Thursday, June 30, 2011

மூன்றாம் பிறை...

சிலபல ஆபிஸ் பஞ்சாயத்துகளால மூனு வாரம் எழுத முடியலை. அதுக்கு தக்குடுவை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ! கோந்தைக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு?னு மெயில் மேல மெயில் போட்டு ஜாரிச்ச அண்ணா/அக்காமார்களுக்கு அன்பு வணக்கங்கள்!ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி என்னோட தோஸ்த் கோபிகா ஒரு தொடர் பதிவு எழுத சொல்லி இருந்தாங்க. ஒரு வழியா இப்ப எழுதலாம்னு நினைக்கிறேன்.



மீண்டும் JKB....:)

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

i) குழந்தைகளோட அல்லது குழந்தை மாதிரி மனசு உள்ள நல்ல மனுஷா கூட சகவாசம்.
ii) எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி & துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து.
iii) அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

i) சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசக்கூடிய பேச்சு.
ii) அழியக்கூடிய அற்பமான விஷயங்களில் அதிகம் நாட்டம் உள்ள படிச்ச மேதாவிகளோட சவகாசம்.
iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

i) டாக்டர் போடும் ஊசி (இதுனாலையே எங்க ஊர் டாக்டர் முத்துக்குமரனை 'குத்து'குமரன்னு தான் சொல்லுவேன்).
ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள்.
iii) என்னோட கணக்கு வாத்தியாரரின் கோபம் (போன ஜென்மத்துல புரோட்டா கடைல மாஸ்டரா இருந்துருப்பார் போலருக்கு)


4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

i) +2-ல என்னோட கணக்கு வாத்தியார் நடத்தின கணக்கு.
ii) வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான். (சிரிக்காதீங்கோ! நிஜமாவே புரியலை).
iii) பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

i) ஒரு ஆரஞ்சு மிட்டாய்
ii) ஒட்டகத்துக்கு ஷாம்பூ வாங்கின கணக்கு எழுதின ஒரு பைல்
iii) அழி லப்பரோட கூடின ஒரு பென்சில்

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

i) கிரேஸிமோஹனின் வசனம்,டாம் & ஜெர்ரி, Mr. Bean
ii) அண்ணாபிள்ளையோட பேச்சு & சேட்டை
iii) கத்திரிக்காய்க்கு இங்கிலிஷ்ல என்னது?னு கேட்ட டீச்சர் கிட்ட, 'K A T H R I K A I'-நு பதில் சொன்ன என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரன்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

i) கோபிகாவோட கேள்விக்கு பதில் எழுதிண்டு இருக்கேன்.
ii) ராக்ஸ்ஸ்ஸ் அக்காவோட தேங்கா சாத போட்டோவை பாத்து பொறாமை பட்டுண்டு இருக்கேன்.
iii) வெள்ளிக்கிழமை கருங்குளம் மாமா & கல்லிடை மாமியாத்து ஓசி சாப்பாட்டுல என்ன ஸ்வீட் போடபோறாளோ?னு யோசனையும் ஓடிண்டு இருக்கு

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்

9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?

i)நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.
ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.
iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

i) கர்ண கொடூரமா இருக்கும்படியான வரிகள் & இசை உள்ள பாடல்கள், ஸ்வரம் சரி இல்லாத மந்திரங்கள்
ii) தன்னம்பிக்கையை தளர்த்தும் படியான பேச்சுகள்
iii) நமக்காக ஒரு துரும்பை கூட நகர்தாத மனிதர்கள் செய்யும் தேவை இல்லாத உபதேசங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

i) வயலின் வாசிக்கனும் ரொம்ப ஆசை உண்டு. கண்ணை உருட்டிண்டு & தலையை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கவும் ஆசை...;)
ii) அரபி மொழி பேச & எழுத ஆசை.
iii) பொறுமை

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

i) ஸ்வீட் பத்தி தனியா கேள்வி இல்லாததால திரட்டிப்பாலை முதல்ல சொல்லிக்கறேன். (ஸ்வீட்லேந்து ஆரம்பிக்கனுமோல்லியோ!)
ii) அம்மா கையால செய்யும் அடை-அவியல்,புளிஉப்புமா,பொரிச்ச குழம்பு,தாளகம் & etc etc
iii) நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)

13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?

