாடி சொல்லமாட்டேளாடா!’னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.



ஆரம்பமெல்லாம் நன்னாதான் இருக்கு...:)

இதுக்கு நடுல கூட வந்துண்டு இருந்த ஒரு மாமா, ‘ஸ்வாமியோட விஷேஷமே தனிதான்! கணபதி பிரணவ ஸ்வரூபம் இல்லையா, அதான் காலால ‘ஓம்’ போட்டு காமிக்கர்து யானை!’னு பிட்டு போட்டு மத்த மாமாக்களை உச்! கொட்ட வெச்சுண்டு இருந்தார். ‘மாமா! அடுத்த திருப்பத்துல நான் கீழ இறங்கிக்கறேன், நீங்க மேல வாங்கோ! மேலேந்து பாத்தா ‘ஓம்’ இன்னும் தெளிவா தெரியும்!’னு நான் சொன்னதுக்கு அப்பரம் பேசாம வந்தார். நேரம் ஆக ஆக எனக்கு பயம் ஜாஸ்தியாயிண்டே போச்சு. 'யானை சவட்டியதில் பச்சிளம் பாலகன் தக்குடு சட்னி'நு எதுகை மோனையோட தினமணில செய்தி வந்துருமோ?னு பயமா இருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுல ஒரு உருண்டை தான் வைரமுத்துவுக்கு உருண்டது, ஆனா எனக்கு 2 - 3 உருண்டை உருள்ற மாதிரி இருந்தது.

கணபதி உபனிஷத்ல ஆரம்பிச்சு ருத்ரம் சமகம்னு எல்லா ஸ்லோகமும் சொல்ல ஆரம்பிச்சேன். கணபதி பஞ்சரத்னம் மட்டும் சொல்லலை, ஏன்னா அதை சொன்னா பிள்ளையார் 'பாபா ப்ளக்க்ஷிப்' ரைம்ஸுக்கு குட்டிக் குழந்தேள் தலையை ஆட்டிண்டு ஆடரமாதிரி சந்தோஷமா ஆடிண்டே கேப்பாராம். அப்பரம் திவா அண்ணா ப்ளாக்ல இருக்கும் யானை மாதிரி குதிக்க ஆரம்பிச்சுதுன்னா என்ன பண்ணர்து! அதனால சொல்லலை.



பப்பு டார்லிங் ரெடி ஆயாச்சு!!..:)

ஒரு வழியா குத்துக்கல் தெருவுக்குள்ள வந்தாச்சு, அங்க இருந்த ஒரு பாலக்காட்டு மாமி ஆர்த்தி(ஆர்த்தி யாரு? நம்ப பாலக்காடு மாமியோட ஒரே பொண்ணா?னு வளிச்சுண்டு வந்து யாரும் சந்தேகம் கேக்காதீங்கோ!) எடுத்துட்டு சும்மா இருக்காம, ‘தக்குடு! ஆனன மேல உன்னைகாண்ரோது பந்தளராஜகுமாரனாட்டம் இருக்கை கேட்டையா!’னு போட்டா பாக்கனும் ஒரு பிட்டை. யானை எப்ப பந்தாடப்போர்தோ?னு பயந்துண்டு இருந்த நான் உடனே, ‘மாமி! ஆரத்தி தட்டை தள்ளி வெச்சுக்கோங்கொ! ஆரஞ்சு கலர் ரஸ்னா ஜூஸ்!னு நினைச்சு, ‘ஐ லவ் யூ ரஸ்னா!’னு சொல்லிட்டு யானை தும்பிக்கையால உறிஞ்சுடப்ப்போர்து!’னு சொன்னேன். ‘மாமி! நான்! நான்! எப்பிடி இருக்கேன்?னு சொல்லலையே?’னு குடைக்காரன் ஆரம்பிச்சான். ‘பரக்காதடா பரக்காவட்டி! நீ பந்தளராஜாவுக்கு குடை பிடிக்கரவன் மாதிரி லக்ஷணமா இருக்கை போதுமா!’னு அவனை சமாதானம் பண்ணினேன். இதுக்கு நடுல ஒரு நாதாரிப்பய சரவெடியை கொளுத்திப் போட்டு யானையை பதறடிக்க முயற்சி செஞ்சுண்டு இருந்தான்.

சன்னதி தெருல ருக்கு மாமி பாகன் கிட்ட மெதுவா, ‘யேன்டாப்பா! உன்னோட யானை கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் சாப்டுமா?’னு விசாரிச்சுண்டு இருந்தா. நான் உடனே சுதாரிச்சுண்டு, ‘அதெல்லாம் நாங்க கீழ இறங்கினதுக்கு அப்பரம் தெருல வந்து குடுத்துக்கோங்கோ மாமி!னு சொல்லிட்டேன். அவாத்துல கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் பாமாயில்லதான் பண்ணூவா. கண்றாவியா இருக்கும், வாயிலையே வெக்க முடியாது. கேட்டா, கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை!னு ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுவா. அவாத்துல யாரும் சாப்டாத பழைய பக்ஷண ஸ்டாக் எல்லாத்தையும் யானைட்ட குடுத்து க்ளியர் பண்ண பாக்கரா. அவாத்து மைசூர்பாவை வச்சு வாய்க்காலுக்கு சைடுல வெள்ளத் தடுப்புச் சுவரே கட்டிடலாம் அவ்ளோ ஸ்ட்ராங்! இதை எல்லாம் திண்ணுட்டு யானைக்கு எதாவது ஆச்சுன்னா அப்பரம் சேதாரம் எங்களுக்குத்தான்.

‘முடுக்கு’மூச்சா மாமா(அவாத்துல 3 டாய்லட் இருந்தாலும் அவர் மட்டும் முடுக்குல போய்தான் எல்லாம், அதனால இந்த பேர் அவருக்கு) ரொம்ப நாழியா யானை பின்னாடி & சைடுல வந்துண்டே இருந்தார். அடிக்கடி யானையோட வாலை பாத்துண்டே இருந்தார். இதை நான் கவனிச்சுட்டு ‘என்ன சமாசாரம் மாமா?’னு கேட்டதுக்கு, மோதரம் பண்ணி போட்டுக்க நீளமான ஒரு யானை முடியை புடுங்கர்த்துக்கு வால்ல தேடிண்டு இருக்கேன்டா கோந்தை!!னு சாதாரணமா சொன்னார். “@#%ரை புடுங்கர்த்துக்கு இதுவாவோய் நேரம்?”னு துபாய் பார்ட்டி நல்ல திட்டிவிட்டுட்டான்.

இதுக்கு நடுல என்னோட வேட்டி முடிச்சு என்னை மாதிரியே ரொம்ப லூசா இருந்தது. வேட்டியை இழுத்துகட்டனும்னா கும்பத்தை கீழ குடுத்தா தான் கட்டமுடியும். கீழ இருந்த கோவில் தர்மகர்த்தா கரகாட்டக்காரன்ல வரும் கனகாவோட அப்பா சண்முகசுந்தரம், “அம்மாடி காமாட்சி! இந்த கரகத்தை ஆட்டம் முடிஞ்சுதான் கீழ இறக்கனும்!”னு கனகாகிட்ட சொன்ன மாதிரி “கும்பத்தை கோவில் வாசல்லதான் இறக்கனும்!”னு உறுதியா சொல்லிட்டார். கோவில் வாசல்ல கும்பல் கும்பலா மடிசார் பொம்ணாட்டிகளும் அவாத்து பிகர்களும் நின்னுன்டு இருந்தா. எல்லாரும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு மினிக்கிண்டு இருந்தா அவா எல்லார் முன்னாடியும் அவுந்த வேட்டியோட ‘சூப்பர்மேன்’ கோலத்துல(வேட்டியை கழுத்துல கட்டிண்டு குதிச்சா சூப்பர்மேன் தானே?) நிக்கப் போறேன்!னு மனசுக்குள்ள பயந்துண்டு இருந்தேன்.



தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)

போட்டோகாரன்கிட்ட யானை மேலேந்து இறங்கும் போது ஒரு ஸ்பெஷல் போட்டோ எடுத்து தாங்கோ!னு சொல்லியிருந்தேன், அதனால அவர் ஜூம்பண்ணர காமிராவோட ரெடியா இருந்தார். ‘சூப்பர்மேன்’ கோலம் அமெரிக்கா வரைக்கும் போகப்போகர்து!னு மனசுக்குள்ள ஒரே பதட்டம். ஒரு வழியா கோவில் வாசலும் வந்தது. வெள்ளிக் குடத்தை ஒரு மாமாட்ட குடுத்துட்டு மெதுவா கீழ இறங்கி பாஞ்சாலி மாதிரி ஒரு கையால அவுந்த வேட்டியை பிடிச்சுண்டு மின்னல் வேகத்துல ‘துபாய்’ காந்தி மாமியாத்துக்குள்ள புகுந்துட்டேன். அப்பரம் வந்து சொன்ன பேச்சை காப்பாத்தின யானையை ஒரு பிரதக்ஷிணம் பண்ணிட்டு தும்பிக்கையை தொட்டு வணங்கி ஷாஷ்டாங்கமா ஒரு நமஸ்காரமும் பண்ணினேன்.

இந்த வருஷம் தர்மகர்த்தா பூ மாலையை கைல வெச்சுண்டு, தக்குடு!னு கூப்டவுடனே S.V. சேகர் நாடகத்துல கதாபாத்திரங்கள் 'டஷ்ஷ்ஷ்ஷ்'னு காணாம போகர மாதிரி காணாம போய்ட்டேன். யானை மேல ஆள் ஏறினதுக்கு அப்பரம் தான் பக்கத்துலையே போனேன். துபாய் பார்ட்டி ஆத்தங்கரைக்கே வரலை, ‘தெருலயே நான் இருக்கேன்!’னு சொல்லிட்டான்

Friday, December 3, 2010

யானை! யானை!

எங்க ஊர் பிள்ளையார் கோவில்ல 10 நாள் சதுர்த்தி உத்ஸவம் உண்டு. பத்து நாளும் தெருவே சும்மா 'கலகல'னு இருக்கும். பத்து நாளுக்கு நடுல ஒரு 2 நாள் பெரிய லெவல்ல ஹோமம்,அபிஷேகம்,லக்ஷார்சனை இதை மாதிரி எதாவது இருக்கும். விஷேஷ நாள் அன்னிக்கி காத்தால தெருல இருக்கும் நண்டு நசுக்குலேந்து தொடங்கி 65 வயசு மாமா வரைக்கும் எல்லாரும்(ஆண்கள்) ஆத்தங்கரைக்கு அபிஷேக ஜலம் எடுத்துண்டு வரர்த்துக்கு போய்டுவோம். பொம்ணாட்டிகள் எல்லாரும் கால் வெக்கர்த்துக்கு கூட இடம் விட்டு வைக்காம தெரு முழுசும் கோலம் போட்டு கும்பத்தோட வரப்போகும் தெரு மனுஷாளை வரவேற்கர்த்துக்கு ஆர்த்தித்தட்டு சகிதமா ‘சரக் சரக்’னு சத்தம் வரும் மடிசார்/பட்டுப் பாவாடையோட வாசல்ல நின்னுன்டு இருப்பா. எல்லார் வீட்டு தங்கமணிகளும் அன்று மட்டும் ‘ஜில் ஜில்’ ரமாமணிகளாக மாறிடுவா.



கோவில் வாசல் கோலம்!!

பிகர்கள் எல்லாம் ‘தாவணி போட்ட தீபாவளி’யாக காட்சி அளிப்பார்கள். மடிசார் புடவைல எத்தனை கலர் உண்டு?னு உங்க யாருக்காவது சந்தேகம் இருந்தா ஒரு தடவை எங்க ஊருக்கு வாங்கோ!...:) மாமிகளோட மடிசாரை பாத்தே அவாளோட சாமர்த்தியம் எப்பிடின்னு சொல்லிடலாம், ஜவுளி கடை பொம்மைக்கு கட்டி விட்ட மாதிரி சில பேருக்கு இருக்கும், சிலபேர் மடிசாரை கட்டிண்டு வரமா சுத்திண்டு வந்துட்டு நிலால நடக்கும் நீலாம்ஸ்ட்ராங் மாதிரி குதிச்சு குதிச்சு நடப்பா, ஒரு சில பேருக்குத்தான் தாத்தா டெயிலர் கிட்ட அளவு குடுத்து தைச்ச மாதிரி கனகச்சிதமா இருக்கும். அதுலையும் சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா, அது இருந்துதுன்னா அந்த மாமி கரெக்ட்டா மடிசார் கட்டிக்கரான்னு அர்த்தம்.




எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி!...:)

ஆண்கள் எல்லாம் நதில ஸ்னானம் பண்ணிட்டு ஜரிகை வேஷ்டி எல்லாம் கட்டிண்டு கும்பதை எடுத்துண்டு மேளதாளத்தோட எல்லா தெருவும் சுத்தி வருவோம். சாதரண நாட்கள்ல பழைய பைத்தார வேஷ்டியும், அழுதுவடிஞ்ச மூஞ்சியுமா இருந்த பல மாமாக்கள் அன்னிக்கி பாத்தேள்னா மழுங்க ஷேவ் பண்ணி, சந்தனக் கீத்து, குங்குமப்பொட்டு சகிதமா ‘பளீர்’ மயில்கண் வேஷ்டியோட ‘தில்லானா மோஹனாம்பாள்’ சிவாஜிகணேசன் மாதிரி அம்சமா இருப்பா. அவாத்து மாமிகளே, ‘இது எங்காத்து மாமாவா?’னு ஆச்சர்யப்படுவா.

1 கிலோ எடை உள்ள பிரதான வெள்ளிக்குடத்தை யானை மேல உக்காசுண்டு யார் எடுத்துண்டு வரா அப்பிடிங்கர்து கடைசி வரைக்கும் பரமரகசியமா இருக்கும். அது வெறும் குடம் கிடையாது, பிள்ளையாரையே கொண்டு வரமாதிரி ஒரு நம்பிக்கை எல்லாருக்கும். தக்குடு மாதிரி பொடிப் பயலுக்கு எல்லாம் அந்த சான்ஸ் கிட்டினதே கிடையாது. பெங்களூருக்கு வேலைக்கு போனதுக்கு அப்பரம் முதல் தடவையா சதுர்த்திக்காக கல்லிடை போயிருந்தேன். வழக்கம் போல நானும் ஆத்தங்கரைக்கு போயிருந்தேன். நதிக்கு பூஜை எல்லாம் பண்ணினதுக்கு அப்பரம் கைல அழகான ஒரு மல்லிபூ மாலையை வெச்சுண்டு கோவில் தர்மகர்த்தா, ‘தக்குடு! இங்க வாடா கோந்தை!’னு கூப்ட்டார். பக்கத்துல போனா 'படக்'னு மாலையை கழுத்துல போட்டு, ‘தக்குடுதான் யானை மேல வரப்போறான்!’னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டார்.

முதல் தடவையா அந்த வாய்ப்பு எனக்கேவா?னு ஆச்சர்யமா இருந்தது . பொதுவா எப்போதும் பயங்கர போட்டி நடக்கும். இந்த தடவை போட்டியே இல்லை, அதுவும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அந்த வருஷம்தான் 3- 4 கோவில் யானை மதம் பிடிச்ச சம்பவம் சன் டிவில வந்ததால ப்ளான் பண்ணி என்னை சிக்கவெச்சுட்டாளோ?னு கூட ஒரு சந்தேகம் வந்தது. இதுக்கு நடுல யானைல நம்ப கூட இன்னொரு ஆளும் வருவார். நம்ப பின்னாடி உக்காசுண்டு குடை பிடிச்சுண்டு அவர் வரணும் அதுதான் அவரோட டுயூட்டி. எனக்கு ஜோடியா என்னோட ஸ்கூல்ல படிச்ச ஒரு பையனை தேர்ந்தெடுத்துருந்தா. அவனை பத்தி கொஞ்சம் சொல்லியே ஆகனும். துபாய்ல ஸ்டோர் கீப்பரா வேலை பாத்துண்டு, லீவுக்காக ஊருக்கு வந்துருந்தான். பாக்கர்த்துக்கு ஆள் சும்மா ஆஜானுபாகுவா 6 அடி ஒசரத்துல கஜக்குட்டியாட்டமா இருப்பான். ஸ்டோர்ல க்ரேன் ரிப்பேர் ஆனா சாமானையெல்லாம் இவன் கையாலையே தூக்கி வச்சுடலாம். குடை புடிக்கரவந்தான் முதல்ல ஏறனும். இவன் ஏறினோன்னே யானை ஒரேடியா கீழ படுத்துர கூடாதே!னு எனக்கு கவலையா இருந்தது.

