Sunday, March 29, 2020

சைனா வைரஸ்

அமெரிக்கால டிரம்ப் ‘சைனா வைரஸ்’னு சரியாதான் சொல்லியிருக்கார். இதை கேடுட்டு சப்பைமூக்கனுக்கு ஒரே கோபம் ‘அதெப்படி சைனா வைரஸ்னு சொல்லலாம், அதான் அழகா லக்ஷணமா “கொரோனா”னு சாஸ்த்ரோக்தமா நாமகரணம் பண்ணியிருக்கே!’னு சப்பைகட்டு கட்டரான். கடங்கார சப்பைமூக்கன் எல்லா ஊர்லையும் பரப்பி விட்டுட்டு “எங்க ஊர்ல இப்ப சரியாயிடுத்து நீங்களும் எங்களை மாதிரி செத்து செத்து விளையாடுங்கோ!”னு உபதேசம் பண்ணிண்டு இருக்கான். நம்ப ஊர்ல இருக்கும் ‘ரெட்லைட் ஏரியா ஏஜண்ட்ஸ்’ அதான் மீடியாகாரா சீனாவிடமிருந்து உலகம் கற்கவேண்டிய பாடம் என்ன?னு ஆர் எஸ் பாரதி சொன்ன மாதிரியே ‘தொழில்’ பண்ணிண்டு இருக்கா. இது போதாதுனு கேரளாவில் பினராயி விஜயனுக்கு வேற கால் அமுக்கி விடவேண்டி இருக்கு. உலகத்துல எங்க இழவு விழுந்தாலும் முதல்ல சீதகம் கேரளாகாரனுக்கு தான். ஏன்னா அவன் டீகடை வைக்காத இடமே கிடையாது. வைரஸ்/பாக்டீரியா/காச்சல்/கபம்/லூஸ்மோஷன் எல்லாத்துக்கும் அவன் எப்போதும் தயாரா இருப்பான். நயவஞ்சகமா அவன் ஊர்ல இருக்கர தமிழ் நாட்டு தொழிலாளிகளை அவசரம் அவசரமா ஊருக்கு அடிச்சு விரட்டிண்டு இருக்கான். நம்பாத்து குப்பையை மொத்தமா எடுத்து பக்கத்தாத்துல போட்டாசுன்னா நம்ப வீடு சுத்தமாதானே இருக்கும், இந்த ஜோலியைதான் சேட்டன் பாத்துண்டு இருக்கான். மருத்துவமனை கழிவு எல்லாத்தையும் வண்டில ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து கொட்டர்து & ஆம்புலன்ஸ்ல ஆட்களை ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து இறக்கிவிடர்து, காசர்கோட்ல இருக்கும் கொரொனா கேஸ்களை ‘மங்களூர்ல போய் சிகிச்சை பாருங்கோ!’னு அனுப்பி வைக்கர்துனு 24 மணி நேரமும் நயவஞ்சக வேலைதான். இந்த மானம் கெட்ட பொழப்புக்கு பீத்தல் ஒரு கேடு. இத்தாலி இத்தாலினு இத்தனை நாளா பீத்தீண்டு இருந்தா, இப்ப தான் புரியுது அங்க ஒரு தாலியும் இல்லைனு. பாஸ்தாவும் பிசாவும் திண்னதுதான் மிச்சம் வரிசையா 50 பேர் ஆஸ்பத்திரிக்கு போனா அங்க கையும் ஓடலை காலும் ஓடலை. ஏதோ இருக்கர மிச்சம்மிஞ்ஜாடி மருந்தை வெச்சு வைத்தியம் பாத்துண்டு இருந்தா இப்ப அதுக்கும் வழி இல்லாம போயாச்சு. ஆஸ்பத்திரி ரொம்பி வழிஞ்சு உள்ள போகவே இடம் இல்லாம பாதிபேர் ஆஸ்பத்திரி வாசல்ல இருக்கும் மரத்தடில இருக்கா இது போதாதுனு பாதிபேருக்கு சலூன்ல முடிவெட்டிக்க வந்தவா மாதிரி ஒரு போர்வையை மட்டும் போர்த்தி நாற்காலில உக்காத்தி வச்சுருக்கா. இந்த லட்சணத்துல இத்தாலியை போல இந்தியாவும் நிலைமையை சிறப்பா கையாளனும்னு தெருமுருகன் காந்தி (எ) டேனியல் ஒப்பரி வெச்சுண்டு இருக்கான். உலக அளவுல இந்தியா நல்லமுறையில் தான் கையாண்டுவருகிறது. இந்திய அளவில் தமிழக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. முக்கியமாக நம்ப சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல்ல இந்த உலக சுகாதார நிறுவனத்தை வெளுக்கனும். நவம்பர்லையே தைவான்காரன் ஐ.