i) எம் எஸ் அம்மாவோட ‘குறையொன்றுமில்லை’, மஹாராஜபுரத்தோட ‘ஜகதானந்தகாரகா’, ரஞ்ஜனி & காயத்ரியோட ‘என்ன சொல்லி அழைத்தால்’
ii) சுப்பிரமணியபுரத்துலேந்து "கண்கள் இரண்டால்"
iii) ஹே ஹேனதோ யாசுதே! - குரு(ஹிந்தி)ல வரும் அருமையான கஸல்

14) பிடித்த மூன்று படங்கள்?

i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்
ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)
iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?

i)திருப்தியான மனசு
ii)மனசை வருடும் அருமையான சங்கீதம்
iii)கல்லிடை, தாமிரபரணியின் நினைவுகள் & ரசிப்புத் தன்மை உள்ள நண்பர்கள்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

i) மன்னார்குடி மைனர் - ஒவ்வொரு வார்த்தைலையும் சுவாரசியம் சேர்க்க கூடிய சுவாரசிய திலகமான இவர் எழுதினார்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். அற்புதமான ‘கலா’ரசிகர் இவர்(இந்த இடத்தில கலா என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்பதை ரசிகமணி அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்)..:)

ii) சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா - எங்க ஊர் பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி லாபுக்கு அப்புறம் அக்காவோட அடுக்களைதான் பல ஆய்வுகள் கண்ட ஒரு இடம். எப்போதும் “குங்குமபூ போண்டா செய்வது எப்பிடி?”னு எழுதும் இவர் “குங்க் ஃபூ பாண்டா” படத்துக்கு விமர்சனம் எழுதர மாதிரி நினைச்சுண்டு இந்த பதிவை நம்ப அக்கா எழுதனும்னு கேட்டுக்கறேன்.அக்காவோட கோஷ்டில இருக்கரவா எல்லாரும் இதை தொடர்ந்து எழுத ஆரம்பிச்சா 2 வருஷத்துக்கு எழுத ஆட்கள் வெச்சுருக்கா. (அடுத்த எலெக்ஷன்ல 'இலுப்பகரண்டி' சின்னத்தோட சிங்கப்பூர்ல நிக்க போகர்தா கேள்விப்பட்டேன்!..:) Based on your international readers, you can write it in english.

iii) மாதங்கி - 'ஓலை குடிசை! ஒற்றை ஜன்னல்!திடீரென்று மின்னல்!'னு கவிதை எழுதி எல்லாரோட கழுத்தை அறுக்கும் ஆட்களுக்கு நடுல இவா எழுதும் எழுத்து நடையே ஒரு கவிதை மாதிரி இருக்கும். ‘மேம் சாஃப்!’னு ரொம்ப மரியாதையா இவாளை கூப்பிடுவேன். "மேம் சாஃப்! இந்த பதிவை உங்க ஸ்டைல்ல நீங்க எழுதி அதை நாங்க எல்லாரும் படிக்கனும்

Thursday, June 2, 2011

அம்மா புடவை

மொத்தமே 4 அடி உயரம் கூட இருக்கமாட்டா அந்த மாமி. சதாசர்வகாலமும் மடிசார் புடவைதான் கட்டிண்டு இருப்பா. கொஞ்சம் கூட ஒரு படாடோபமே இல்லாதைக்கி ரெண்டு கைலயும் ஒரே ஒரு வளையல் தான் போட்டுண்டு இருப்பா. 60 வயசுனு சொல்லர்துக்கு இல்லாம 3 பேர் பாக்கர ஆத்து வேலையெல்லாம் தனி ஆளாவே பாத்துடுவா. அவாத்து மாமா வாத்தியார்(புரோகிதர்). அவாத்துல சட்னி எல்லாம் அரைச்சதுக்கு அப்புறம் தாளிச்சு கொட்டர்துக்கு கவலையே படவேண்டாம் கடுகையும் உளுத்தம்பருப்பையும் மாமாவோட முகத்துல போட்டாலே வெடிச்சுடும், அந்த அளவுக்கு கோபமே வராத மனுஷர். 6 பிள்ளைகள் 5 பொண்கொழந்தேள் 13 பேரன்கள் 12 பேத்திகள் ஆறு கொள்ளுப்பேரன்/பேத்திகள்னு பெரிய சம்சாரி.