நல்ல வேளை யானை எப்பிடியோ அவனை தாங்கிடுத்து. அடுத்து இப்போ நான் ஏறனும். ஏறர்த்துக்கு முன்னாடி வண்டி கண்டிஷன்ல இருக்கா?னு செக் பண்ணிக்கர டிரைவர் மாதிரி நான் பாகன்ட போய், “யானைக்கு மம்மு அக்கம் எல்லாம் குடுத்தாச்சா? காத்தால நரசூஸ் காபி குடுச்சோனே யானை சுச்சா & கக்கா எல்லாம் போச்சா?”னு கேட்டேன். “சுச்சா & கக்கா எல்லாம் on the way-ல தான் யானை போகும்!”னு பாகன் சொன்னார். வெள்ளிக்கும்பத்தை பக்கத்துல இருந்த ஒரு மாமாட்ட குடுத்துட்டு, நான் ஏறர்த்துக்காக தூக்கி காமிச்சுண்டு இருந்த யானையோட வலது காலை தொட்டு மொதல்ல கண்ணுல ஒத்திண்டேன். ‘அப்பனே வினாயகா! நம்ப ரெண்டுபேருக்குள்ள ஆயிரம் அபிப்ராய பேதம் இருக்கலாம், ஆனா அதை எல்லாம் நாம பேசித்தான் தீர்த்துக்கனும், எக்காரணத்தை கொண்டும் வன்முறைல இறங்கக் கூடாது!’ அப்படின்னு யானை கிட்ட ஒரு டீலிங் பேசிட்டு, அப்பரம் ஒரு மாதிரி தம் கட்டி யானை மேல ஏறியாச்சு.



பட்டுப் பாவாடையில் ஒரு பட்டூ!!..:)

கஜாரோஹணம் ஒன்னும் அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கஜம் + ஆரோஹனம் = யானையேற்றம், “யானையோட உடம்பு அசைவுக்கு ஏத்தமாதிரியே நாமும் அசைஞ்சு குடுக்கனும். யானையோட கழுத்துல ரொம்ப நேரம் உக்காரக் கூடாது. கழுத்துப் பகுதில ரயில் தண்டவாளம் மாதிரி 2 எலும்பு உண்டு, அதுக்கு நடுலதான் கும்பத்தை வைக்கனும், வேற எடத்துல வெச்சா கவுந்துடும்!”நு என்னோட குருனாதர் சொன்னது எல்லாம் ஞாபகத்துல இருந்தது.

இருந்தாலும் ரொம்பவே பயமா இருந்தது. கரெக்டா யானை கிளம்பர்த்துக்கு முன்னாடி கோவில் தர்மகர்த்தா எங்கேந்தோ ஓடியே வந்தார். ‘பத்ரமா வாடா தக்குடு!’னு சொல்லபோறார்னு பார்த்தா, ‘வெள்ளிகுடம் பத்ரம்டா!’னு சொல்லி அவர் ‘தர்மகர்த்தா!’னு நிரூபிச்சுட்டுப் போனார்.

அதுக்கு அப்புறம் தான் காமெடியே ஆரம்பிச்சது...........(தொடரும்)

Tuesday, November 30, 2010

என் சடையப்ப வள்ளலே!!

என்னடா இது தக்குடு ஊர்ல இல்லாத அதிசயமா சீக்கரமே போஸ்ட் போட்ருக்கானே?னு எல்லாரும் ஆச்சர்யமா இருக்கா? பதிவை படிக்க படிக்க காரணம் புரியும்.

பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்(பண்ணினது கிடையாது, ஒருவேளை பண்ணினா)ஆத்துல நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. அப்பிடியே கண்டுண்டாலும் 'இந்த சின்னப்பயலோட கார்யத்தை பாத்தேளா"னு தான் கேட்டுப்பாளே தவிர உருப்படியா ஒன்னும் ஒப்பேறாது. உங்களுக்கு மூத்தது அண்ணாவா இருந்தா அது ஒரு மாதிரி, அக்காவா இருந்தா கதை வேற மாதிரி.

எனக்கு வந்து வாய்ச்சது அண்ணாங்கர விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் (ஆமா! ஆமா!னு வம்புக்கு சப்பு கொட்டிண்டு சுபா மேடம் சொல்லும் பதில் எனக்கு கேக்கர்து). அந்தப் பயலை பத்திதான் இந்த பதிவு.

உங்களுக்கு எல்லாம் பதிவர் அம்பியை (மூத்த பதிவர்!னு பீலா விட்டுண்டு அலையர்து தனி கதை) தான் தெரியும், தக்குடுவோட அண்ணாவை தெரியாது இல்லையா?
தந்திரம் பண்ணர்துல நம்பியார், சிரிக்கர்துல வீரப்பா, குசும்போட பேசர்துல அசோகன் ஆனா ஆத்துலையும் சரி வெளிலயும் சரி ஒரு எம்ஜிஆர் இமேஜ் இவனுக்கு (நம்ப கீதா பாட்டி அம்பத்தூர்ல அடிக்கர விசில் சத்தம் தோஹா வரைக்கும் கேக்கர்து). ஸ்கூல் படிக்கர காலத்துல சாயங்காலம் ஆத்துக்கு வந்தா வெளில விளையாடவே போக மாட்டான். அவனுக்கு கை,கால் & ட்ரெஸ்ல துளி அழுக்கு ஆகக் கூடாது, அதே மாதிரி எந்த காயமும் படாமா சக்கரகட்டியா உடம்பை பாத்துப்பான். கேரம்,செஸ்,சைனீஸ் சக்கர் இந்த மாதிரி உடம்புல படாத விளையாட்டா விளையாடுவான். எதுவும் இல்லைனா ஒரு புஸ்தகத்தை வெச்சுண்டு உக்காசுண்டுருவான்.


வாதாபி & வில்லாளன்...:)

தக்குடு அப்பிடி கிடையாது, ஸ்கூல் பையை வாசல இருந்தே ஆத்துக்குள்ள “சார் போஸ்ட்!” மாதிரி தூக்கி போட்டுட்டு 'ப்ளவுஸ்' சங்கரன்,’மாலாடு’ பாலாஜி,ரவிக்கு,ஹரிக்குட்டி,’மூஞ்சூர்’ மகேஷ்,’கிடுகிடு’கிரி,‘ரொட்டி சால்னா’ சேகர், கிச்சாகுட்டி,'சக்கப்பழம்' ஹரீஷ் இவாளோட விளையாட போயிடுவேன். நமக்கு எல்லாம் போட்டு இருக்கும் வெள்ளை கலர் ‘செளம்யா’ ப்ராண்ட் பனியன் மஞ்சக்கலர் ஆனா தான் ராத்திரி தூக்கமே வரும்.குறைஞ்சபட்சம் ஒரு ரத்தக் காயமாவது உடம்புல இருந்தா தான் சாப்பாட்ல கை வைக்கும் வீரப் பரம்பரை. தெரு தண்டர்துல எவ்ளோ பிசியா இருந்தாலும் சாப்பாடு டையத்துக்கு டாண்!னு வீட்ல ஆஜர் ஆயிடுவேன்.

நோகாமா நொங்கு திண்கர்துல எங்க அண்ணா மன்னன். தெரு முழுசும் இருக்கர எல்லா மாமிக்கும் தக்குடு செல்லப்பிள்ளைனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால நவராத்ரி சமயத்துல சுண்டல் கலெக்ஷன் ரொம்ப மும்மரமா நடக்கும். எங்க அண்ணா ஒரு ஆத்துக்கு கூட வரமாட்டான் ஆனா ஆத்துல இருந்த மேனிக்கே 50% சுண்டலை என்கிட்ட இருந்து தந்திரமா வாங்கி ஆட்டையபோடுவான். 'அலமேலு மாமியாத்துக்கு போனியா?' 'சுந்தரா மாமியாத்துக்கு போனியா?'னு ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி வக்கனையா என்கிட்ட கேப்பான். 'செல்லம்மா மாமியாத்துக்கு ரெண்டாம்தரம் போ ல, அவாளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், ஒன்னும் சொல்லமாட்டா!னு ரெண்டாம் தடவை வேர அனுப்பி வெப்பான். நான் இப்போ இருக்கர மாதிரியே அப்போவும் கள்ளம் கபடமே தெரியாது, பைத்தியம் மாதிரி போய் வாங்கிண்டு வந்து அவனுக்கும் குடுப்பேன். 8 - 12 கிளாஸ் வரைக்கும் அவன் (ரொட்டி சால்னாவுக்கு ஆசை பட்டு) NCC-ல எல்லாம் இருந்தான். லொங்கு! லொங்கு!னு 2 மணி நேரம் “பீச்சே மூட், ஆகேசலேகா ஆயேமூட்!”னு பரேட் பண்ணினா 2 ரொட்டி கிட்டும், அதுல பாதி ரொட்டி டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கு கொண்டு வருவான் (இல்லைனா நான் எதுலையும் பங்கு குடுக்கமாட்டேன்).

அந்தப் பய போட்ட பழைய ஸ்கூல் யூனிபார்ம் தான் எனக்கு வரும். அவன் துணியை எல்லாம் அழுக்காக்காம அப்பிடியே வெச்சுருந்து எனக்கு தள்ளி விட்டுடுவான். அவனுக்கு எப்போதும் புதுசு கிடைக்கும், பைத்தார தக்குடுவுக்கு எப்போதுமே பழைய ட்ராயர் தான். ‘உன்னோட சந்துல என்ன அருமாமனையா இருக்கு? தார்பாய்ல தான் உனக்கு ட்ராயர் தெய்க்கனும்!’ னு எங்க அம்மா என்னை சத்தம் போடுவா, ஏன்னா ஒரு ட்ராயர் போட்டு சரியா 2 மாசத்துல நமக்கு டிக்கில போஸ்ட் ஆபிஸ் ஓப்பன் ஆயிடும். ஆரம்பத்துல 15 பைசா போஸ்ட் கார்ட் சைஸ்ல இருக்கும் ஓட்டையை, ஒரே நாள்ல 10 ரூவா கவர் போஸ்ட் பண்ற சைஸுக்கு பெரிசாக்கி அடுத்த ட்ராயருக்கு அடி போடுவேன்.

நான் எட்டாம் கிளாஸ் படிச்சுண்டு இருந்த போது திடீர்னு ஒரு நாள் அவனுக்கு மதுரை காலேஜ்ல படிக்க இடம் கிடைச்சுருக்குனு சொல்லி மதுரை அனுப்பி வெச்சுட்டா, முதல்ல ஒன்னும் தெரியலை, அன்னிக்கி ராத்திரியே ஒரே அழுகையா வந்துடுத்து, நித்யம் அவனை 2 மிதியோ நாலு அடியோ குடுத்துட்டு அவன் மேல ஏறி படுத்துண்டாதான் எனக்கு தூக்கமே வரும் (வேற யாரையும் உதைக்கவும் முடியாது ஏன்னா, “கழுதை மிதியை கழுதைதான் தாங்க முடியும்!”னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா). அவன் இல்லைனவொடனே எதோ மாதிரி ஆயிடுத்து. 10 நாளைக்கு சாப்ட உக்காசுண்டா அவன் இல்லாட்டாலும் அவனோட சாப்படர தட்டையும் எனக்கு பக்கத்துல எடுத்து வெச்சுப்பேன், படுக்கையும் அதே மாதிரி தான். 'ஒளியும் ஒலியும்'ல தர்மத்தின் தலைவன் படத்துலேந்து 'தென்மதுரை வைகை நதி' பாட்டு வந்தா பயங்கர பீலிங் ஆகி கண்ணுல ஜலம் வந்துடும்.

எங்க அப்பா அம்மாவுக்கு அடுத்த படியா என் மேல அளவு கடந்த பாசம் வெச்சுருக்கும் ஒரு ஜந்து அவன் தான். குணமா/அனுசரனையா எல்லாம் அவனுக்கு பேச தெரியாது, எதாவது ரெண்டாம் தடவை கேட்டாளே சல்லு!புல்லு!னு எரிஞ்சு விழுவான். ப்ளாக்லதான் எதோ காமெடி பீஸ் மாதிரி வளைய வந்துண்டு இருக்கான். நான் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். "அவன் எப்பிடி இருந்தாலும் அவன் தான் உன்னோட அண்ணா!"னு அம்மா சொன்னதுதான் மனசுல இருக்கு. 'டேய் அண்ணா!'/பெரிய மாப்ள!னு எப்போதும் மரியாதையாதான் அவனை கூப்பிடுவேன்.

எள்ளு ஒன்னை எட்டா பங்கு வெச்சுடுவான், துட்டு விஷயத்துல ஆசான் பயங்கர உஷார்! ஆனா நான் படிப்பு முடிச்சு வேலை தேட ‘பூலோக சொர்க்கமான’ பெங்களூருக்கு போன போது 4 சட்டை பேன்ட்,ஒரு துண்டு, 2 மயில்கண் வேஷ்டி வித் அட்டாச்சுடு அங்கவஸ்த்ரம் (வித் அட்டாச்சுடு ப்ளவுஸ் மாதிரி),ஒரு கோபிகட்டி,பஞ்சபாத்ரம்(சந்தி பண்ண) மட்டும் தான் கொண்டு போனேன். மத்தது எல்லாம் "அண்ணா பற்று" தான்..:)



இப்போ எதுக்கு அண்ணா புராணம்?னு கேக்கர்து புரியர்து! டிசம்பர் 1 தான் எங்க அண்ணா பூலோகத்துல உதிச்ச நாள். நான் நிச்சயமா கம்பர் கிடையாது, ஆனா அவன் எனக்கு என்னிக்குமே சடையப்ப வள்ளல் தான்! காசா பணமா? கூகுளாண்டவர் குடுத்த ஓசி ப்ளாக்ல அவனை பத்தி நாலு வரி எழுதலாம்னு தோணித்து.சொல்லியாச்சு!

டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

Saturday, November 20, 2010

மூஞ்சி புஸ்தகம்

இதை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ!!! அட ராமா! இதுல எல்லாரும் படுத்தரபாட்டை பாத்தேள்னா தாங்கமுடியாது. அடுத்த வேளை சாப்பாடுக்கு வழி இருக்கோ இல்லையோ எல்லாருக்கும் மூஞ்சி புஸ்தகத்துல ஒரு பக்கம் இருக்கு. தத்துனூண்டுலேந்து ஆரம்பிச்சு தாத்தா பாட்டி வரை எல்லாரும் இதுல அடிக்கற லூட்டி இருக்கே! அம்ம்ம்ம்மாடி! 2004 -ல நாலு பொழப்பத்த வெள்ளைக்கார துரைகள் கண்டுபிடிச்ச இந்த நெட்வொர்க் இன்னிக்கி லோகத்துல இல்லாத இடமே இல்லை.




ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்த்துக்கு அவனவன் படும் அவஸ்தையை பாத்தா சிரிப்பு தான் வருது. நச்'னு ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்து ஒன்னும் நாயுடு ஹால்ல போய் கலர் எல்லாம் பாக்காம எலாஸ்டிக்கை மட்டும் இழுத்து பாத்து சாமான் வாங்கிண்டு வர்ர மாதிரி ஈசியான விஷயம் கிடையாது. அதுலையும் நாம போட்ட மெசேஜை பாத்துட்டு குறைஞ்சது ஒரு 10 பேராவது வந்து காறி துப்பிட்டு போனா தான் நம்ம மனசுக்கு திருப்தியா இருக்கு. கல்லிடைல அழகான பிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்ட மாதிரி வர வர இந்த ஸ்டேட்டஸ் மெசேஜுக்கும் கடுமையான பஞ்சம் வந்துடும் போலருக்கு. என்னோட தோஸ்த் ஒருத்தன் 3 இட்லி ஒரு வடை நு அவனோட முகப்புப்பக்கத்துல போட்டுருந்தான். என்ன்ன்னடா இது?னு வடிவேல் குரல்ல அவன்கிட்ட கேட்டா, காத்தால உடுப்பி ஹோட்டல்ல அவன் சாப்பிட்ட டிபனாம் அது. வித்தியாசமா இருக்கட்டுமேனு போட்டானாம். எப்பிடியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!..:) இந்த மாதிரி யோசிக்கத் தெரியாதவா எல்லாரும், பக்கத்தாத்து பாட்டி வழுக்கி விழுந்ததுலேந்து ஆரம்பிச்சி, எதிர்த்தாத்து மாட்டுக்கு பிரசவத்துல கன்னுகுட்டி பொறந்தது வரைக்கும் எல்லாத்தையும் போடறா!

காளை மாடு காசிக்கு போனாலும் கட்டி தான் உழுவாளாம், அதை மாதிரி இங்க வந்தும் இந்த கவிதை சொல்லறவாளோட தொல்லை தாங்க முடியாது. ஒரு வாரமா சிரைக்காத தாடியை பேனாவால வருடிண்டே வேப்பமரத்து உச்சிக் கிளையை வெறிச்சு பாத்துண்டே எழுதின கவிதைனு முதல் வரியை வாசிச்சோன்னே சொல்லிடலாம். எதோ சந்தோஷமான கவிதைனா கூட சகிச்சுக்கலாம், "என்னை ஏன்ன்ன் பிடிக்காதென்றாய்!"னு ஒப்பாரி வெக்கறவாளை பாத்தாளே, நம்ப கவுண்டமணி மாதிரி 'சத்ய சோதனை'னு சொல்லும்படியா ஆயிடும்.

தேங்காய் இல்லாமல் தேங்காய் சாதம் செய்வது எப்படி? எலுமிச்சை இல்லாமல் எலுமிச்சை சாதம் செய்வது எப்பிடி?னு சமையல் மாமிகள் சவுண்ட் இங்க(யும்) கொஞ்சம் ஜாஸ்தி. எலுமிச்சை இல்லாத சாதம்னா அப்போ அது மஞ்சப்பொடி சாதம் தான்!னு கமண்ட் போடலாம்னு கூட மனசுக்கு தோனும், இருந்தாலும் பத்தினி தெய்வங்களோட சாபத்துக்கு ஆளாக வேண்டாம்னு பேசாம இருந்துடுவேன். லோகம் பூராவே லெமன் சாதம் இப்பிடித்தான் இருக்கும் போலருக்கு!னு நினைச்சுண்டு இந்த மஞ்சப்பொடி சாதத்தை டப்பர்வேர்ல(Tupper ware) கட்டிண்டு போய் ஆபிஸ் மைக்ரோஓவன்ல சூடு பண்ணி சாப்பிடும் அவாத்து அப்பாவி ரங்கமணிகள் உண்மைலேயே கர்மவீரர்கள் தான்.

ராத்திரி முழுசும் தூங்காம கண் முழிச்சு யோசிச்சு ஒரு விஷயம் போட்டதுக்கு அப்புறம் எவனாவது ஒருத்தன் வந்து அழகா கமண்ட் போட்டுட்டு, அடுத்து வரக் கூடியவா எல்லாரும் அந்த கமண்டுக்கு 'லைக்'நு க்ளிக் பண்ணும் போது அந்த கடை மொதலாளியோட வயத்தெரிச்சலை பாக்கர்த்துக்கு கண் கோடி வேண்டும். ஒரு லெவல்ல வெறுத்துப் போய் அந்த மொதலாளி, “அவனோட கமெண்டுக்கெல்லாம் லைக் போடாதேடி!”னு சொல்லும் போது நம்மால சிரிப்பை அடக்க முடியாது.



பிக்காஸால அக்கவுண்ட் இல்லாதவா எல்லாரும் மூஞ்சி புஸ்தகத்தை அக்காஸா மாதிரி உபயோகப்படுத்திண்டு இருக்கா. அவாளோட நாத்தனார் கல்யாணத்துல நர்த்தனம் ஆடினதுலேந்து, புளியோதரை சாப்டுட்டு நயாகரால கை அலம்பின போட்டோ வரைக்கும் எல்லாத்தையும் இதுல போட்டுடுவா. US-ல இருக்கும் என்னோட ஒரு தோழி, தோழினு சொல்லர்தை விட உடன்பிறப்புனே சொல்லலாம். அவாளோட அக்காஸால சூரியகாந்தி பூ, ரோஜாப்பூ போட்டோ மட்டும் தான் இருக்கும். “ஆத்து மனுஷாளை வரிசையா நிக்க வெச்சு, ‘ஸ்மைல் ப்ளீஸ்!’னு ஜிப்பா போட்ட ஒரு போட்டோக்ராப்பர் மாமா சொல்லும் போது பாதி கண்ணை மூடிண்டு உங்காத்துக்காரா போஸ் குடுத்த போட்டோ ஒன்னு கூட இல்லையா உங்கிட்ட?”னு நான் மானம் கெட்ட கேள்வி கேட்டும் இன்னைய தேதி வரைக்கும் ஒரு போட்டோ போடலை அந்த அமுக்கு. இன்னோரு சமத்துக்குடம் அவனோட 2 வயசு போட்டோ ஒன்னை போட்டுட்டு, எப்பிடி இருக்கு? எப்பிடி இருக்கு?னு என்கிட்ட ஓயாம கேட்டுண்டே இருந்தான். “கழுதை குட்டியா இருக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாமே? அதை பத்தி நீ என்ன நினைக்கரை?”னு கேட்டதுக்கு அப்புறம் சத்தம் இல்லாம இருக்கான்.
உன்னோட தோழி அவளோட போட்டோவை பத்தி கமண்டி இருக்கா, பாக்க வா தக்குடு!னு என்னோட இன்பாக்ஸுக்கு FB-லேந்துஒரு மெயில் வந்தது. அங்க போய் க்ளிக் பண்ணினா ஒரு பெரிய்ய்ய்ய காண்டாமிருகம் போட்டோ வருது. அப்போ இதுதான் உன்னோட போட்டோவா?னு கேக்கனும் போல இருந்தது எனக்கு..:)

இவ்ளோ இம்சை இருந்தாலும் சில சமயம் நன்னாவும் இருக்கு. நமக்கு தெரிஞ்ச ரெண்டு பொம்ணாட்டிகள், “காலெஜ்ல நீ சைட் அடிச்ச பையனுக்கு கல்யாணமாம்டீ!” “தீபாவளிக்கு என்னடி பண்ணினை?” “நான் ஒன்னும் பண்ணலைடீ! போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் பக்கத்தாதுல எதிர்த்தாலுலேந்து வரும் ஓசி ஸ்வீட்டை வெச்சே ஓட்டலாம்னு இருக்கேன்டீ!” “அப்பிடியே உனக்கு வரர்தை இங்க கொஞ்சம் தள்ளி விடுடி!”னு அவாளுக்குள்ள மாத்தி மாத்தி பேசின விஷயம் எல்லாம் நோகாம படிக்கும் போது பலபேருக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. இருந்தாலும் தக்குடுவுக்கு பொதுவா ஊர்வம்பே பிடிக்காதுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால நான் இதெல்லாம் படிக்கவே மாட்டேன். அதுவும் போக எனக்கு இந்த ஸ்டேட்டஸ் மெசேஜ், தத்துவம் இதுலெல்லாம் ஞானம் கிடையாது.



குத்துவிளக்கின் கையில் அகல்விளக்கு...:)

(குறிப்பு - எல்லாருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்! அதிர்ஸம் பொரி எல்லாம் பக்கத்தாத்ல இருக்கும் தக்குடு மாதிரியான சின்னகுழந்தைகளுக்கும் குடுத்துட்டு நீங்களும் சாப்டுங்கோ!)

Friday, November 5, 2010

தீபாவளி ஸ்பெஷல்

கைல எண்ணைக் கிண்ணத்தோட துரத்தும் பாசமான அம்மா, கண்ணில் விழுந்த சியக்காய் பொடி, வெண்ணீர் அடுப்பில் எரிந்த சரட்டையின் 'ஸ்ஸ்ஸ்ஸ்' சத்தம், வெண்கலப்பானைலேந்து வெண்ணீரை எடுக்கும் போது எவர்சில்வர் சொம்பு பக்கவாட்டில் மோதி எழும் 'டைங்ங்ங்ங்' ஓசை, ‘எவர்கிங்’ ஸ்டிக்கர் கிழிக்காமல் போடுண்ட பட்டாபட்டி, இஞ்சி லேகியத்துக்கு முன்னாடி அம்மாவுக்கு தெரியாமல் கள்ளத்தனமாய் அவசரம் அவசரமா வாய்ல போடுண்ட பாதாம் ஹல்வா, அதுல பங்குக்கு வந்த பாசக்கார அண்ணா, பக்கத்தாத்து பொண்ணோட பட்டுப்பாவாடை வாசனை எல்லாமே ஞாபகத்துல அப்பிடியே இருக்கு.



வெள்ளிக் கிண்ணத்தில் ஜொலிக்கும் திரட்டிப்பால்..:)

நல்ல நாளும் அதுவுமா கூடப்பிறந்தவனை திட்டக் கூடாது, அதனால மரியாதைகுரிய என்னோட அண்ணா ஒரு மகாசோம்பேறி. 6 மணிக்கு மேல தான் தீபாவளி அன்னிக்கு எழுந்திருப்பான். தக்குடு 4 மணிலேந்தே குடைய ஆரம்பிச்சுடுவான். அப்பிடிக்கு ப்ரமாதமா பட்டாசு எல்லாம் ஒன்னும் கிடையாது. எங்க அம்மா வாங்கர 4 பட்டாசையும் 'துட்டை கரியாக்குவாளாடா'னு பக்கத்துலேந்து அஸ்து பாடி எங்க அண்ணா ஓய்ச்சு விட்டுடுவான். தக்குடு 2ஆம் கிளாஸ் படிக்கும் போது எங்க அம்மாவுக்கு கோ-ஆப்டெக்ஸ்ல பட்டுப் புடவை வாங்கிண்டு வந்தா, அதை பாத்துட்டு, ‘எனக்கு மட்டும் வெறும் ட்ராயர்தானா?’னு நான் ஒரே ஆர்ப்பாட்டம். வெறுத்து போன எங்க அப்பா ஒரு கட்டத்துல ‘உனக்கு கோ-ஆப்டெக்ஸ்ல டபுள் சைடு பார்டர் போட்ட பட்டுக் கோமணம் வாங்கி தரேன் கோந்தை, சட்டையை போட்டுண்டு வா, வாங்கிண்டு வரலாம்!’னு சொன்ன உடனே வேகமா சட்டையை போட்டுண்டு கிளம்பினதா இப்பையும் அம்மா சொல்லி சிரிப்பா.



நம்பாத்து வெண்கல விளக்கு...:)

எல்லாராத்துலையும் வெடி எல்லாம் நிறைய போடுவா. புது ட்ரெஸ் போட்ட நானும் என்னோட தோஸ்துகளும் எதோ சர்வே ஆபிசர் மாதிரி அவாத்து வாசல்ல இருக்கும் வெடிக் குப்பையை வெச்சு யாராத்துல நிறைய வெடி போட்டுருக்கானு சர்வே எடுப்போம். காலேஜ் கோஷ்டியா ஆனதுக்கு அப்புறம் சர்வே அஜெண்டாவை மாத்திட்டோம். வெளக்கி வச்ச வெண்கல விளக்கு மாதிரி இருந்தாலும் எங்க தெரு பிகர்களை எல்லாம் நாங்க திரும்பி கூட பாக்க மாட்டோம். அதுல சில பல சட்டசிக்கல்கள் உண்டு. பாவனா மாதிரி பளிச்னு இருக்கானு நம்ப பல்லை காட்டினா பின்னாடியே அவளோட அம்மா சொர்ணாக்கா மாமி முந்தானையை இழுத்து சொரிகிண்டு சண்டைக்கு வந்துடுவா, பேக்ரவுண்ட்ல 'ஐகிரி நந்தினி நந்திதமேதினி' போட்டா கன கச்சிதமா பொருந்தும். இதுல என்ன தமாசுன்னா சூப்பர் பிகரோட அம்மா சண்டைக்கு வரும் போது சுமார் பிகரோட அம்மாவும் மெதுவா சேர்ந்துக்கப் பார்ப்பா. இந்த மாதிரி ஒரு தடவை ஆன போது என்னோட தோஸ்த் ஒருத்தன், ‘மாமி! நீங்களும் சேர்ந்து சவுண்ட் குடுக்காதீங்கோ! உங்காத்து பொண்ணையெல்லாம் நீங்களே சைட் அடி!னு சொன்னாலும் நாங்க பார்க்கமாட்டோம்!’னு சொல்லிட்டு அந்த இடத்திலேயே நிக்காம சிட்டா பறந்துட்டான். அதனால பக்கத்து தெரு பிகரை பாத்தாத்தான் தலையவே நிமிர்த்துவோம்.



நெஞ்சை அள்ளும் நெல்லையின் அல்வா


செல்லம்மா மன்னியாத்துல அல்வா அற்புதமா இருக்கும். அவாத்து மாமா & மாமியார் ஆம்பூர் கோமு மாமியை சேர்த்து மொத்தம் 3 பேர். அவாத்துல தக்குடுவுக்கு சர்வ சுதந்திரப் பாத்யதை உண்டு. தீபாவளி அன்னிக்கி காத்தால 8 மணி வாக்கில் போனா மொதல்ல செல்லமா மன்னி ஒரு துண்டம் அல்வா (ஆமாம், துண்டம் துண்டமா இருக்கும் அவாத்து அல்வா) தருவா. கொஞ்ச நேரம் கழிச்சி அவாத்து மாமா இந்தாடா தக்குடு!னு சொல்லி அவர் அல்வாவை ஆட்டையை போடும் போது எனக்கும் ஒரு துண்டு தருவார். கொஞ்ச நேரத்துல கோமு மாமி வந்து இந்தாடா சப்பைமூக்கா!னு ஒரு துண்டு தருவா. அந்த சமயம் பாத்து செல்லம்மா மன்னி & அவாத்து மாமா வந்து சேர்ந்துடுவா. ஓஒ! நானும் குடுத்தேனே! நானும் குடுத்தேனே!னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லிண்டு, கள்ளப் பயலே! மூச்சே விடலையேடா நீ!னு சிரிச்சுண்டே என்னை அதட்டுவா. நான் ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுண்டு மெதுவா இடத்தை காலி பண்ணிடுவேன். காலேஜ் பையன் ஆனதுக்கு அப்புறமும் கூட அவாத்து அல்வாவை நான் மிஸ் பண்ணினதே கிடையாது. ‘ஆம்பூர்’ கோமு மாமி உம்மாச்சி கிட்ட போய் சேர்ந்த அன்னிக்கு அவாத்து ரேளில போய், 'கோமு மாமி! இனிமே எனக்கு யாரு அல்வா பண்ணித் தருவா!'னு கண்ணீர் விட்டு கதறி அழுதேன்..:(

ஒரு தீபாவளி அன்னிக்கி காத்தால என்னோட தோஸ்த் 'ப்ளவுஸ்' சங்கரன்(பெயர் காரணம் தனிப் பதிவில்) பத்த வெச்ச ராக்கெட், பாட்டில் கவுந்து வாசல்ல கோலம் போட்டுண்டு இருந்த ஸ்டைல்’ மீனா மாமியோட பொண்ணை துரத்தி துரத்தி எடுத்துடுத்து. அடுத்த பத்து நிமிஷத்துக்கு தெரு புல்லா ‘ஸ்டைல்’ மீனா மாமியும் ‘ப்ளவுஸ்’ சங்கரனும் ஆக்ரோஷமா ‘தொட்டுப்புடிச்சு’ விளையாண்ட காட்சி கண்ணுலையே நிக்குது. கடைசி வரைக்கும் ‘ப்ளவுஸ்’ சங்கரன் அவுட்டே ஆகலை என்பது தான் அதுல ஹைலைட்டான விஷயம்...:)



தக்குடுவின் இதயராணி பப்பு...:)(பட்டுப்பாவாடையில் என்னோட பப்பு)

தக்குடுவை உங்காத்து புள்ளையாட்டமா நினைச்சு பாச மழை பொழியும் எல்லா அன்பு இதயங்களுக்கும் தக்குடுவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள்ல நம்ப எல்லாருக்கும் நல்ல எண்ணங்களையும், விசாலமான மனசையும், நிஷ்கபடமான பக்தியையும், திருப்தியான வாழ்க்கையையும் உம்மாச்சி நமக்கு அனுக்ரஹம் பண்ணனும்னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.

