Thursday, January 24, 2013

லைப் ஆஃப் பை

சினிமாவை தியேட்டர்ல போய் பாத்த காலம் எல்லாம் பிரெஞ்சு தாடியோட பழைய சைக்கிளை ஓட்டிண்டே ‘அந்த வருஷம்’னு ஆரம்பிக்கும் சேரன் மாதிரி பழைய நினைவுகள்ல தான் தேட வேண்டியிருக்கு. ‘பூவே உனக்காக’ படத்துக்கு அம்பாசமுத்திரம் அபிராமி தியேட்டர்ல எங்க தெரு மாமிகள் கூட ‘ஜான் பிள்ளை’ கோட்டால துணைக்கு போயிட்டு விக்ரமனோட க்ளைமாக்ஸ் வசனத்துக்கு மாமிகள் எல்லாம் புழிய புழிய அழுததை பாத்த போது அவாத்து மாமா ஏன் இவாளை சினிமாவுக்கு தனியா அனுப்பி வச்சானு புரிஞ்சது. சினிமா பாத்தே தீரனும்னு கொசமுட்டிண்டு அலையர அளவுக்கு பைத்தியம் இருந்தது இல்லை. எப்பையாவது முட்டினா தப்பினா சினிமா போகர்து வழக்கம். பெண்களூர் போனதுக்கு அப்புறம் கூட விவேக் நகர்ல இருக்கும் பாலாஜி தியேட்டர்ல தான் படம் பாக்க நானும் எங்கண்ணனும் போவோமே தவிர பி வி ஆர்/ஐனாக்ஸ் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டோம். வாசல்ல இருக்கும் செக்யூரிட்டி கைல தீவட்டி மட்டும் தான் இருக்காதே தவிர கொள்ளையடிக்கர்துல அவாளை மிஞ்சமுடியாது. எங்க ஊர் தியேட்டர்ல சாப்பிடர மாதிரியே அச்சு முருக்கும் கடலை மிட்டாயும் ஒரு தடவை கொண்டு போனேன். இதெல்லாம் உள்ள கொண்டு போககூடாதுனு சொல்லி வாசல்லையே வாங்கி வச்சுட்டா. பாப்கார்னை 60 ரூபாய் குடுத்து வாங்கர்துக்கு மனசு வராததால, ஏகாதசி விரதம் இருக்கும் யெச்சுமி பாட்டி மாதிரி ஜலம் கூட குடிக்காம படம் பாத்துட்டு நாங்க வெளில வந்தது ஞாபகம் இருக்கு.

தோஹா வந்ததுக்கு அப்புறம் சுத்தமா டேமை இழுத்து மூடின கர்னாடகா மாதிரி தியேட்டர் பக்கமே போகாம, பக்த பிரகலாதால ஆரம்பிச்சு ஆரண்யகாண்டம் வரைக்கும் ஆன்லைன்ல பாத்து பொழுதை போக்கிண்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ காலிடா மாப்ளே!னு எங்க அண்ணா பயம்குடுத்தின மாதிரி எதுவும் ஆகாம தங்கமணிக்கும் சினிமால பற்று/வரவு எதுவுமே இல்லை. இருந்தாலும் விடாம எதாவது பழைய படத்தை எடுத்து ஆன்லைன்ல போட்டு பாப்போம். இப்படியே ஒரு வருஷத்தை ஓட்டியாச்சு. இந்த நிலைமைல இருந்த போது தான் கல்யாணம் கழிஞ்சு ஒரு வருஷத்துல ஒரு சினிமாவுக்கு கூட தியேட்டர் கூட்டிண்டு போனது இல்லையா?னு மனசாட்சியே மைண்ட்வாஸ்ல பேச ஆரம்பிச்சுடுத்து. அதுக்காக அலெக்ஸ்பாண்டியன் வகையறா படங்களுக்கு கூட்டிண்டு போய் நேரத்தையும் மனசையும் பழாக்க மனசு இல்லை. இந்த சமயத்துல தான் என்னோட தங்மணியோட தோழி ‘லைப் ஆஃப் பை’ படம் பாத்துட்டு வந்து ‘எப்பிடி இருந்தது தெரியுமோ!’னு கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு மினி பயாஸ்கோப் எங்காத்து ரேளில வந்து ஓடினா. எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்னோட ரியாக்ஸன் பாக்கர்துக்கு மேடம் அமைதியா இருந்தாங்க. எப்பிடியாவது இந்த ஆப்புலேந்து எஸ்கேப் ஆகர்துக்காக 'இவாளோட கண் & முகபாவத்தை வச்சு பாக்கும் போது இவாளுக்கு கதகளி தெரியுமோனு தோணர்து! உனக்கு என்ன தோணர்து?னு கேட்டேன். ‘வெஸ்ட் மாம்பலத்துலேயே நல்ல மாப்பிள்ளைக்கு எங்க அப்பா என்னை கல்யாணம் பண்ணி வச்சுருக்கலாம்னு தோனர்து’னு சொல்லிட்டு முகத்தை அந்த பக்கமா வெட்டிண்டா.