இவ்ளோ பேர் இருந்தாலும் அந்த மாமி யார்கிட்டயும் அளவுக்கு அதிகமா பாசம் வைக்கமாட்டா. எல்லாரும் அவாளுக்கு ஒன்னுதான். அந்த மாமி பேசர்தை எல்லாம் பாத்தாக்க எதோ யோகி மாதிரி நமக்கு தோணும். விஷக்காய்ச்சலே வந்தாலும் அசராம 4.30 மணிக்கு வாசல் தெளிப்பா. அவாளோட மனோ வலிமை அசாத்யமானது. எனக்கு அந்த மாமியை ரொம்ப பிடிக்கும். என்னோட அம்மா மாதிரி உரிமையா அவாள்ட பேசுவேன். துண்டை கட்டிண்டு உடம்பு பூரா விபூதி இட்டுண்டு பண்டாரம் மாதிரி இருக்கும் என்னை பாத்தாக்க அந்த மாமிக்கும் சிரிப்பு சிரிப்பா வரும். ஆவணியாவட்டம் அன்னிக்கி வாத்யார் மாமாவை நமஸ்காரம் பண்ண போனா இந்த மாமி வாத்யார் மாமாவோட பையை நோண்டி ஒரு பத்து ரூபாயை அவருக்கு தெரியாம எட்டா மடிச்சு பழத்தோட அடில வச்சு ஆசையா தருவா. அவாத்து மாமா பூஜை பண்ணும் கோவிலுக்கு கொழக்கட்டை பண்ணினா தனியா 2 எடுத்து வெச்சுருந்து அவாத்தை நான் தாண்டி போகும் போது "இங்க வாடா கோந்தை"னு கூப்பிட்டு தருவா. அந்த மாமி ரொம்ப பிரமாதமான ருசியோட பண்ணியும் இருக்கமாட்டா, ஆனாலும் ஆசையோட அவா தரும் போது வாங்கிக்கவே ரொம்ப ஆசையா இருக்கும்.

சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா சந்தான பாக்கியம் இல்லாத ஒரு அம்மாவுக்கு ஒரு குழந்தையை பார்க்கும்போது அவாளோட கண்ணுல ஒரு அழகான வாத்சல்யம் தெரியும். வெறும் குங்குமம் மட்டுமே இட்டுக்கும் இந்த மாமியோட வதனத்திலும் அந்த பூரிப்பை உணர்ந்ததுண்டு.

அம்மா - எல்லா சாமானையும் எடுத்து வச்சுண்டையாடா? சோப்புடப்பா எடுத்துவைச்சையா? பெங்களூர்ல எப்போதுமே தனுப்பா இருக்குமாமே, ஸ்வட்டரும் ஷாலும் வெச்சுக்கோடா கோந்தை!

அப்பா - எப்போதும் குளுந்து விரைச்சாக்க பனியன் ஜட்டி எல்லாம் எப்பிடி காயும்? கூட ரெண்டு பனியன் ஜட்டி வெச்சுக்கோடா! பெரியவன் கொஞ்சம் கோவக்காரன், அவன் எதாவது சொன்னாக்க, சரி!னு கேளு! அவனை படுத்தாதைக்கி இரு! துட்டை பாத்து செலவழி!

அம்மா - சின்னவன்கிட்ட கோபப்படாதே! சத்தம் போடாதே!னு பெரியன்ட சொல்லி இருக்கேன் நீயும் சமத்தா இரு கோந்தை! துட்டை பத்தி பாக்காதே! வேளாவேளைக்கு ஒழுங்கா வயிறு நிறைய சாப்பிடு.

அப்பா - பட்டாசாலைக்கு போய் உம்புள்ளை என்னத்தையோ தூக்கிண்டு வருது பாருடீ!

மேல சொன்ன சம்பாஷனை எல்லாம் அடியேன் பெங்களூர் கிளம்பும் போது அம்மாப்பாட்ட இருந்து வந்தது. சம்பாஷனைக்கு நடுல கர்மஸ்ரத்தையா நான் தூக்கிண்டு வந்து பை உள்ள வெச்சுண்டது எங்க அம்மாவோட பழைய காட்டன் புடவை. இத்தனை வயசுக்கு அப்புறம் புடவைல தாச்சுண்டா பெங்களூர்ல இருக்கரவா எல்லாம் கேலி பண்ணமாட்டாளா கோந்தை?னு கேட்டுண்டு இருக்கும் போது அவளோட கண்ணுல ஜலம் வர ஆரம்பிச்சாச்சு. (வலது கண்ணுக்கு தெரியாம இடது கண்ணால எங்கையாவது கண்ணீர் விட முடியுமோ? அவள் கண் லவலேசம் மாறும் போதே நேக்கும் தெரிஞ்சாச்சு..)