Thursday, October 28, 2010

தீபாவளி சில்க்

மைசூர் சில்க் தெரியும் காட்டன் சில்க் தெரியும் அது என்ன தீபாவளி சில்க்?னு நெத்தியை சுருக்கிண்டு படிக்க வந்தவாதான் நீங்கனு எனக்குத் தெரியும்...:) சின்ன வயசுலேந்தே தக்குடுவோட தீபாவளி ட்ரெஸ்ஸை தக்குடுவோட அம்மாதான் செலக்ட் பண்ணுவா. என்னோட அம்மா என்ன எடுத்துண்டு வராளோ அதை அப்பிடியே போட்டுப்பேன். அம்மாவுக்கு அந்த ட்ரெஸ் பிடிச்சுருக்கு, அதை விட வேற என்னவேனும் அப்பிடிங்கர்து என்னோட எண்ணம்.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி, “எல்லாராத்துலையும் அந்த குழந்தேள்தான் அவாளுக்கு வெணும்கர ட்ரெஸ்ஸை பாத்து எடுத்துக்கர்து, நம்பாத்துல மட்டும் தான் தலைகீழா இருக்கு!”னு எங்க அம்மா ஒரே பொலம்பல். சொல்லி வெச்ச மாதிரி என்னோட நண்பன் ஒருத்தன் ப்ருகஸ்பதி மாதிரி வந்து சேர்ந்தான். நல்லதா ஒரு பாண்டும் சட்டையும் எடுக்கனும் தக்குடு! நீ வந்து எனக்கு செலக்ட் பண்ணி குடேன்!னு ராகம் போட்டான். எங்க அம்மாவுக்கு கூட கொஞ்சம் கோவம் வந்துருத்து, "தனக்கு ஒரு சட்டை எடுத்துக்க தெரியாத இந்த கோமாளி ஊர்ல இருக்கரவா எல்லாருக்கும் சேவகம் பண்ணீண்டு அலையர்து"னு சொல்லிட்டு, இந்த தடவை நீ தான் உன்னோட ட்ரெஸ்ஸை எடுத்துக்கனும்!னு கண்டிப்பா சொல்லிட்டா. பனியன் பட்டாபட்டி மாதிரியான பெரிய உடை வகையெல்லாம் கல்லிடைலயே கிட்டும், அம்பைல என்னோட பனியன் சைஸ் கிடையாது, அவன்ட்ட இருக்கற சைஸ் பனியன் போடுண்டா அது பொம்ணாட்டிகளோட ஷிம்மி மாதிரி இருக்கும். அதனால சட்டை பாண்ட் மட்டும் எடுக்கர்த்துக்கு அம்பைக்கு கிளம்பி போயாச்சு.

கடைக்கு போன கொஞ்ச நேரத்துலேயே என்னோட நண்பனுக்கு செலக்ட் பண்ணிட்டேன். இது போக அங்க ட்ரெஸ் எடுக்க வந்துருந்தா ஆம்பூர் பிகர்கள் ரெண்டு பேருக்கு ‘நச்ச்’னு ஒரு சல்வார் டிசைனும் சைகைலயே செலக்ட் பண்ணி குடுத்தாச்சு (இதெல்லாம் ஒரு பப்ளிக் சர்வீஸ் மாதிரி). நாங்க ஜவுளி வாங்கிட்டு திரும்பினா ஒரு சுமாரான பிகர் கைல ஒரு மைக்கை வெச்சுண்டு அங்க வந்தவா எல்லார்டையும் எதோ கேட்டுண்டு இருந்தது.

அந்த காலகட்டத்துல தான் நெல்லை மாவட்டத்துல சூரியன் FM ரேடியோ பிரபலம் ஆக ஆரம்பிச்சி இருந்தது. நம்பள்ட போன்ல எல்லாம் கேட்டுட்டு நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு போடுவா. எங்க தெருல ஒரு மாமாட்ட இதை மாதிரி பேட்டி எல்லாம் எடுத்துட்டு “என்ன பாட்டு வேணும்!”னு கேட்டதுக்கு அந்த மாமா மல மல மருதமலே! பாட்டு போடுங்கோ!னு நம்ப RVS அண்ணா மாதிரி ஜொள்ளினார். அவா மும்தாஜோட மருதமலை பாட்டு போடர்த்துக்கு பதிலா மதுரை சோமு அவர்கள் பாடின “மருதமலை மாமணியே முருகையா!”வை போட்டுட்டா. அதுக்கப்பரம் அந்த மாமாவை தெருல எங்க பாத்தாலும் பசங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரஸ்ஸா 'அழகிய சந்தனம்! அழகிய குங்குமம்! டிண்டக்கு டிக்டக்கு டிண்டக்கு டிக்டக்கு"னு மியூசிக்கோட பாட ஆரம்பிச்சிடுவோம்.

அதை மாதிரி இந்த பொண்ணும் சூரியன் FM போலருக்குனு நெனச்சுண்டு எங்க கிட்ட வந்தவுடனே பேச ஆரம்பிச்சோம், கூட ஒரு வீடியோ காமிராகாரர் வேற இருந்தார், எனக்கு அப்பவே கொஞ்சம் சந்தேகம், ரேடியோவுக்கு எதுக்கு காமிரானு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் அந்த பிகர், எத்தனை வருஷமா இந்த கடைக்கு வந்துண்டு இருக்கீங்க சார்?னு ஆரம்பிச்சா, எனக்கு முதல்லேந்தே நக்கல் நையாண்டி கொஞ்சம் உண்டு, 4 - 5 வருஷமாவே வரணும்னு ஆசைதான் ஆனா இந்த கடை ஆரம்பிச்சே ஒரு வருஷம் தான் ஆகர்தால இதுதான் முதல் தடவை!னு பதில் சொன்னேன். ஓக்கே சார்! உங்களுக்கு எந்த பாட்டு போடனும்?னு கேட்டா. இது வரைக்கும் பேசாம இருந்த என்னோட நண்பன் படக்குனு ‘ரெட்’ படத்துலேந்து கண்ணை பறிக்கும் சூரியனோ ரெட்! போடுங்கோ!னு சொன்னான்.




அவன் ஒரு அஜீத் ரசிகன், ரெட் படம் வந்து 3 மாசத்துக்கு யாரு என்ன சொன்னாலும் ஏ அது! ஏ அது!னு சொல்லிண்டு இருந்தான், மேலும் வலது கையை மடக்கி மசக்கையா இருக்கர பொம்ணாட்டிகள் மாதிரி இடுப்புலையே வச்சுண்டு இருந்தான். ஒரு தடவை வடக்குமாடத் தெரு பொண்ணு வத்சலாவை பாத்து “ஒல்லிக்குச்சி உடம்புக்காரி”னு பாடிண்டு இருக்கும் போது அந்த பொண்ணோட அம்மா “ஜம்போ ஜானகி மாமி” திடீர்னு அங்க வந்து தலையில் அடிச்சே இவனை சாய்ச்சுபுட்டா. யாராவது போட்டோ வீடியோ எடுக்கரானு தெரிஞ்சா போதும், ‘ஒரு நிமிஷம் மாமா!’னு சொல்லிட்டு வேகமா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டு, ‘போட்டோ எடுக்கரா இல்லையா அதான் நல்ல செண்ட் அடிச்சுண்டு வந்தேன்!’னு சொல்லக்கூடிய புத்திசாலிப்பய(தக்குடுவோட நண்பன் பின்ன எப்பிடி இருப்பான்?னு கேக்கக்கூடாது)

எனக்கு “நீங்கள் கேட்டவை” படத்துலேந்து “அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” பாட்டு வேணும்னு கேட்டேன். எதாவது ஒன்னு சொல்லுங்க!னு அந்த பிகர் சொல்லிடுத்து. அஜித் ரசிகனை ஒரு மாதிரி சாந்தப்படுத்தி என்னோட பாட்டே போடுங்கோ!னு சொல்லிட்டேன்.

அடுத்த நாள் தெருல நடந்து போனா எல்லாரும் தக்குடு கலக்கிட்டை! தக்குடு ஜமாய்ச்சுட்டை! பாட்டு செம சூப்பர்!னு கமண்ட் அடிச்சா. விசாரிச்சதுல அந்த பேட்டி வந்தது ரேடியோ இல்லை எதோ மயில்/குயில் நு ஒரு லோக்கல் TV சேனல்லையாம். அன்னிக்கினு பாத்து எல்லா மாமா மாமிகளும் அந்த சேனலை பாத்துண்டு இருந்துருக்கா. இந்த பாட்டு நிகழ்ச்சிக்கு அப்பரம் தான் எங்க ஊர் மாமிகள் சுந்தரபாண்டியபுரம் பெருமாள் கோவில்ல ஊஞ்சல் உத்சவத்துக்கு பாடின நிகழ்ச்சி வரப்போகர்துன்னு எந்த மாமியோ கிளப்பிவிட்டதுல தக்குடு மாட்டிண்டான். ஒரு மாமா ஒரு படி மேல போய் “தக்குடு நீயும் சிலுக்கு ரசிகனா?”னு புரளியை கிளப்பிட்டார். அடுத்த தடவை “நேத்து ராத்திரி யம்ம்ம்ம்மா" கேளு!னு அட்வைஸ் வேற பண்ணினார். அவர் சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த(அடியே! மனம் நில்லுனா நிக்காதடி!” ) பாட்டுல சிலுக்கு ஆடுவாங்கர விஷயமே தக்குடுவுக்கு தெரியும் ( பாஸ்டன் நாட்டாமை ப்ளாக் மேல சத்தியமா!).

அந்த பாட்டுல மேளம் வாசிப்பு நன்னா இருக்கும், நான் அதுக்குத்தான் கேட்டேன். ஆனா எல்லா பயலும் கலாய்ச்சுட்டான்.

இது நடந்து 3 வாரம் கழிச்சி ஒரு நாள் காத்தால பக்கத்தத்து மாமி அவசரமா வந்து “தக்குடு! சீக்கரம் வாடா கோந்தை!”னு நக்கல் சிரிப்போட கூப்பிடா. அவாத்து மாமாவை நெட்டுவாக்காளி கொட்டிர்த்து போலருக்கு அதான் மாமி சந்தோஷமா சிரிச்சுண்டே வரானு நினைச்சுண்டே அவாத்துக்கு போனா அங்க அவாத்து மாமா டிவில டான்ஸ் மாஸ்டர் ‘புலியூர்’ சரோஜாவோட பேட்டியை ஆர்வமா கேட்டுண்டு இருந்தார். என்னவோ நானும் அவரும் ஒரு செட்டு மாதிரி அவர் பக்கத்துல உக்காச்சுக்க சொன்னார். ஒரு சந்தர்பத்துல சிலுக்குக்கு நடனம் சொல்லி குடுத்த அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சா அந்த மாஸ்டர். சிலுக்கு பேரை கேட்டவுடனே அந்த மாமா அல்மோஸ்ட் டிவிக்கு உள்ளையே போய்ட்டார். “சிலுக்குக்கு டான்ஸ் சொல்லிகுடுக்கர்து ரொம்ப கஷ்டம், அவளோட இடுப்பு வளையவே வளையாது!”னு ஆவலாதி சொல்லிண்டு இருந்தா. “சிலுக்கோட இடுப்பு வளைஞ்சா என்ன? வளையாட்டி என்ன? பாதி கண்ணை மூடிண்டு ஒரு பார்வை பாப்பா பாரு!! அடா! அடா! அடா! அதுக்கே ஊர்க்காடுல இருக்கர எல்லா வயலையும் அவபேருக்கு எழுதி வைக்கலாம்”னு மாமா பெரிய வர்ணனையே பண்ண ஆரம்பிச்சுட்டார். அவாத்து மாமி "கஷ்ட காலம்"னு தலைல அடிச்சுண்டு போனா. “எல்லாம் சரி இதுக்கு எதுக்கு என்னை கூட்டிண்டு வந்தேள்?”னு நான் என்னோட பால் வடியும் முகத்தோட பாவமா கேட்டேன். “என்னடா இப்படி சொல்லிட்டை! நம்ப தெருலையே எனக்கு அப்புறம் சிலுக்கு பத்தி நல்ல விஷயம் தெரிஞ்சவன் நீ தானே அதான் கூட்டிண்டு வர சொன்னேன்!”னு ஒரு குண்டை தூக்கி போட்டார்.

இதுதான் “தீபாவளி சில்க்” கதை, தக்குடு இன்னும் எதாவது சொல்லுவானா?னு நம்ப TechOps மாமி மாதிரி ஆர்வமா எதிர்பாத்துண்டு இருக்காம போய் தீபாவளிக்கு ஜவுளி எடுக்கர வேலையை பாருங்கோ எல்லாரும்!...:)

குறிப்பு - யாரெல்லாம் கமண்ட் போடாம இந்த போஸ்ட்டை படிக்கராளோ அவாளுக்கு எல்லாம் இந்த தீபாவளி சிலுக்கு கதை படிச்ச புண்ணியம் முழுசா கிடைக்காது!!...:)

Thursday, October 21, 2010

சமையல் மகாராணிகள்

டிஸ்கி - இந்த பதிவு வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

பதிவை படித்து விட்டு, 'டாய்ய்ய் தக்குடு!'னு தெலுங்கு பட வில்லன் மாதிரி சவுண்டுடன் யாரும் ஆட்டோ/சுமோ அனுப்ப வேண்டாம்...:)(ஏன்னா தக்குடு சைஸுக்கு சைக்கிளே ரொம்ப ஜாஸ்தி).

தக்குடுவுக்கு சங்கீதமும் சமையலும் ரொம்ப பிடித்தம் உண்டுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால ஆரம்ப காலத்துலேந்தே சமையல் ப்ளாக் நான் ஜாஸ்தி படிக்கர்து உண்டு. சமையல் விஷயத்தோட சேர்ந்து பயங்கர காமெடியாவும் அந்த ப்ளாக்குகள் இருக்கும். அதுல இருக்கும் சில சுவாரசியமான விஷயங்களே இந்த பதிவின் சாரம்.