வேற வழியே இல்லாம அடுத்த நாள் சாயங்காலம் 7 மணி காட்சிக்கு படத்துக்கு போகலாம்னு சொல்லி கூட்டணி கட்சியை சமாதானம் பண்ணும்படியா ஆயிடுத்து. அடுத்த நாள் தியேட்டர்ல டிக்கெட் கவுண்டர்ல போய் டிக்கெட் விலையை பாத்தா ஷாக் ஆயிடுத்து. உள்ள இருந்த பிலிபினோ பொம்ணாட்டி கிட்ட ‘இங்க போட்டு இருக்கர்து ரெண்டு பேருக்கா?’னு வெக்கமே இல்லாம சந்தேகம் கேட்டேன். 'ஒரு ஆளுக்கு தான் ஆனா உங்களுக்கு போட்டுண்டு பாக்கர்துக்கு 3டி கண்ணாடி தருவோம்'னு சொன்னா. 'எங்களுக்கு கண்ணாடியும் வேண்டாம் காதுமெஷினும் வேண்டாம்னு சொன்னா கொஞ்சம் குறைச்சுப்பேளா?'னு திருப்பி கேட்டதுக்கு அற்ப பதரே!னு சொல்ற மாதிரி மொறச்சா. ஒரு வழியா தியேட்டர் உள்ள போயாச்சு. எங்காத்து ரேளி மாதிரியே நானும் தங்கமணியும் மட்டும் தான் இருந்தோம். ரெண்டே ரெண்டு பேருக்கு படம் போடுவானானு தெரியலையே! படம் போடலைனா பைசாவை திருப்பி தருவா இல்லையோ!னு சந்தேகம் கேட்டுண்டு இருந்தேன். அந்த சமயம் 3 பையன்கள் சகிதமா ஒரு தம்பதிகள் தியேட்டர்குள்ள வந்தா. எங்க ஊர்ல ஆடி பதினெட்டுக்கு தாமிரபரணிக்கு தூக்குசட்டில புளியோதரை கட்டி கொண்டு போகும் கோமா மாமி மாதிரி ஒரு பெரிய பாலிதீன் பை நிறையா பாப்கார்ன்,சிப்ஸ்,பப்ஸ்,பெப்ஸி & இன்ன பிற ஐயிட்டங்கள் சகிதமா வந்து இருந்தா. அதுக்கு அப்புறம் ரெண்டு நண்டு சிண்டுகள் சகிதமா ஒரு குடும்பம் & ஒரு வெள்ளக்கார தம்பதிகள்னு நாலு மனுஷா வந்தா.




கரெக்டா சொன்ன நேரத்துல படத்தை ஆரம்பிச்சுட்டான். படத்தை சுருக்கமா சொல்லனும்னா, பாண்டிச்சேரில ரெண்டு பையன்கள் இருக்கா அவாளோட அம்மா அப்பா ஒரு ஜூ-வை வச்சு நடத்திண்டு இருக்கா. இளைய பையன் உம்மாச்சி யாரு? உம்மாச்சினா என்ன?னு ஞானப்பழம் மாதிரி கேள்வி கேட்டுண்டு கிருஷ்ணால ஆரம்பிச்சு அல்லா வரைக்கும் எல்லா உம்மாச்சியையும் கும்பிடரான். காதல் தேசம் படத்துல அப்பாஸுக்கும் வினித்துக்கும் அக்கா மாதிரி இருந்த தபு இந்த படத்துல அம்மாவா வரா. உள்ளூர் ஜிம்ல கர்லாகட்டை சுத்தரவர் மாதிரி இருக்கும் பையனோட தாய்மாமா நீச்சல் சொல்லிகுடுக்கரார். நம்ப ஊர்ல யாருமே துணையா இல்லைனு சொல்லிட்டு பையனோட அப்பா ஜூ-வை வித்துட்டு அங்க இருக்கும் குரங்கு சிங்கம் புலி சகிதமா கனடாவுக்கு போகர்துனு முடிவு பண்ணரார். போகர வழில புயல் வந்து கப்பல் கவுந்து எல்லாம் பரலோகம் போகும்படியா ஆகர்து. படகுல தப்பிக்க பார்க்கும் நம்ப கதானாயகன் யாரோ ஒருத்தர் தத்தளிக்கர மாதிரி இருக்கர்தை பாத்துட்டு டியூப் டையர் போட்டு படகுக்கு இழுத்தா அது பெங்கால் புலி. சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுண்ட கதையா ஆயிடுத்தேனு ரொம்ப பீல் பண்ணி அதை விரட்டி விடர்துக்கு முயற்சி பண்ணினாலும் மனசு கேக்க மாட்டேங்கர்து. அந்த புலியை கூட வச்சுண்டு ரொம்ப நாளைக்கு கடல்ல பிரயாணம் பண்ணி பிள்ளையாண்டான் எப்பிடி கரை சேரரான் அப்பிடிங்கர்துதான் கதை.