ராத்ரி தூங்கர்துக்கு அம்மாவோட புடவையை விடவும் செளகர்யமான ஒரு வஸ்து லோகத்துலேயே கிடையாது. ராத்ரி படுக்கைல படுத்துண்டு அம்மா புடவையை மோந்து பாத்த உடனே ரம்யமா ஒரு தூக்கம் வரும் பாருங்கோ! அதுக்கு ஈடுஇணை கிடையாது. நன்னா பெருக்கி மொழுகின மண்வாசனை வீசும் கொல்லம் செங்கல் தரையும் அம்மா புடவையும் இருந்தாக்கா தூக்கம் வராதவாளுக்கு கூட வரும். அதனால தான் பெங்களூருக்கும் அதை தூக்கிண்டு போனேன். அதுல தாச்சுண்டா அம்மா மடில படுத்துக்கர மாதிரி ஒரு திருப்தி கிட்டும்.

போன வருஷம் தோஹாவுக்கு வந்த புதுசுல தனியா ஒரு வீட்ல தூக்கி போட்டுட்டா. பெரிய சூரப்புலியாட்டமா தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி அந்த வீட்டை ஒத்துண்டாச்சு ஆனா பேச்சுதுணைக்கு ஒருத்தரும் இல்லாம, சண்டை போட்டு செல்லமா 4 அடி குடுக்க அண்ணாவும் இல்லாம கோட்டி பிடிச்ச மாதிரி ஆயிடுத்து. அங்க இருந்த டிவியை நோண்டி பாத்ததுல ஒரே ஒரு ஹிந்தி சேனல் வந்தது. ராத்ரி சாப்டுட்டு படம் பார்க்க உக்காசுண்டா 'தாரே சமீன் பர்' அமீர்கான் நடிச்ச படம் போட்டான். அதுல ஒரு புள்ளையாண்டான் நம்பளை மாதிரியே படிக்காம ஊரை சுத்திண்டு தத்தாரியா வந்ததை பாத்த உடனே "என் இனமடா நீ"னு சொல்லிட்டு சுவாரசியமா பார்க ஆரம்பிச்சா அந்த புள்ளையாண்டனும் சரியான அம்மா கோண்டு!..:)



அம்மா கோண்டு....:)

ஆஹா இவன் நம்பளை அழவிட்டுருவான் போலருக்கே!னு நினைச்சுண்டு இருக்கும் போதே அந்த செல்லபையனை ஹாஸ்டல்ல விட்டுட்டு போகர்துக்கு மனசே இல்லாம அந்த அம்மா கார்ல போக, இந்த பக்கம் ஹாஸ்டல்ல அவாளோட செல்லக்குட்டி விக்கி விக்கி அழ, ஒரு பாட்டை வேற போட எல்லாத்தையும் பாத்த நம்ப மனசுல இடி! கண்ணுல மழை! ஓஓஓஓஓ!னு அழ ஆரம்பிச்சவன் தான் . அது ஏன் எல்லா சோதனையும் கடைசில பிறக்கும் கொழந்தேளுக்கே வருது?னு நினைச்சு நினைச்சு ஒரே அழுகை. ஒரு மாதிரி அந்த பையன் அவனோட அம்மாட்ட சேந்ததுக்கு அப்புறம் தான் மனசு சமாதானம் ஆச்சு.

மூனு நாள் முன்னாடி அம்மாட்ட போன்ல பேசிண்டு இருக்கும் போது, “வாத்யாராத்து மாமி போய்ட்டா கோந்தை!”னு எங்க அம்மா சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது. கம்ப்யூட்டர் திரைல யாரோ ஜலத்தை வாரி விட்ட மாதிரி இருந்தது. என்ன??னு யோசிக்கும் போதே என்னோட கன்னத்துல தாரை தாரையா சில துளிகள் தரையை நோக்கி ஓடிண்டு இருக்கு. அப்புறம் என்ன? மூக்கு சிந்தி நிம்மதியா அழர்துக்கு ‘நின்னையே கதி என்று’ பாத்ரூமை தஞ்சம் அடைஞ்சேன்.

எல்லாம் இந்த அம்மா புடவையால வந்தது........................