பெரும்பாலான சமையல் பதிவர்கள் இங்கிலிபீஸ்ல தான் எழுதுவா. ஒரு பெரிய கூட்டமே இருக்கு, இந்த கூட்டம் வேற எந்த ப்ளாக்குக்கும் போகாது, அவாளுக்குள்ளையே தான் மாத்தி மாத்தி mouthwatering,eyes watering,tempting,very nice,- னு கமண்ட் போட்டுப்பா. ஒரு சில நகைச்சுவை பதிவுக்கு மட்டும் ‘போனா போகர்து பொழச்சு போ!’னு கமண்ட் போடுவா. மத்தபடி சமையல் சாராத ஒரு பதிவர் இவாள்டேந்து கமண்ட் வாங்கர்து பிரம்ம பிரயத்தனம் தான். எந்திரன் பட ரிலீஸ் அன்னிக்கி கூட ‘நேந்திரம்பழ கட்லட் செய்வது எப்பிடி?’னு கருமமே கண்ணாக பதிவு போட்டு நம்மை புல்லரிக்க வெச்சுடுவார்கள்.

உன்னை மைனா! என்று தானே அழைத்தேன் நீ

ஏன் உன்னுடைய நைனாவை அழைத்தாய்!


இந்த ரேஞ்சுக்கு கவிதை எழுதி கழுத்தை அறுக்கும் மொக்கை மன்னர்கள் பதிவுக்கு எல்லாம் மறந்து கூட எட்டிபாக்க மாட்டா. இதை எல்லாம் மீறி சமையல் சாராத ஒரு பதிவுக்கு இவாளோட ஆதரவு இருந்ததுன்னா அந்த பதிவர் உண்மைலேயே அதிஷ்டக்காரர்தான். இங்கிலிபீஸ்ல எழுதர்துனால தெற்கு,வடக்கு,கிழக்கு,மேற்கு பாகுபாடு எல்லாம் இதுல இருக்காது. மாட்டிண்டு முழிக்கர்து அவாளோட ரங்கமணி தான். மதுரைக்கார பதிவரோட பதிவை பாத்துட்டு பஞ்சாப் பதிவர் வீட்டுல சிங்கம் மாதிரி இருக்கும் சிங்குகள் இப்போ குழிப்பணியாரம் சாப்டுண்டு இருக்கா! நம்ப ஊர் ராமசாமி/சுப்ரமணியன்கள் எல்லாம் 3 வேளையும் ஆலு பரோட்டா சாப்டுண்டு இருக்கா.

இவா எல்லாரோட ப்ளாக்கோட பெயருமே எதோ 'பாரதவிலாஸ், சந்திரவிலாஸ்' நு ஹோட்டலுக்கு பேர் வெச்ச மாதிரி இவாளோட பேர் மொதல்ல இருக்கும் பின்னாடி ‘கிச்சன்!’னு ஒரு ஸ்பெஷல் பிட்டிங் இருக்கும். இதுல இன்னும் சில பேர் அவாளோட அப்பாவி ஆத்துக்காரர் பேரையும் சேர்த்து போட்டுண்டு எதோ “மணாளனே மங்கையின் பாக்கியம்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுப்பா. வரிசையா 4 பேரோட லிங்க் குடுக்கனும்னு கை துறுதுறுனு வருது, ஆனா இதுக்கே தக்குடுவுக்கு தர்ம அடி உறுதி! லிங்க் எல்லாம் குடுத்தா தக்குடுவோட 'அர்னால்ட்' பாடி ஆட்டம் கண்டுபோகும் அதான் பேசாம இருக்கேன்.

எனக்கு தெரிஞ்ச ஒரு சிங்கப்பூர் பதிவரோட ரங்கமணி கிட்ட "ப்ளாக்(Blog) பத்தி என்ன நினைக்கறேள்?"னு கேட்டதுக்கு, “இந்த நூற்றாண்டோட மிகச்சிறந்த ஒரு கண்டுபிடிப்பே ப்ளாக் தான், கல்யாணம் ஆன புதுசுல இட்லிக்கு மொளகா பொடி கேட்டாலே 'திருதிரு'னு முழிப்பா உங்கொக்கா, இப்போ இட்லிக்கு தொட்டுக்க ராஜம்மா(raajmaa) பண்ணலாமா இல்லைனா கண்ணம்மா பண்ணலாமா?னு யோசிக்கர அளவுக்கு பெரியாள் ஆயிட்டானா அதுக்கு இந்த ப்ளாக் தான் காரணம்!”னு சொன்னார். இந்த சிங்கப்பூர் அக்கா எதோ தியான வகுப்பு மாதிரி ரொம்ப அமைதியா ப்ளாக்கை நடத்திண்டு இருந்தா, அங்க போய் சீரியஸ் கூட்டத்துல சிலுக்கு டான்ஸ் ஆடின மாதிரி ஆடிட்டு வந்துடுவேன். இவாளோட ப்ளாக்ல கமண்ட்ஸ் எல்லாம் எப்பிடி இருக்கும்னு நான் சொல்லமறந்துட்டேன்.

"இத்தனை நாளா சாம்பாரை சின்ன பர்னர்லதான் பண்ணிண்டு இருந்தேன், பெரிய பர்னரை சின்னதா வெச்சும் பண்ணலாம்ங்கர்து புதிய தகவல், நிச்சயமா ட்ரை பண்ணிட்டு சொல்லரேன்"

"அந்த பாசிப்பருப்பு டால் வெச்சுருக்கும் வாளி ரொம்ப நன்னா இருக்கு! எங்க வாங்கினை? அக்காவோட பதில் - லூசுதான் கடைலேந்து எல்லாம் வாங்கும், என்னோட தோழி வீட்ல இருந்தது, நைசா லவட்டிண்டு வந்துட்டேன்."

என்னோட பெங்களூர் தோஸ்த் ஒருத்தி கல்யாணம் ஆகி துபாய்க்கு வந்த புதுசுல சமையலே தெரியாம முழிச்சா, “ஒங்க தோஸ்துக்கு மாங்கல்யம் கட்டினதுக்கு 1 வாரமா மாகி(Maagi) போட்டே என்னை பழி வாங்கிண்டு இருக்கா!”னு அவளோட ஆத்துக்காரர் என்கிட்ட ஒரே பொலம்பல். பால் காய்ச்சுவது எப்படி?னு ஆரம்பிச்சு பாஸந்தி செய்வது எப்படி வரைக்கும் அழகா சொல்லி இருப்பா, கவலையே படாதே!னு சொல்லி அவளுக்கு இந்த கோஷ்டியோட லிங்கை அனுப்பி வெச்சேன். இப்போ சாயங்காலம் டீ குடிக்கர்த்துக்கே முந்திரி பக்கோடா செய்யற அளவுக்கு பெரிய சமையல் ரவுடி ஆயிட்டா அந்த பெங்களூர் ரவுடி!..:) அவளோட ரங்கமணிதான் பாவம், 'டெஸ்டிங் லேப்'ல மாட்டிண்ட எலி மாதிரி ஆயிட்டார்.


இன்னோரு சிங்கப்பூர் பதிவரோட பேரே பயங்கர காமெடியா இருக்கும், ஆனா நான் கேட்டதுக்கு அந்தம்மா அந்த பேரை ஒரு ‘டெரெர்’ எபக்டுக்காக வெச்சுருக்கேன்!னு சொல்லி காமெடி பண்ணினா. படம் காட்டர்துல இவாளை மிஞ்ச யாராலையும் முடியாது, கேஸ் அடுப்பை பத்த வைகர்துலேந்து கருவேப்பிலை தூவர்து வரைக்கும் தெளிவா படம் போடுவார்கள். சமீபத்துல வாசிச்ச 2 பதிவுல தேங்குழல்ல இருந்த ஜீரகம், ரிப்பன் பக்கோடால இருந்த கடுகு இதெல்லாம் கூட தெளிவா இருந்தது, பி.சி.ஸ்ரீராம் தோத்துப் போவார். "இந்த டம்பளர் சரவணாபவன் ஹோட்டலில் திருடப்பட்டது"னு எழுதி இருக்கற மாதிரி இவாளோட எல்லா பதார்த்த போட்டோலையும் இவாளோட பேரும் இருக்கும். அப்பிடியும் 'விடாகொண்டன் கொடாகொண்டன்' கதை மாதிரி சில நாளேடுகள் இவாளோட ப்ளாக் போட்டோவை இவாளுக்கு தெரியாம ஆட்டையை போட்டுடராங்க.


தக்குடு ப்ளாக் தொடங்கின புதுசுல என்னோட நலவிரும்பிகள் சிலபல யோசனைகள் எல்லாம் எனக்கு குடுத்துண்டு இருந்தா. அதுல பிரதானமான யோசனை தக்குடு ப்ளாக்கை எதாவது ஒரு திரட்டில இணைக்கர்து. எனக்கு திரட்டினா என்னன்னே தெரியாது முதல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரே திரட்டி எனக்கு பிடிச்ச திரட்டி பால் மட்டும் தான். அப்புறம் அவா சொன்னது கொஞ்சம் புரிஞ்சு அந்த திரட்டில போய் பார்த்தேன். ‘அட ராமா!’னு ஆயிடுத்து எனக்கு. ஒருத்தருக்கொருத்தர் ஒரே பழி சண்டை அதுல, அக்கா,ஆத்தா!னு திட்டி திட்டி பதிவு போட்டுக்கரா. பிரபல பதிவர் அது! இது!னு ஈகோ பிரச்சனை வேற இதுல. இதுக்கு நடுல பெண்ணியம்,ஆணியம்,வெங்காயம்,பெருங்காயம்னு ஒரு குரூப் மைக் புடிச்சு சவுண்ட் விட்டுண்டு இருக்கு.

இதெல்லாம் விட பெரிய காமெடி, ப்ளஸ் ஓட்டு! மைனஸ் வோட்டு!னு ஒரு குரூப் வோட்டை எண்ணிண்டு இருக்கர்தையே பொழப்பா வெச்சுண்டு இருந்தது. ஆத்தாடி! இந்த பொழப்புக்கு பதிலா தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டில சேர்ந்து தலைவர் ஆயிடலாம்னு (அங்க எல்லாருமே தலைவர் தானாமே?) முடிவு பண்ணிட்டேன் (நம்ப வேட்டியை மட்டும் ஜாக்ரதையா பாத்துக்கனும்..:)) தக்குடுவோட களம் நகைச்சுவை & குழந்தை தனமான ஆன்மிகம். அதனால எந்த திரட்டிலையும் சேரவேண்டாம்னு தீர்மானம் பண்ணினேன். ஆளே இல்லாத ஊருக்கு டீ ஆத்தினாலும் பரவாயில்லை வியாபாரத்தை கொண்டு போயிடலாம்னு முடிவு பண்ணினேன். ஆனா கடவுளோட அருளால நல்ல மனுஷா கொஞ்சம் பேர் இந்த கடை பக்கம் வந்து போயிண்டு இருக்கா. அதுலையும் ரொம்ம்ம்ப நல்ல மனுஷா எல்லாம் கமண்டும் போட்டுண்டு இருக்கா!!(ஸப்ப்ப்ப்ப்ப்பா! ஒரு கமண்ட் வாங்கர்துக்கு நம்ப இட்லி மாமி மாதிரி எவ்ளோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணவேண்டி இருக்கு!)...:)

Saturday, October 16, 2010

நவராத்திரி வாழ்த்துக்கள்





Note - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்ல இந்த மாசத்துக்கான முருகர் உம்மாச்சி பதிவு போட்டாச்சு! உம்மாச்சி ஸ்லோகம் படிக்கர்துக்கு எல்லாரும் வாங்கோ!னு தக்குடு கோந்தை உங்க எல்லாரையும் அன்புடன் வரவேற்கிறது!.....:)

Friday, October 8, 2010

உம்மாச்சி படம்

எங்க ஊர்ல உலகத்தரத்துடன் கூடிய 1 டெண்டு கொட்டாய் உண்டு. லைட்டிங் எபக்டுக்காக சாயங்காலம் மட்டும் தான் படம் போடுவா(ஆமா, மூனு பக்கமும் சுவர் இல்லைனா சாயங்காலம்தானே படம் போட முடியும்). முதலாளியோட வேட்டியைதான் திரையா கட்டி இருப்பாங்க. பூர்ணம் விஸ்வனாதன் பேசினார்னா பிரகாஷ்ராஜ் குரல் கேட்கர அளவுக்கு ஒரு DTS சிஸ்டம்னா பாதுக்கோங்கோ! இது தவிர மூனு பக்கம் சுவரோட ஒரு தியேட்டரும் உண்டு. ஆனா அது ரொம்ப தூரம் தள்ளி இருக்கும், அதனால டெண்ட் கொட்டாய்ல தான் அதிகமான படங்கள் பாத்தது. டெண்ட் கொட்டாய்லயும் மூனு விதமான சிட்டிங் உண்டு. பொம்ணாட்டிகள் & கொழந்தேள் மட்டும் உக்காசுக்கர மாதிரி தரை டிக்கெட்( நல்ல ஆத்தங்கரை மண்), அடுத்து பெஞ்சு டிக்கெட்டு ஆம்பளேள் மட்டும், அதுக்கு அடுத்து ஸ்டீல் சேர் அதுதான் உள்ளதுலேயே ஒசத்தி. எல்லாத்துக்கும் நடுல 1 ரூபாய் வித்தியாசம் இருக்கும்.


எனக்கு எங்க அண்ணனுக்கு எல்லாம் எப்போதுமே தரை டிக்கெட்டுதான்(இப்பவும் நாங்க தரைடிக்கெட்டுதான்). பெஞ்சுக்கும் தரைக்கும் நடுல ஒரு 4 ஆடி குறுக்குச் சுவர்தான் இருக்கும். படம் ஆரம்பிச்ச உடனே ட்யூப் லைட் எல்லாத்தையும் அணைச்சுடுவா, நானும் எங்க அண்ணனும் மெதுவா நகர்ந்து வந்து சுவரை தாண்டி குதிச்சு பெஞ்சுக்கு போய் எங்க அப்பா கூட உக்காசுண்டுருவோம். நான் சில சமயம் அம்மா மடில தலையை வெச்சுண்டு, பக்கத்தாத்து பொண்ணோட மடில ஹாயா காலை நீட்டிண்டு படுத்துண்டே படம் பாக்கலாம்னு ஆசை பட்டுண்டு எங்க அம்மா கூடயே இருந்துடுவேன், ஆனா அப்பெல்லாம் எங்க அண்ணாவுக்கு பொம்ணாட்டிகளை கண்டாலே பிடிக்காது (திரட்டிப்பால் மேல சத்தியம்! நம்புங்கப்பா). அதுக்கு அவன் சொன்ன காரணம் அதை விட சூப்பரா இருக்கும் (சபைல வேண்டாம், தனியா கடுதாசி போட்டு ஜாரிச்சுக்கோங்கோ ப்ளீஸ்!). அதனால லைட்டை அணைச்ச உடனே அவன் தாவிக் குதிச்சுடுவான்.


தக்குடு மொத்தமே 3 அடி உசரம்தான் அப்போ இருப்பான், ஒரு தடவை தடுப்புச் சுவரை தாண்டர்துக்கு எக்கி ஏறும் போது டவுசர் 'டர்ர்ர்ர்ர்'னு முழு தையலும் கிழிஞ்சுடுத்து. அது கொஞ்ஜம் டைட்டான டவுசர். முழுசா கிழிஞ்சதுல நான் போட்டுண்டு இருந்த டவுசர் சானியா மிர்ஸாவின் குட்டைபாவாடை மாதிரி ஆயிடுத்து. ஆனா நல்ல காத்தோட்டமா இருந்தது. குட்டைப் பாவாடை எல்லாம் சானியாவுக்குத்தான் நன்னா இருக்கும், தக்குடு போட்டா எல்லாரும் சிரிக்கனா செய்வா! அதுலேந்து சுவர் ஏறி குதிக்கும் போது ரொம்ப ஜாக்ரதையா இருப்பேன்.

எங்க ஊர்ல போஸ்டர் ஒட்டர்தே ஒரு கலை. நம்ப ஆத்துலேந்து தியேட்டர் வரைக்கும் இருக்கும் போஸ்டரை வெச்சே கதையை வியூகம் பண்ணிடலாம். எத்தனை நாளைக்குத் தான் டெண்ட் கொட்டாய்ல படம் பாக்கர்து? எங்க ஊரோட அடுத்த கோடில இருக்கும் தியேட்டர்ல போய் படம் பாக்கனும்னு மனப்பால்/மிளகுப்பால் எல்லாம் குடிச்சுண்டு இருந்தோம்.