நா-ல போய் ‘பக்கத்தாத்துல(சீனா) ஏதோ பிரச்சனை மாதிரி இருக்கு! எல்லாரும் கட்டிபிடிச்சு அழுதுண்டு இருக்கா! என்னனு கேளுங்கோ!’னு புகார் சொன்னா அதை சரியா ஜாரிக்காம சப்பைமூக்கன் சொன்னதை அப்படியே திருப்பி வாங்கி ‘ஒன்னும் பிரச்சனை இல்லையாம்! பேசிண்டு தான் இருக்காளாம்!’னு முழு பூசணிக்காயை மறைச்சதோட விளைவு உலகத்துக்கே ‘ஹேப்பி நியூ இயர்’ ஆயிடுத்து. எதையோ அடுத்து வேட்டிக்குள்ள விட்டுண்ட கதையா பாரிஸ் மேயர் பிப்ரவரில “சப்பைமூக்கனை கட்டிபிடிப்போம்!”னு ஒரு டிரெண்டிங்கை டிவிட்டர்ல ஆரம்பிச்சு வெச்சு, “நீங்களும் ஆளுக்கு ஒரு சப்பைமூக்கனை கட்டிபிடிச்சு முத்தா குடுத்து போட்டோ போடுங்கோ!”னு கிளப்பிவிட்டான். அங்க இருக்கும் பைத்தியங்களும் கட்டிபிடிச்சு போட்டோ போட்டு முடிக்கும் போது ஊரோட கொரொனா உற்சவம் ஆரம்பிச்சு கட்டிப்பிடிச்சவன் எல்லாருக்கும் மறுபத்து கழிஞ்சு அடுத்த மாசத்துலேந்து மாசியம் வரபோகர்து. நம்ப ஊர்ல பிரதமர் முன்னாடியே சுதாரிச்சுண்டு, ‘அமையசமைய ஆத்துக்குள்ள இருங்கோ! இல்லைனா எல்லாருக்கும் ஒரே சமயத்துல வைகுண்டப்ப்ராப்தி கிடைச்சிடும்!’னு சொல்லி எச்சரிச்சாலும் ஒருத்தனும் அடங்கர்தா இல்லை. பால் வாங்க போறேன்! பழம் வாங்க போறேன்!னு பைக்கை எடுத்துண்டு சுத்தர்துகள். இந்த மாதிரி வெளில சுத்தரவா எல்லாரையும் ஒரு ஸ்பெஷல் ப்ளைட்ல ஏத்தி இத்தாலிக்கு அனுப்பிட வேண்டியது தான். நிறைய வீடுகள்ல ‘work from home’ என்பது ‘work for home’-ஆ ஆயிண்டு இருக்கு. ‘சும்மா மவுசை தெய்க்கர்துக்கு பதிலா எனக்கு ரெண்டு பத்துபாத்ரம் தேச்சு தந்தா என்ன?’ ‘இப்ப பிரேக் சமயம் தானே வாஷிங்மெஷின்ல துணியை போடுங்கோ!’ ‘அஞ்சாவது விசில்ல குக்கரை ஆப் பண்ணுங்கோ!’ மாதிரியான ஒர்க் அலகேஷன் ஆயிண்டு இருக்கு. ஆத்துக்குள்ள சும்மா இருக்கும் போது பொழுதுபோகர்துக்கு நிறையா வழிகள் இருக்கு. தங்கமணிக்கு சமையல்கட்டுல கொஞ்சம் ஒத்தாசையா(சமையல்ல மட்டும்) இருங்கோ! ஏப்ரல் 15 வரைக்கும் வீட்டுக்குள்ள உயிரோட நடமாடனும்னு ஆசையிருந்தா தேவையில்லாத விவாதம் எதையும் தங்கமணிகிட்ட ஆரம்பிக்காதீங்கோ! அவாளுக்கு தான் கத்தி எங்க இருக்கு கரண்டி எங்க இருக்குனு நன்னா தெரியும். முக்கியமா அவா அப்பாவையோ அண்ணா/தம்பியையோ திட்டாதீங்கோ. கோரோனா பயம் ஜாஸ்தி ஆச்சுனா உங்களோட கல்யாண கேசட்டை/சிடியை எடுத்து ஒரு தடவை போட்டு பாருங்கோ! ‘இவ்ளோ பெரிய ஆபத்தையே பாத்துட்டோம் இதையும் தாண்டி வந்துடலாம்’னு மனசுல ஒரு தைரியும் வரும். அனேகமா இந்த சைனீஸ் வைரஸோட அட்டகாசம் முடிஞ்சு கைஜோசியக்காரா எல்லாரும் வேற ஜோலி தான் பாக்கணும். அவனவனுக்கு கை அலம்பி அலம்பியே ரேகை காணாம போயிடுத்து. நான் அலம்பிண்டு இருக்கர அலம்புக்கு இனிமே ஆர்தோ டாக்டர் எக்ஸ்ரே இல்லாம என்னோட கைல எலும்பு சரியா இருக்கானு பாக்கலாம் அந்த நிலைமைல இருக்கு. இதுக்கு நடுல என்னோட தங்கமணி “சும்மா வந்து வந்து கை அலம்பர்துக்கு பதிலா இட்லி குக்கர், பால்பாத்ரம் நு ஒவ்வொன்னா தேச்சு வைக்கலாம் இல்லையா”னு சவுண்ட் குடுப்பதால் அடுத்த பதிவுல பாக்கலாம்.