நானும் தங்கமணியும் பார்த்த முதல் 3டி படம் இதுதான் அப்பிடிங்கர்தால ரெண்டு பேருமே பட்டிக்காட்டான் யானையை பாத்த மாதிரி ஆச்சரியமா பாத்தோம். எங்க ஆபிஸ்ல உள்ளவா எல்லாம் ஜெயா டிவில வரும் ஆன்மீக வர்ணனையாளர் ஸ்ரீகவி ‘திருமலையான் வேஏஏஏஏஏங்கடவன்!னு இழுத்து இழுத்து பேசர மாதிரி நிதானமா தான் இங்க்லிபீஷ் பேசுவா, ஆனா இந்த படத்துல இங்கிலீஷ் வசனங்கள் ரொம்ப வேகமா இருக்கர்தால பக்கத்து சீட்ல இருந்த வெள்ளைக்காரி சிரிக்கும் போதெல்லாம் நானும் சிரிச்சு ஒப்பேத்திண்டு இருந்தேன். சில சமயம் வெள்ளக்காரி சிரிக்காத எடுத்துல கூட கொஞ்சம் சிரிச்சு ‘வாட் இஸ் தாட்? வாட் இஸ் தட்?’னு அவாத்துகாரர்கிட்ட கேட்கும்படியா பண்ணியாச்சு. நடுல நம்ப பையன் மிருதங்கம் வாசிச்சுண்டே பரதம் ஆடர ஒரு பொண்ணை சைட் அடிக்கர சீன் வந்த போது எனக்கு சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியலை. கெக்கெபிக்கேனு தனியா சிரிச்சுண்டு இருந்தேன். இதுல சிரிக்கர்துக்கு என்ன இருக்கு?னு கேட்கரமாதிரி தங்கமணி என்னை பாத்தா. கல்லிடை அம்பை சம்பந்தமான ஒரு காதல் காவியத்துல இது ஒரு முக்கியமான சீன் அப்பிடிங்கர்து எனக்கு மட்டும் தானே தெரியும். அது ஏன் இந்த மிருதங்கம் வாசிக்கர பசங்க எல்லாம் டான்ஸ் ஆடர பிகர்களுக்கு நூல் விடரா?னு டவுட் கேட்டதுக்கு ‘புளுபுளுனு பேசாம படத்தை பாருங்கோ!’னு சொல்லிட்டா.

படம் ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு, முக்கியமா கடல்ல வச்சு படமாக்கின பயணக்காட்சிகள்,தனித் தீவு,திமிங்கலம் மேல வரும் காட்சி,தேவாங்கு மாதிரியான பிராணி உள்ள தீவு எல்லாமே டாப் டக்கர். 3டில பாக்கர்தால பறவை நம்ப பக்கத்துல பறந்து போகர்து,குரங்கு நம்ப பக்கத்துல வந்து போகர்து,புலி நம்ப மேல பாயரமாதிரி வரர்துனு எல்லாமே அதிசயமா இருக்கு. புலி பாய்ஞ்சு பாய்ஞ்சு வரும் போது எல்லாம் மேடம் என்னோட சீட்டை பிடிச்சு உலுக்கிண்டு இருந்தாங்க. படம் பாத்துட்டு திரும்பி கார்ல வந்துண்டு இருக்கும் போது, ‘புலி நம்ப மேல பாயவரமாதிரி இருக்கும் போது உங்களுக்கு பயமாவே இல்லையா? நம்ப பக்கத்துல இருந்த வெள்ளக்கார தம்பதிலையும் வெள்ளக்காரிதான் கத்தினா வெள்ளக்காரர் கத்தவே இல்லையே’னு அடுக்கிண்டே போனாங்க. ‘கல்யாணம் கழிஞ்ச ஆம்பளேலுக்கு சிங்கம் புலி பாயர்து கோபமா உலுக்கர்து எல்லாம் ஏற்கனவே பழகின விஷம்கர்தால பயப்படமாட்டா’னு நான் பதில் சொன்னதுக்கு அப்புறம் புயலுக்கு முந்தைய அமைதி கார்ல நிலவியது.