எங்க ஊர்லையும் சரி அம்பைலயும் சரி எல்லா தியேட்டருக்கும் கல்யாணி, அபிராமி!னு மங்களகரமான பேராதான் இருக்கும் ஆனா எப்போ எந்த படம் போடுவான்னு யாருக்கும் தெரியாது. திடீர்னு நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு புடிச்ச மலையாள குடும்பச் சித்திரத்தை போட்ருவான். எங்க ஊர் மாமாக்களுக்கு மலையாள ஆர்வம் கொஞ்சம் ஜாஸ்தி, அதனால ராத்திரி 10 மணி ஆட்டத்துக்கு தலைல துண்டை போட்டுண்டு போய் பாத்துட்டு வந்து அடுத்த நாள் வாய்க்கால் மண்டபத்துல, ‘சிலுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் படத்துல ஒரு கிலுகிலுப்பே வந்தது ஓய்!!’ சிலுக்குனு பேர் வச்சதுக்கு பதிலா அவளுக்கு ‘கிலுக்கு’னு பேர் வச்சுருக்கலாம் ஓய்!னு திரை விமர்சனம் எல்லாம் பண்ணுவா. ஒரு தடவை மாமாவோட திரைவிமர்சனம் பொம்ணாட்டிகள் கரைல குளிச்சுண்டு இருந்த அவாத்து மாமி காதுல விழுந்ததுல, அந்த மாமாவை ஆத்துல போய் உலுக்கு எடுத்துட்டா. சில்க் ஸ்மிதா தற்கொலை பண்ணின்டு ப்ராணனை விட்டுட்டா!னு கேள்விப் பட்ட உடனே, ‘சிலுக்கு போய்ட்டாளா?’னு மேல் துண்டால வாயை பொத்திண்டு, துக்கம் தாங்காம வாய்க்கால்லையும், ஆத்தங்கரைலையும் போய் குளிச்சுட்டு வந்த அம்பை & கல்லிடை மாமாக்கள் ஏராளம்.


அம்பை/கல்லிடை ரெண்டு ஊர்லையுமே தியேட்டர்ல எல்லாரும் சுவாரசியமா படத்தை பாத்துண்டு இருக்கும் போது சத்தம் காட்டாம பேனை(fan) அணைப்பதில் வல்லவர்கள். சூப்பர் ஸ்டார் படமா இருந்தா அம்பைக்காரர்கள் இன்ட்ரவலுக்கே பேனை அணைச்சுட்டு நம்ப வேட்டியையும் உருவிண்டு போய் விடுவார்கள்.

ஒரு சமயம் பானுப்ப்ரியா நடிச்ச எதோ ஒரு அம்மன் படம் எங்க ஊர் தியேட்டர்ல போட்டுருந்தான். தக்குடுவையும் சேர்த்து மொத்தம் 10 வானரங்களை படத்துக்கு கூட்டிண்டு போய்ட்டு பத்ரமா கூட்டிண்டு வரேன்!னு ஒரு மாமி பொறுப்பேத்துண்டா. அந்த தியேட்டர்ல தரைலேந்து பெஞ்சு 12 அடி உசரம், தாவி எல்லாம் குதிச்சா கபாலமோக்ஷம்தான் கிட்டும், அதனால எல்லாரும் பெஞ்சு டிக்கெட்டுக்கு தேவையான ரூபாயை எடுத்துண்டு 3 மாமிகள் சகிதமா கிளம்பிட்டோம் (அம்பி அந்த படத்துக்கு வரலை).

‘கோகுல் சாண்டல்’ பவுடர் போட்ட மூனு மாமிகள் முன் செல்ல, போஸ்டர் எல்லாத்தையும் ஆவலா பாத்துண்டே நாங்க பின் தொடர்ந்தோம். குரங்கு கார் ஓட்டரமாதிரி, பாம்பு மணி அடிக்கர மாதிரி, யானை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் பண்ணுவது மாதிரி விதவிதமான போஸ்டர் எல்லாத்தையும் பாத்துண்டே மெல்ல மெல்ல தியேட்டர் பக்கம் வந்தாச்சு, தியேட்டர் வாசல்ல ஒரு நோட்டீஸ் போர்டு இருக்கும், ‘நடுவர் தீர்ப்பே இறுதியானது!’னு சொல்லற மாதிரி, அந்த போர்டுல என்ன போஸ்டர் இருக்கோ அதுதான் திரையிடப்படும். அதுல யாரோ ஒரு பொம்ணாட்டி எங்க ஊர் பெருமாள் கோவில் நாதஸ்வர வித்வான் கணேசன் அங்கவஸ்த்ரத்தை நெஞ்சு வரைக்கும் கட்டிண்டு நாதஸ்வரம் வாசிக்கர மாதிரி, ஒரு வெள்ளைக் கலர் டர்க்கி டவலை நெஞ்சு வரைக்கும் டைட்ட்ட்டா கட்டிண்டு ஹான்!னு நெளிச்சுண்டு நின்னுண்டு இருந்தா. படம் பேர் எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை(ஆயில்யனுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பு இருக்கு). ' ஓஓஓஓ! நாசமாபோற கடங்காரன் படத்தை மாத்திக் கொண்டாடிட்டான் போலருக்கேடி!'னு மாமிகள் அவாளுக்குள்ள சொல்லிண்டா.


தியேட்டருக்கு தொட்டு அடுத்த சுவர்ல கூட பெரிய சூலத்தை வெச்சுண்டு பானுப்ரியா ஆடரமாதிரி போஸ்டர்தான் இருந்தது. ‘குரங்கு கார் ஓட்டர்தை பாக்க முடியாதா?’னு ஒரு வால் இல்லாத குரங்கு பரிதாபமா கேட்டது. செட்டுல கொஞ்சம் பெரிய குரங்கு(5 ஆம் க்ளாஸ் படிக்கர்து) மெதுவா சின்ன குரல்ல, "மாமி! இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வந்துட்டு சும்மா திரும்பி போகவேண்டாம்!னு பிட்டு படத்துக்கு பிட்டு போட்டான். ‘இன்சார்ஜ்’ மாமி கொஞ்சம் கூட அசரவும் இல்லை பதறவும் இல்லை, பக்கத்து டீ கடைல போய், ‘இங்க ஒரு பழைய முருகன் கோவில் உண்டே அது எங்க?’னு வழிகேட்டா பாக்கனும்.


அந்த தியேட்டர்லேந்து 30 அடி தூரத்துல ஒரு அழகான பழைய முருகன் கோவில் உண்டு. நிலைமையை அழகா சமாளிச்ச அந்த மாமியோட சாமர்த்தியம் இப்ப நினைச்சாலும் எனக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பரம் எல்லாரும் முருகன் கோவிலுக்கு போய் 6 ப்ரதக்ஷிணம் வெச்சுட்டு நெற்றி நிறைய விவிடி, குங்குமம் எல்லாம் இட்டுண்டு தைபூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரை போனவா மாதிரி பக்திப் பரவசத்தோட ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். டப்பால பஞ்சாமிர்தம் மட்டும் தான் வாங்கிண்டு வரலை.


இந்த நிகழ்ச்சிக்கு அப்பரம், ‘சின்னத்தம்பி’ படத்துல குஷ்பு வரர்துக்கு முன்னாடி 2 பேர் சைக்கிள்ல குடை பிடிச்சுண்டு போகர மாதிரி, எந்த படம் போகர்தா இருந்தாலும் ஒரு வானரம் தியேட்டர் வரைக்கும் சைக்கிள்ல முன்னாடி போய் விவரமா விசாரிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் தான் கிளம்பர்துன்னு முடிவு பண்ணினா. ‘பிட்டு படத்தை பாத்துட்டு போகலாம்!’னு சொன்ன குரங்குக்கு வீட்ல போய் ‘சாண்டல் பவுடர்’ மாமி பத்த வெச்சதுல அவனோட அம்மா கையால நாயடி! பேயடி! விழுந்தது தனிக்கதை....:)

Friday, October 1, 2010

கலக்கல் கல்லிடை

போன பதிவுல சொன்னது போக கொஞ்சம் பாக்கி இருக்கர்தை இந்த பதிவுல சொல்லலாம்னு இருக்கேன். ஊருக்கு தக்குடு போயிருந்த சமயம் வயல்வெளி எல்லாம் பச்சைக்கலர் பட்டுப்புடவை கட்டிண்டு அழகா இருந்தது.எதோ காய்ச்சல் வந்து போனதுல ஊர்ல பல முக்கிய விக்கட்டுகள் போட்டோ ப்ரேமுக்குள்ள போய்ட்டா, 'செக்கு மாதிரி இருந்தா! எப்பிடித்தான் போனாளோ!'னு ஆச்சர்யம் மாறாம சொல்லிண்டா எல்லாரும். இனிமே ஊருக்கு போகர்தா இருந்தா, ‘ஊர்ல காய்ச்சல் எல்லாம் இல்லைல்யோ?’னு தெளிவா ஜாரிச்சுண்டுதான் போகனும்.

ஊர்ல தியேட்டர்ல போய் ஒரு படம் கூட பாக்க முடியலை. பக்கத்து கிராமமான அம்பைலதான் 3 தியேட்டர் உண்டு. பாட்டு &பைட்டுக்கு நடுல திரையை சுத்தி 'ஜிகு ஜிகு'னு கலர் லைட் போடும் பாணியை உலகத்துக்கே முதல் முதலா காட்டிக் குடுத்த பயபுள்ளைங்க இவங்க தான்..:) சின்ன வயசுல ஒரு தடவை சினிமா பாக்க போனது சம்பந்தமா ஒரு சுவாரசியமான கதை உண்டு, அதை தனி பதிவா போடலாம்னு இருக்கேன்.



(கல்லிடை கனவான்களை வரவேற்கும் அம்பை அலங்காரவளைவு)

கல்லிடை மாநகர்ல கிடைக்காத சாமானே கிடையாது. முருக்கு, தட்டை, சீடை, நார்த்தங்காய் ஊறுகாய், மாவடு, அப்பளாம்,வடாம்,பருப்பு பொடி, மூக்குப் பொடி, புண்ணாக்கு பொடி போன்ற வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான சாமான் எல்லாம் பக்கத்து குக்கிராமமான அம்பைல இருக்கரவா கூட இங்க வந்து தான் வாங்கிண்டு போவா. டிவி, ப்ரிட்ஜ்,மீஜிக் சிஸ்டம்,பேன்(fan) மாதிரியான சின்ன சின்ன சாமான் எல்லாம் நாங்க அம்பைலேந்து வாங்கிண்டு வருவோம்.



(எல்லா சினிமாவிலும் தலைகாட்டும் மருதமரங்கள்)

கால் முட்டியை ரத்தம் வர அளவுக்கு பேத்துக்கனும்னா அம்பை ஆத்தங்கரைல போய் குளிச்சா போதும். ஒரே பாறையா இருக்கும், ஆழமும் கிடையாது. கல்லிடைல நீச்சல் தெரியாதவன் எவனாவது இருந்தா, ‘அம்பைல போய் குளில!’னு எங்க ஊர்ல நக்கல் விடுவது வாடிக்கை. அம்பை வெறும் கூத்தாடிப்பய ஊரு! வருஷம் முழுசும் எதாவது சினிமா/சீரியல் சூட்டிங் நடந்துண்டே இருக்கும். நான் போயிருந்த சமயம் கூட குதிரை மாதிரி நாலு பொம்ணாட்டிகள் விஜய் டிவியோட ஒரு சீரியலுக்கான டைட்டில் பாட்டுக்காக ‘இட்லி’ பாறை பக்கத்துல ஆடிண்டு இருந்தா. எங்க ஊர் கரைலேந்து சுமார் 200 மீட்டர் தூரம் அதனால அவா தலைல வச்சுண்டு இருந்த பிச்சிப் பூ மட்டும் தான் தெரிஞ்சது, அந்த கரைல போய் அவா கட்டிண்டு இருந்த புடவை சில்க் காட்டனா அல்லது கோரா காட்டனா அப்படிங்கர சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிக்கர்துக்காக தான் நான் பாக்க போனேன்னு சொன்னா நீங்க நம்பவா போறேள்...:)

ஊர்ல தக்குடு போயிருந்த சமயம் தான் பதிவுலக 'சிரிப்பு வித்துவான்' டுபுக்கு அண்ணாச்சி அவரோட முழூ பரிவாரத்தோட லண்டன்லேந்து வந்து கல்லிடைல முகாமிட்டிருந்தார். எப்படியாவது ஒரு 5 நிமிஷம் அந்த மனுஷர் கூட பேசிடனும்னு நானும் தம்கட்டி முயற்சி பண்ணி பாத்தேன். ம்ம்ம்ம்ம்! கடைசி வரைக்கும் நடக்கவே இல்லை, ஏதோ ‘பெப்ஸி’ உமாவுக்கு போன் பண்ணி பேசர மாதிரி, ' நன்னா இருக்கேளா? சாப்டாச்சா? கக்கா போயாச்சா?'னு போன்லதான் 3 தடவை பேச முடிஞ்சது. நம்ப நாட்டாமையோட சங்கத்து ஆள்னு தெரிஞ்சும் என்னை பாக்கர்த்துக்கு டுபுக்கு அண்ணாச்சி நேரம் ஒதுக்கவே இல்லை. இதை கண்டித்து ‘பாஸ்டன்’ நாட்டாமை பாஸ்டன்ல ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்னு நான் நம்பறேன்.

ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அவரோட தங்கமணியையும்(அதாவது நம்ப அக்கா) 2 குழந்தைகளையும் பாத்து ரொம்ப நேரம் பேச முடிஞ்சது. அவர் இன்னிக்கி இவ்ளோ பெரிய வித்துவானா இருக்கர்த்துக்கு அவரோட தங்கமணியும் அவங்க விலக்கமாத்து அடியும் ஒரு காரணம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அதனால ஒரு பெரிய ஆளை சந்திச்ச திருப்தி..:)



(மாமனும் மருமகள்களும்)

ஊருக்கு போனதுலேந்தே புதுசா ஒரு தேவதையை எங்க தெருல பாத்தேன். ரொம்ப தெரிஞ்ச மாதிரியும் இருந்தது, அதே சமயம் தெரியாத மாதிரியும் இருந்தது. நான் தான் பாத்தேனே தவிர அது ஒரு கேவலமான லுக்கு கூட விடவே இல்லை .2 நாள் இப்பிடியே போயிடுத்து. மூனாவது நாள் காத்தால அவாத்து பக்கமா போகும் போது லேசா என்னை பாத்து சிரிச்ச மாதிரி இருந்தது. அவளோட அப்பா பக்கத்துல இருந்தார், அதனால ஒன்னும் நான் பயப்படலை, அந்த பொண்ணே இவ்ளோ தைரியமா சிரிக்கும் போது நம்ப பேசமா இருக்க முடியுமா? நானும் பதிலுக்கு ஈஈஈஈ!னு பல்லை காட்டினேன். மெதுவா பேச்சும் குடுத்தேன். அவ்ளோதான்! என்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ் லிஸ்டுல ஒரு புது பேர் சேர்ந்துருத்து. அடுத்த நாள் காலைல பாத்தா மாம்பழ கலர்ல மருதாணிக் கலர் பார்டர் போட்ட புது பட்டுப்பாவாடை எல்லாம் போட்டுண்டு நின்னது நம்ப ஆளு, அவளோட பொறந்த நாளாம்! நம்ப தான் பாரி வள்ளலோட பத்தாவது தலைமுறை ஆச்சே! உடனே என்னோட கழுத்துல இருந்த நீளமான ஒரு செயினை கழட்டி அவளோட கழுத்துல போட்டு விட்டுட்டேன். அந்த சமயம் பாத்து அவளோட அம்மா & அப்பா ரெண்டு பேரும் வந்துட்டா, ஆனா ஒன்னும் சொல்லலை. அவளை விட்டு பிரிஞ்சு வர மனசே இல்லை. புது ட்ரெஸ்ல என்னோட பப்பு! எப்புடி இருக்கா பாத்தேளா??..:)



(தக்குடுவின் கனவு தேவதை 'பப்பு')

Friday, September 24, 2010

பிள்ளையார் பாக்கலாமா?