Wednesday, March 11, 2020

கொரோனாவும் மாமியாரும்

எல்லாம் இந்த சைனாகாரனால வந்தது! தண்டவாளத்துல போகும் ரயிலையும்பறக்கர்துல ப்ளைட்டையும் தவிர எல்லா கருமத்தையும் திண்ணா கரோனா/கரீனா/ மரீனா எல்லா மண்ணாங்கட்டியும் வரத் தான் செய்யும்.  டிராபிக் சிக்னல்ல முன்னாடி இருக்கும் டொயோட்டா கரோலா காரோட பின்பக்கம் அதோட பேரை எழுத்து கூட்டி வாசிக்க பாத்தா கொரோனானு வாசிக்கர அளவுக்கு கொரோனா பீதி எல்லா இடத்துலையும் பரவி இருக்கு. யாரைபாத்தாலும் கொரோனாவே பேச்சு. நாங்க இருக்கும் ஊர்ல ஏற்கனவே 13 நாடுகள்லேந்து வரும் விமானத்தை நிறுத்தியாச்சு இப்ப போதாகுறைக்கு பள்ளிக்கூடத்தையும் காலவரையின்றி மூடியாச்சு. இந்தியால விழிப்புணர்ச்சியை கொண்டு வரேன் பேர்வழினு எல்லா பயலுகளும் பீதியை கிளப்பிவிடறானுங்க. முந்தா நேத்திக்கி ஸ்கூல் மூடியாச்சுனு சொன்னவுடனே எல்லாபயலுகளும் சாயங்காலமே கடைகன்னிகள்ல புகுந்து வண்டிவண்டியா சாமான் வாங்க ஆரம்பிச்சுட்டா. நானும் தங்கமணியும் வழக்கமா போகும் கடைல எப்போதும் அத்வைதாவும் விஷ்வஜித்தும் கண்ணாம்பூச்சி விளையாடர அளவுக்கு விஷ்ராந்தியா இருக்கும்பில் போடும் பிலிபைன்ஸ் பொண்ணு கிட்ட ‘ஒன்னோட தோடு நன்னா இருக்கே’னு செளஜன்யமா பேசிண்டே வேலைபாக்கர அளவுக்கு காத்தாடிண்டு இருக்கும். திடீர் பீதிலஎதோ கல்யாணமண்டபம் மாதிரி ஜேஜே!னு கூட்டம். என்னவோ ஒரு வருஷத்துக்கு மகாபாரதத்துல வரும் அஞ்யாத வாசம் பண்ண போகரவா மாதிரி வண்டிவண்டியா சாமான்அனேகமா நூடுல்ஸ் பாக்கேட் இனிமே சைனாலேந்து ஸ்டாக் வந்தாதான் உண்டுனு சொல்லும் படியா 4 டஜன் நூடுல்ஸ்25 சேஷே சூப்பால்பவுடர் 10 கிலோனு லிஸ்ட் போயிண்டு இருந்தது. அரிசி பருப்பு ஜாஸ்தியா வாங்கினா பரவாயில்லைகாணாதுகண்ட மாதிரி டிஷூ பேப்பர் ரோலை எல்லாரும் ஒரு டஜன் வாங்கி வண்டில அடுக்கி வச்சுருந்தா.  ‘அடுத்த ஒரு வாரத்துக்கு பஞ்சாயத்துபோர்ட்ல ஜலம் வராதுனு எதாவது சொல்லியிக்காலா என்ன?  ‘சுந்தரபாண்டியபுரத்து தேங்கா எண்ணெய் பக்ஷணத்தை மொத்தமா வாங்கிண்டு போகர மாதிரி ஒரு டஜன் டிஷூ பேப்பர் டப்பாவை வச்சு ஆத்துல என்ன பண்ணுவா!’னு தங்கமணி கிட்ட கேட்டதுக்கு வழக்கம் போல ‘வாயைமூடிண்டு வாங்கோ!’னு சொல்லிட்டா.