எங்க? - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்ல

என்ன ஸ்பெஷல் - அழகான போட்டோ இருக்கு!

ஸ்லோகம் உண்டா? - குட்டி கதையும் உண்டு

கமண்ட் போடனுமா? கட்டாயம் இல்லை, உம்மாச்சியை வந்து பாத்தாலே தக்குடுவுக்கு சந்தோஷம்தான்

ம்ம்ம்ம்! இன்னும் என்ன யோசனை? சீக்கரம் படிக்கர்துக்கு வாங்கோ எல்லாரும்!..:)

Wednesday, September 15, 2010

கல்லிடை மாநகரம்

அப்ப்ப்ப்ப்ப்பாடி! ஒரு வழியா ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்தாச்சு. ஓஓஓஓ! தக்குடுவை இன்னும் காணுமே!!னு மனசுக்குள்ள தவிச்சு போயிருந்தாலும், யாராவது கேட்டா? ஓஓ! அந்த சமத்து இத்தனை நாள் இல்லாம நிம்மதியா இருந்தது!னு சொல்லிண்டே எதாவது ஊர் வம்பு கிட்டுமானு எல்லாரும் ஆசையா ஓடி வருவேள்னு தக்குடுவுக்கு நன்னா தெரியும். நெறையா எல்லாம் விஷயம் ஒன்னும் தேறலை, ஆயிர கணக்குல ரூபாயை செலவு பண்ணி ஊருக்கு போய்ட்டு 2 போஸ்டுக்கு கூட மேட்டர் தேத்த முடியலை, ம்ம்ம்ம்! என்ன பண்ண முடியும் கலி முத்தி போய்டுத்து.



கல்லிடை காஸ்போபொலிடன் சிட்டில எல்லா மாமிகளும், அவாளோட பொண்களும், ஒரு ஓஒரமா அவாத்து மாமாக்களும் செளக்கியமா இருக்கா. வாய்க்கால்லையும் ஆத்தங்கரைலையும் தண்ணி கரைபுரண்டு ஓடர்து. என்ன ஒரே குறைனா தெருக்கள் எல்லாம் ஒரு கலகலப்பே இல்லாம இருக்கு. தக்குடு! நீ என்ன சொல்ல வராய்?னு நம்ப ஷோபா அக்கா மாதிரி யாரும் நடிக்க மாட்டேள்னு நான் நம்பறேன்..:)

போன வருஷம் தோஹா கிளம்பி போகும்போதே யார்டையும் அவ்ளோவா சொல்லிண்டு எல்லாம் வரலை, ஏன்னா எங்க தெருல நெறையா மாமா & மாமிகளுக்கு தபோபலம் ஜாஸ்தி, அப்புறம் என்னோட ப்ளைட் தோஹால இறங்கர்துக்கு பதிலா ஆப்கானிஸ்தான்ல லான்ட் ஆயிடும். அதானால பாதி பேர் இன்னும் எங்கிட்ட ‘பெங்களூர்ல அப்பரம் என்ன விஷேஷம்?னு தான் கேட்டா. நானும் ‘பெங்களூருக்கு என்ன! நித்யம் விஷேஷம்தான்!’னு சமாளிச்சுட்டேன். இருந்தாலும் சில மாமிகளுக்கு தெரியும், அவாள்ட்ட எல்லாம் வசமா சிக்கினேன்.




ஒன்னொன்னும் ஒரு ரகமா இருந்தது. ஒரு பயலுக்கும் தோஹா!னு ஒரு ஊர் இருக்கர்தே தெரியலை. 2006 ல காசை எல்லாம் கரியாக்கி asain games எல்லாம் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. முத்தமிழையும் வளர்க்கும் 'மானாட மயிலாட'வோட பைனலை தோஹால வெச்சு நடத்த சொல்லலாம்னு இருக்கேன். அப்பரம் தோஹா பேரை சொன்னாலே எல்லாம் 'ஆஹா'!னு சொல்லுவா. தோஹா US- ல இருக்கா கனடால இருக்கானு ருக்கு மாமிதான் வாயை பிடிக்கினா மொதல்ல. அந்த மாமியோட அக்கா புள்ளை US-ல இருக்கான், அண்ணா நாட்டுப்பொண் கனடால இருக்கா அதனால அந்த மாமிக்கு அந்த ரெண்டு இடம் தான் வெளிநாடுனு ஒரு எண்ணம். நானும் முகத்துல ஒன்னும் காட்டிக்காம 'ரெண்டுக்கும் நடுசென்டர்ல இருக்கு'னு சொல்லிட்டேன். (இப்ப என்ன கனடால இருக்கர நம்ப இட்லி மாமிட்டயா போன் பண்ணி கேட்டுண்டு இருக்கப் போறா ருக்கு மாமி).

புதுசா உள்ள வீடா இருந்தா ‘குண்டல கோமா மாமியாத்துக்கு அடுத்தாம், ஸ்டைல் மீனா மாமியாத்துக்கு முந்தினாம்’ நு பிரபலமானவாள வெச்சு அடையாளம் சொல்ற மாதிரி நானும் எல்லார்டையும் 'துபாய்க்கு மிக மிக அருகில்'நு சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேகா மாதிரி கை எல்லாம் ஆட்டி ஆட்டி சொல்லவேண்டியதா போச்சு. அந்த சமயம் பாத்து பாகவதர் மாமா வந்து தொலைக்கனுமா! அவர் உடனே, 'தோஹாவுக்கும் துபாய்க்கும் எவ்ளோ தூரம் தக்குடு?' னு அவர் பங்குக்கு ஒரு சந்தேகத்தை கிளப்பினார். அவர்ட்ட போய்ண்டு ' By air 45 மினிட்ஸ், by road 6 hrs நு எல்லாம் விலாவாரியா விளக்கிண்டு இருக்கர்து எல்லாம் ஆகாத காரியம்னு மனசுல பட்டதால ஒரே வரில அவருக்கு பதில் சொன்னேன். துபாய்லேந்து யாராவது 'ஜெய் ஜானகி காந்தஸ்மரணம்'னு கத்தி சொன்னாக்கா தோஹாலேந்து நான் 'ஜெய் ஜெய் ராமா ராமா'னு சொல்லிடலாம் மாமா!அவ்ளோ பக்கம்னு சொன்னதுக்கு அப்பரம் அவர் எந்த சந்தேகமுமே கேக்கலை, பேஷ்! பேஷ்!னு சொல்லிட்டு போய்ட்டார்.

இதுக்கு நடுல மெதுவா கிச்சா மாமா பேச ஆரம்பிச்சார். ‘அந்த ஊர்ல இருக்கர்துக்கு எல்லாம் யோகம் பண்ணியிருக்கனும், என்ன ஒரு ஊரு! என்ன ஒரு க்ளைமேட்டு!’னு அவர் ஆரம்பிக்கவும் எனக்கு பால்பாயாசம் குடிச்ச மாதிரி இருந்தது. கிச்சா மாமாவுக்காவது தோஹா பத்தி தெரிஞ்சுருக்கே!னு நான் சாமாதானம் ஆகர்துக்குள்ள, அதுல மண்ணள்ளி போட்டுட்டார். அங்க எல்லாருமே ஜெகஜோதியா இருப்பாளாமே? எல்லாரும் காத்தாட வளைய வந்துண்டு சதா சர்வ காலமும் பீச்லையே தாச்சுண்டு இருப்பாளாமே?னு ஏகப்பட்ட 'மே' போட்டார். எனக்கு ஒன்னும் புரியலை, கலர் கலராவா?? எங்க ஊர்ல ஒரே கலர்தானே உண்டு. ‘கருப்புதான் நேக்கு புடிச்ச கலரு!’னு குழாய் மைக்கு வெச்சு பாட்டு போடவேண்டிய ஊராச்சே! காத்துகூட போகமுடியாம இருப்பா, இவர் என்னடானா காத்தாட இருப்பா!னு சொல்றாரே?னு எனக்கு ஒரே குழப்பம். மங்களூர்லேந்து பக்கம் இல்லையா?னு அவர் கேக்கவும் எனக்கு புரிஞ்சது. நாசமா போச்சு மாமா! அது கோவா, நான் இருக்கர்து தோஹா'னு சொல்லிட்டு நகர்ந்தேன். இத்தனை வயசுக்கு அப்புறம் உங்காத்து மாமாவுக்கு ‘காத்தாட ஜெகஜோதியா’ இருக்கரவாளை பாக்கனுமாம், ஜெகஜோதியா விசாரிக்கறார் மாமா'னு அவாத்து மாமிட்டையும் மறக்காம பத்த வெச்சுட்டு வந்தேன்.

Wednesday, August 4, 2010

டொட்டடைய்ய்ய்ய்ய்ங்........

என்னடா இது? நம்ப தக்குடுதான் வெள்ளிக்கிழமை ராமசாமியாச்சே, அதிசயமா ஒரு நாள் முன்னாடியே போஸ்ட் போட்ருக்கே?னு யோசனையோட படிக்க வந்த எல்லாருக்கும் ஒரு சலாம்குலாமு!

வளைகுடா நாடுகள் எல்லாத்துலையுமே ஜூன் மாசத்துல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா செப்டம்பர் வரைக்கும் பொட்டியை தூக்கிண்டு எல்லாரும் கிளம்பிடுவா.

எங்க ஆபிஸ்லதான் எல்லாம் லோக்கல் ஷேக்குதானே, அவா எல்லாரும் அவாளோட பொண்டாட்டிகள் எல்லாரையும் கூட்டிண்டு ஐரோப்பா, சிங்கப்பூர்னு கிளம்பிட்டா. எனக்கு இந்த வக்கேஷன் எல்லாம் பழக்கம் இல்லை. பெங்களூர்ல இருக்கும் போது வருஷத்துக்கு மொத்தமே 10 நாள்தான் லீவு எடுப்பேன். அதுவும் எங்க ஊர் வினாயகர் சதுர்த்திக்காகதான்(ஆமாம் எங்க ஊர்ல 10 நாள் உத்ஸவம் தொப்பையப்பருக்கு).

இங்க லீவும் ' நான் முந்தினா நேக்கு!' நீ முந்தினா நோக்கு!னு யாரு சீக்கரமே அப்ளே பண்ணராளோ அவாளுக்குதான் கிட்டும். நான் அதை பத்தி எல்லாம் யோசிக்காம ஆணியை பிடிங்குண்டு இருந்தேன். பொறுத்து பொறுத்து பாத்த எங்க ஷேக்கு மேனேஜர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். போய் பார்த்தா, ‘ஆளே இல்லாத ஊர்ல யாருக்குடா டீ ஆத்திண்டு இருக்க?’னு என்கிட்ட கேட்டார். மொதல்ல போய் லீவுக்கு அப்ளே பண்ணர வழியை பாரு!னு சொன்னார்.

அப்ளிக்கேஷன் பார்ம் அரபில இருந்தது. நமக்கு என்ன கவலை, நம்ம கைலதான் சூடான் சிங்கம் இருக்காரே! எல்லா விபரமும் அவர் நிரப்பிட்டார், தக்குடு!னு ஒரு கையெழுத்து மட்டும் தான் நான் போட்டேன். 20 நாள் தான் நான் கேட்டேன். 20 நாள்ல நாக்கு கூட வழிக்க முடியாது! 30 நாள் வெச்சுக்கோ! என்ஜாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!னு ஜனகராஜ் மாதிரி அள்ளிக் குடுத்தார் அந்த வள்ளல்...:) ‘கரகாட்டக்காரன்’ கனகாவுக்கு லெட்டர் குடுத்தவனுக்கு ‘தங்கப்பதுமை’ தமன்னாவே பிக்கப் ஆன மாதிரி ஆயிடுத்து தக்குடுவுக்கு.





அதோ! இதோ!னு அந்த நாளும் வந்தாச்சு, ஆமாம் பொட்டியை தூக்கிண்டு தக்குடு கிளம்பியாச்சு. செப்டம்பர் 15 வரைக்கும் நம்ப ப்ளாக்குக்கும் விடுமுறை (எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்).

ஆப்பக்காரி அன்னம்மா பொண்ணு, ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு! எல்லாரும் செளக்கியமா?னு ஊர்ல கேட்டுட்டு வந்து சொல்றேன். ஒரு வாரம் பெங்களூர்ல டேரா, அதுக்கு அப்புறம் கல்லிடை சிட்டிதான்.

ஊர்லேந்து வரும் போது என்ன வாங்கிண்டு வரனும்?னு கேட்டதுக்கு, (எங்க அம்மா மாதிரி) ' நீ பத்ரமா போய்ட்டு வந்தாளே போதும் மகனே! அதுதான் வேணும்!'னு சொல்லி புல்லரிக்க வச்ச என்னோட தோஸ்த் ‘துபாய்’ செளம்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் சலாம்.

நான் திரும்பி வரவரைக்கும் புதுசா யாராவது நம்ப கடைக்கு வந்தா, வலது பக்கம் நம்பளோட ‘அமரகாவியங்கள்’ எல்லாம் இருக்கு. படிச்சுண்டு இருக்கவும்....:)



ஊருக்கு போகப்போர தக்குடுகோந்தையோட முகத்தில் என்ன ஒரு ஆனந்தம் பாத்தேளா?...:))

தக்குடு திரும்பி வரும் வரைக்கும் என்னோட ப்ளாக்கை பத்ரமா பாத்துக்கும் பொறுப்பை ‘சியாட்டில் சிங்காரி’ கிட்டயும், இட்லி மாமி கிட்டயும் ஒப்படைக்கிறேன் (யாருப்பா அங்க? திருடன் கைலயே சாவி!னு நக்கல் அடிக்கர்து?).

Friday, July 30, 2010

ஷகிராவும் கவுண்டமணியும்.....

இந்த ஊருக்கு(Doha) வந்த புதுசுல கண்ணை கட்டி விட்ட மாதிரி இருந்தது, இப்போ கொஞ்சூண்டு கண்ணை அவுத்து விட்ட மாதிரி இருக்கு அவ்ளோதான். ஊருக்கே ஏசி போட்ட மாதிரி கண்ணுக்கு குளுர்ச்சியா ( நான் மரத்தை சொன்னேன்)இருக்கும் பூலோக சொர்க்கம் பெங்களூர்லேந்து வந்ததால் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனால் நான் வந்த சமயம் இங்கையும் குளிர்காலமா இருந்ததால தக்குடு தப்பிச்சான்.



ஆபிஸுக்கு போனா அங்க எல்லாம் ஒரே ஷேக்கு மயமா இருந்தது (பின்ன என்ன 3/4 போட்ட பிகரா இருக்கும்?னு நக்கல் அடிக்க வேண்டாம்). கடைசியா என்னோட உயரதிகாரியை பாத்து 'கும்புடுக்கரேன் எஜமான்!'னு சொன்னேன் (இங்க்லிபீஸ்ல ரிப்போர்ட் பண்ணர்துன்னு சொல்லுவாங்க). அதுக்கு அப்புறம் என்னோட சீட்டுக்கு போனா பக்கத்து சீட்ல ஒரு சூடான்காரார், கொஞ்சம் தள்ளி இன்னொரு ஷேக்கு உக்காச்சுண்டு இருந்தார். சாப்டாமா கூட இருக்க முடியும், ஆனா பக்கத்துல உள்ளவாளோட பேசாம மட்டும் திருனெல்வேலிகாரனால இருக்க முடியாது. பக்கத்தாதுல பாம் வெடிச்சாலும் எட்டிப்பாக்காம ப்ளாக்ல ‘பாதுஷா செய்வது எப்படி?’ன்னு படிச்சுண்டு இருக்கர்துக்கு நான் என்ன சிட்டில உள்ளவனா??