இங்க இருக்கர கூட்டம் பத்தாதுனு நிறையா பேர் அவாளோட தோழர்/தோழிக்கு எல்லாம் போன் போட்டு ‘கடைக்கு போய் சாமான் வாங்குங்கோ!’னு சமூகபணி ஆத்திண்டு இருந்தா. நம ஊர்ல இருக்கர மாதிரி, “மாசி மாசம் ரெண்டாம் செவ்வாய் கிழமை ஆத்துக்காரியோட தங்கைக்கு ப்ளூ கலர் சுடிதார் வாங்கி குடுங்கோ! உங்களுக்கு மச்சினியே இல்லாட்டியும் ஒன்னுவிட்ட மச்சினிக்காவது எடுத்து குடுத்தே ஆகனும்! குடுக்காட்டி அடுத்த ஜென்மத்துலையும் உங்களுக்கு இதே ஆத்துக்காரிதான் வருவா! னு தலைல பாறாங்கல்லை போடற மாதிரி ஒரு மெசேஜை அனுப்பிட்டு மேற்கொண்டும் “உண்மையான தமிழனா இருந்தா இதை 50 பேருக்கு ஷேர் பண்ணு!”னு வாட்ஸப்ல புரளியை கிளப்பி விட்டா அடுத்த நாளே மாமியாரத்துலேந்து தேடிண்டு வந்துடுவா. வக்கில்’வண்டு’ முருகனையே கூட்டிண்டு வந்தாலும் ஜாமின்ல வரமுடியாது. இத்தாலில எல்லாரோட தாலியையும் அறுத்துண்டு இருக்கு. இந்த ரணகளத்துக்கு நடுல கேரளாவுல ஒரு சேட்டன் குடும்பம் இத்தாலிக்கு போய் ஊர் சுத்திட்டு வந்துருக்காகொச்சின் ஏர்போர்ட்லையும் மொட்டையா ‘ஞான் ஐரோப்பா டூர் போய் வந்து!’னு சொல்லிட்டு ஊரை பாத்து போயிட்டா. இப்ப பார்த்தா 12 டிக்கெட்டுக்கு கொரோனாவாம் என்னத்தை சொல்ல. இந்தியாவுக்கு எல்லா வைரஸும் இத்தாலிலேந்து தான் இறக்குமதி ஆகர்து.




இதுக்கு நடுல எங்க மாமியார் நேத்திக்கி சாயங்காலம் வீடியோ கால் பண்ணி தங்கமணிகிட்ட பேசிண்டு இருக்கும் போது நடுல என்னை பாத்துட்டு “மாப்ளே! ஆபீஸ்ல இனிமே யாரையும் கட்டிபிடிச்சு முத்தம் குடுக்காதீங்கோ! எல்லா இடத்துலையும் ஒரே இன்பெக்ஸனா இருக்காம்!”னு சொல்லி அவாளோட பங்குக்கு கிளப்பி விட்டுட்டா. ‘ எனக்கு தெரியாம ஆபீஸ்ல யாரை கட்டிபிடிச்சுண்டு இருக்கேள்?னு தங்கமணி முறைக்க, ‘அய்யையோ நான் யாரையும் கட்டிபிடிக்கலை!’னு தங்கமணியை சமாதானம் பண்ணர்துக்குள்ள போதும்டா சாமி!னு ஆயிடுத்து. போன தடவை ஊருக்கு போகும் போது எங்க மாமியார் சொன்ன துபாய் புடவையை மறந்துட்டேன் வாஸ்தவம் தான் அதுக்காக இப்படியா கோர்த்துவிடுவாகொரோனாவால உலகப் பொருளாதாரமே அடி வாங்கும் போது இந்த அப்பாவி தக்குடு எம்மாத்திரம்!  ஐ நா சபைல பேசி சீக்கரம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு எடுங்கோ!