எங்க ஊரா இருந்தா, அண்ணாச்சி! என்னா வெயிலு அடிக்கி!னு மெதுவா ஆரம்பிச்சோம்னா 30 நிமிஷத்துக்கு குறைவு இல்லாம அண்ணாச்சி நம்ப கூட பேசுவார். அந்த கதை எல்லாம் இங்க நடக்காதுன்னு எனக்கு நன்னாவே தெரியும். சூடான்காரர் நல்ல ஆறடி ஒசரத்தோட கூடை பந்தாட்ட வீரர் மாதிரி இருந்தார். மெதுவா அவர்ட்டதான் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் ரொம்ப எல்லாம் ஸ்னேகம் ஆகலை. நம்ப ஊர்ல எல்லா பயலும் கிரிக்கெட் பைத்தியம் புடிச்சு அலையற மாதிரி இங்க உள்ளவாளுக்கு எல்லாம் கால்பந்தாட்டம்னா உசுரு. தச்சுமம்முவுக்கு நம்ப மாவுடு தொட்டுக்கர மாதிரி இவா எல்லாருக்கும் புட்பால் இருந்தா போதும்..

உலககோப்பை போட்டி நடந்த போது இவாளோட கோட்டியின் உச்சகட்டத்தை பாக்க முடிஞ்சுது. ‘இந்தவாட்டி for ஆப்ரிக்கா!’னு முடியும் கால்பந்தாட்டத்தோட அந்த விளம்பரப் பாட்டுக்கு நடுல 'ங்கொக்கா மக்கா, ங்கொக்கா மக்கா'னு வரும் அந்த வரியை கேட்டவுடன் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எங்கையோ ஆப்பிரிக்கால இருக்கும் பாப் பாடகி ஷகிரா (பேரை கவனமா வாசிங்கடே!) நம்ப கவுண்டமணியோட ரசிகையா?னு ஆச்சர்யமா இருந்தது. கூர்மையா கேட்டதுக்கு அப்புறம்தான் அது 'ங்கொக்கா மக்கா’ இல்லை ‘வக்கா வக்கா!’னு மனசுல ஆச்சு

எனக்கு புட்பால் பத்தி ஒன்னுமே தெரியாது, பெனால்டினு சொன்னா எனக்கு எங்க ஊர்ல எலக்ட்ரிசிட்டி பில் கட்டலைன்னா, 15 தேதிக்கு அப்புறம் காக்கி டவுசர் போட்ட ஒரு மாமா வந்து அவாத்து பீஸ்கட்டையை பிடிங்குண்டு போவார். பில்+50 ரூவா அபராதம் கட்டினாதான் திருப்பி கரண்ட் வரும். இதுதான் எனக்கு தெரிஞ்ச பெனால்டி. (இப்போ எல்லா வீட்டு பீஸ் கட்டையையும் நிரந்தரமா ஆற்காடு மாமா பிடிங்கி வச்சுருக்கார்னு கேள்விப் பட்டேன்)

கார்னர்நு சொன்னா எனக்கு என்னோட பெங்களூர் ஆபிஸ்தான் ஞாபகம் வரும். முதல் ப்ளோர்ல கதவை திறந்தோன்னே 'கன்னிமூலகணபதி' மாதிரி கார்னர்ல சக்கப்பழமா ஒரு டில்லி பிகர் ரோலிங் சேர் நிறைஞ்சு உக்காசுண்டு இருப்பா. அதுதான் எனக்குத் தெரிஞ்ச ஒரே கார்னர்.

இங்க உள்ளவா கூட பேசனும்னா புட்பால் பத்தி பேசினா போதும்னு புரிஞ்சது. 10 அடி நகருவதற்குள் 10 தடவை பாஸ் பண்ணி கொண்டு போகர்து ஸ்பெயின் அணியோட சிறப்பாம்சம். வெறும் 3 பாஸ்ல 70 அடி வரைக்கும் கொண்டு போகர்து ஜெர்மனியோட திறமை. ஆக்ரோஷமான அணி அர்ஜெண்டினா- இந்த மாதிரி பல விஷயங்களை பிட்டு போடுவதற்கு உபயோகமாகும்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்.

இந்த மாதிரி ஒரு சமயத்துல தான் ஒரு நாள் அந்த சூடான் காரர்ட மெதுவா ஒரு பிட்டை போட்டேன். அரை இறுதிப் போட்டிக்கு பிரேசிலும் இல்லை, அர்ஜெண்டினாவும் இல்லை இனிமே புட்பால் பாத்து என்ன பிரயோஜனம்? னு மெதுவா ஆரம்பிச்சேன்.(லீவு அன்னிக்கு லேடிஸ் காலேஜ் வாசல்ல காத்துக் கிடந்து என்ன பிரயோஜனம்!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்). அவர் கையை டேபிள்ல வச்சுண்டு தலையை டேபிள்ல சாய்ச்சுண்டு இருந்தார். பக்கத்துல போய் பாத்தா கேவி! கேவி! ஒரே அழுகை. (வடிவேல் குரலில்)தாய்ப் பாசத்துல இவர் நம்பளை மிஞ்சிடுவார் போலருக்கே!!னு நினைச்சுண்டே அவரோட முதுகை தடவி குடுத்து, அவர் கழுத்துல இருந்த டையை வச்சு அவர் கண்ணை எல்லாம் துடைச்சு விட்டு சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்! போதும்!னு ஆயிடுத்து.

அப்புறம் தான் தெரிஞ்சது அந்த ஆளு பிரேசில் & அர்ஜெண்டினாவோட கன்னாபின்னா ரசிகர்னு. நல்ல வேளை பிரேசிலை பத்தி கேவலமா எதாவது சொல்லியிருந்தென்னா என்னோட பல்லை ஒடச்சு இருப்பார் அந்த சூடான் சிங்கம். பல்லும் வாயும் தப்பிச்சது குலதெய்வம் பெருவேம்புடையார் புண்ணியத்துலதான்...:). அதுக்கு அப்புறம் அந்த சூடான் சிங்கம் தக்குடுவுக்கு பயங்கர தோஸ்த் ஆயிட்டார். இரண்டு வாரம் என்னோட ஆபிஸ் கார் டிரைவர் லீவு போட்டப்போ கூட இவர்தான் கால் டாக்ஸி மாதிரி தினமும் என்னை பிக்கப்பு, ட்ராப்பு எல்லாம் ஓசிலையே பண்ணினார்.

இங்க உள்ள ஷேக்கு கூட நான் இங்க்லீஷ்ல பேசின கதையை தனியா ஒரு பதிவா போடலாம்னு இருக்கேன்.

விரைவில் உங்கள் அபிமான ப்ரவுசர்களில் எதிர்பாருங்கள் 'ஓமணக் குட்டி டான்ஸ்'

Thursday, July 22, 2010

கதாகாலட்ஷேபம்

இடம் - உம்மாச்சி காப்பாத்து ப்ளாக்

நடத்துபவர் - உங்காத்து செல்லப்பிள்ளை தக்குடு

தலைப்பு - அங்க வந்துதான் பாருங்கோளேன்!

நாள் - வெள்ளிக் கிழமை (23/07/2010)

நேரம் - செளகர்யப்படும் போது எல்லாம் கேட்டுக்கலாம்.

அனுமதி இலவசம்! கமன்ட் போடாம படிக்கும் கணவான்களும் வரவேற்கப்படுகிறார்கள்......:)

Friday, July 16, 2010

கார்ப்ரேட் கச்சேரி

நாலு நாள் முன்னாடி தானைத்தலைவர் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களோட கச்சேரி ஒன்னு கேட்டுன்டு இருக்கும் போது என்னோட பெங்களூர் ஆபிஸ் ஞாபகம் வந்துருத்து. அதை பத்திதான் இந்த பதிவு.....:)

சங்கீத கோஷ்டிக்கும் ஆபிஸ் கோஷ்டிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதுவும் இந்த கான்பரன்ஸ் கால் நடக்கும் போது பல காமெடியும் சேர்ந்து நடக்கும். அமேரிக்கா/லண்டன் துரைமார்கள் கூட நம்ப ப்ராஜக்ட் மேனேஜர் பேசும்போதுதான் இவ்ளோ கூத்தும். PM நடுல கொஞ்சம் மூச்சு விட்டு, அக்கம் குடிக்கும் போதெல்லாம் யா! யா! யெஸ் நு சொல்லி சமாளிக்கர்துக்கு ஒரு டீம் லீட் எப்போதும் ரெடியா இருப்பார். PM- க்கும் அந்த டீம் லீடுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரிகள்ல வயலின் வித்வான் ரொம்ப முக்கியமானவர். பாட்டு வித்வான் பாடும் ராகம் முழுவதையும் வாங்கி வாசிக்கும் திறமை உள்ளவர். வயலின் வித்வான் வாசிக்கும் இந்த நேரத்தில் தான் பாட்டு வித்வான் கூஜாலேந்து ஏலம் பச்சக்கர்பூரம் போட்ட பாலை ரெண்டு டம்ப்ளர் உள்ள தள்ளிட்டு தெம்பாயிப்பார். ராகத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் வித்வான்கள் வயலினுக்கு அதிக நேரம் தங்கள் கச்சேரியில் நேரம் ஒதுக்குவார்கள். பஞ்சரத்ன க்ருதியில் கூட 'ஜகதானந்த காரகா'வில் முதலில் வயலின் வித்வான் வர்ணம் வாசிக்க பின்பு அதை சந்தானம் பாடி அதன் பின்பு பாடல் வரியை பாடுவார். ராகத்தோட கட்டில் நல்ல புலமை இருக்கும் வித்வான் மட்டுமே வர்ணம் பாடமுடியும். சந்தானத்துக்கு இதெல்லாம் இடது கையால் டீ குடிக்கர மாதிரி.

சில சமயங்கள்ல நம்ப PM, பாட்டி வடை சுட்ட கதை லெவலுக்கு இறங்கி ஒரு விஷயத்தை சொல்லி புரியவைக்க முயற்சி பண்ணினாலும், அந்த பக்கம் இருக்கும் துரைமார்கள் 'சந்தைக்கு போனும்! ஆத்தா திட்டும்! காசு குடு!'னு சொன்னதையே சொல்லிண்டு இருப்பா. அந்த மாதிரி சமயத்துல அதிரடியாக அதே சமயம் அன்பாகவும் சொல்லி துரையை ஒத்துக்க வைக்கர்துக்கு டீம்ல ஒரு ஆளு இருப்பார். அந்த மாதிரி ஆள் கூடயும் PM-க்கு ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

கச்சேரியில் ம்ருதங்க வித்வான் முக்கியமான ஒரு அங்கம். கச்சேரி கேக்கரவாளை தூங்காம பாத்துக்கர பொறுப்பு இவரை சேர்ந்தது. தாளத்துக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் பாட்டு வித்வானும் ம்ருதங்க வித்வானும் கண்களால் பேசிக் கொள்வதை மேடையில் நாம் பார்க்கலாம். 'சிந்துபைரவி'-ல டில்லி கணேஷோட கண் ஜாடைகள் எல்லாம் நீங்க பாத்துருக்கேளா?. சில பேர் ம்ருதங்கம் நல்ல அடிக்கரார்!னு சொல்லுவா, அது ரொம்ப தப்பான வார்த்தை ப்ரயோகம். சாப்ட வரேளா!ங்கர்துக்கும் கொட்டிக்க வரேளா!ங்கர்துக்கும் எவ்ளோ வித்யாசம் உண்டோ அதை மாதிரி..:) ம்ருதங்கத்துல ராகம் வாசிக்க முடியாது, தாளம் தான் வாசிக்க முடியும். வயலின்ல தான் ராகம் வாசிக்க முடியும்.

சில பேர் டீம்ல இருக்கர்தே தெரியாது. என்னமோ ஆள் எண்ணிக்கைக்கு அவனும் இருக்கான்னு எல்லாரும் நினைச்சுண்டு இருப்பா. முக்கியமான ஒரு கால் அன்னிக்கு அவர் உடம்பு சரியில்லாம லீவு போடும் போதுதான் அவரோட அருமை தெரியும். அவர் எவ்ளோ முக்கியமானவர்ங்கர்து அப்போதான் எல்லாருக்கும் தெரிய வரும்.



கச்சேரில பாட்டு வித்வான் பின்னாடி பரப்பிரம்மம் மாதிரி முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்டாம ஒக்காசுண்டு ஒருத்தர் தம்புரா போட்டுண்டு இருப்பா. சில கச்சேரிகள்ல தம்புரா போடும் ஆள் டாப் டக்கரா இருப்பா என்பது உப தகவல்...:). அதுக்கு பேர் ஸ்ருதி( நம்ப பாஸ்டன் நாட்டாமைக்கு அவர் ஸ்கூல் படிக்கர சமயத்துல சைட் அடிச்ச மூனாவது பெஞ்சுல நாலாவது பொண்ணோட பேர் ஞாபகத்துக்கு வந்தா அதுக்கு தக்குடு பொறுப்பல்ல..:P). எவ்ளோ பெரிய சங்கீத கலா நிதியா இருந்தாலும் ஸ்ருதிப்பெட்டி இல்லாம பாடமாட்டா. கிழக்கு கடற்கரை சாலை மாதிரி நன்னா விசாலமா இருக்கர ரோட்ல நடுல கோடு இல்லைனா எப்படி வண்டி ஓட்ட முடியாதோ அது போல ஸ்ருதி இல்லாம பாட முடியாது. இப்பெல்லாம் எல்லாருமே ஸ்ருதி பெட்டிதான் வச்சுக்கரா. சில பேர் மட்டும்தான் 'பப்'கையெல்லாம் வச்ச ஒரு குத்து விளக்கை தம்புராவுக்கு உக்காத்தரா.

எல்லாருமா கஷ்டப்பட்டு ஒரு ப்ராஜக்டை பண்ணி முடிச்சாலும். ‘நாங்க உங்க வேலையை செஞ்சுமுடிச்சுட்டோம்!’னு துரை கிட்ட நம்ப PM தான் சொல்லுவார். வாட் இஸ் த ஸ்டேடஸ்?னு நித்யம் பத்து தடவை கேட்டதை தவிர அவர் அந்த ப்ராஜக்ட்ல எந்த ஆணியுமே புடுங்கலைங்கர்து எல்லாருக்குமே தெரியும் தான். மனசாட்சியே இல்லாம இந்தாளு நாங்க செஞ்சோம்!னு சொல்றார் பாருடா!னு புதுசா வேலைக்கு சேர்ந்த அப்ரன்டிஸ்கள் புலம்புவதையும் நாம கேட்டுருக்கோம். ம்ம்ம்ம்ம்.....என்ன பண்ண முடியும்?? நமக்கு கோடிங் தட்டர்து மட்டும்தான் வேலை, அவருக்கு எவ்ளோ போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு)இருக்கு?னு சொல்லி சீனியர்கள் விளக்குவார்கள்.

கச்சேரியிலும் எல்லாருமே உயிரை குடுத்து உழைச்சாலும் பாடும் அந்த நபரைதான் சங்கீத வித்வான்!னு எல்லாரும் சொல்லுவா. மத்தவா எல்லாருக்கும் ம்ருதங்க வித்வான்! கடம் வித்வான்! வயலின் வித்வான்!னு தான் பேர். எதனாலன்னா பாட்டு வித்வானுக்கு எல்லாத்துலையுமே ஒரு புலமை இருக்கும். எப்போ தனியாவர்தனத்துக்கு நேரம் குடுக்கனும், எந்த வரிசைல பாட்டு பாடி கச்சேரியை கொண்டு போகனும், சபைல இருக்கரவாளோட ரசனை & புலமை என்ன போன்ற எல்லா விஷயமும் தெரிவதால் தான் அவர் சங்கீத வித்வான்.