Thursday, January 17, 2013

அவுத்து விட்ட கழுதை 5

Part 4


குருவாயூர் போயிட்டு வந்து நாலு நாள் கல்லிடைல இருந்தோம். எங்க ஊர்காராளுக்கு அவாத்து விஷயம் ஒரு வண்டி இருந்தாலும் அடுத்தாத்து சமாசாரங்கள்ல அலாதி பிரியம். 'ஏதுடா தக்குடு! ஆத்துக்காரியை கூட்டிண்டு எதாவது ஊருக்கு போயிட்டு போயிட்டு வந்துண்டு இருக்கை? எதாவது வீடு/கீடு/இடம் வாங்கராப்ல இருக்கையோ?'னு பொழுதுபோகாத பக்கத்தாத்து மாமி பல்ஸ் பாக்கர்த்துக்கு முயற்சி பண்ணினா. 'ஆமாம் மாமி! பாபனாசம் போகர வழில நடுகாட்டுல 2 கிரவுண்ட் இடம் சகாய விலைல வந்துருக்கு அதைதான் போய் போய் பாத்துட்டு வந்துண்டு இருக்கோம்'னு சொன்னதுக்கு அப்புறம் சத்தம் காட்டாம இடத்தை காலி பண்ணினா. ஊருக்கு போன சமயம் நம்ம ப்ளாக் நண்பர் துபாய் ராஜாவும் இந்தியா வரர்தா இருந்தது. கல்லிடைல வந்து மீட்பண்ணறேன்னு சொல்லியிருந்தார் ஆனா கடைசில லீவு கிடைக்காததால வரமுடியலை பாவம். திடீர்னு ஒரு நாள் நான் வீட்ல இல்லாத நேரம் போன் பண்ணி 'துபாய் ராஜா சிங்கபூர்லேந்து பேசரேன்'னு எங்கம்மாகிட்ட சொல்லியிருக்கார். 'தக்குடு ராத்ரி சாப்பிடர்துக்குதான் ஆத்துக்கு வருவான் அப்ப பண்ணுங்கோ!'னு சொல்லி அம்மா போனை வச்சுருக்கா. ‘பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைனாலும் தோஹா மந்திரி/துபாய் ராஜா/கனடா ராஜகுமாரினு பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’னு எங்கப்பா சாப்பிடும் போது சொல்ல ஆரம்பிச்ச உடனே ‘ஆஹா எந்த பயபுள்ள போன் பண்ணிச்சு தெரியலையே?’னு யோசனையா இருந்தேன். கரெக்டா நம்ப துபாய் ராஜா போனை போட்டு அதை எங்கப்பா எடுத்துட்டு ‘இந்தாடா தோஹா ராஜா! துபாய் ராஜா லைன்ல இருக்கார் வந்து பேசு!’னு நக்கல் அடிச்சதுல என்னோட தங்கமணிக்கு பரமதிருப்தி.


துபாய் ராஜாவும் நானும் ஒரு நாற்பது நிமிஷம் பேசி இருப்போம். தங்கமான மனுஷன் குழந்தை மாதிரி பேசினார். பேசி முடிச்சுட்டு பெருமையா ‘ஐயாவுக்கு சிங்கபூர்லேந்து கால் பண்ணி பேசரா பாத்தியா?’னு பார்வையாலையே அம்மா/அப்பாவை ஒரு லுக்கு விட்டேன். ‘முக்கால்மணி நேரமா பேசர்தை பாத்தா கால் சிங்கம்பட்டிலேந்து வந்த மாதிரினா இருக்கு’னு சொல்லி க்ளீன் போல்ட் ஆக்கினது அப்பா தான். நானும் ரிச்மெண்ட்லேந்து கவினயா பேசினாக! கனடாலேந்து இட்லிமாமி பேசினாக! அபுதாபிலேந்து அனன்யா பேசினாக! சொன்னாலும் நம்பர்துக்கு யாரும் தயாரா இல்லை. ரைட்டு விடு நம்ப முகராசி அப்பிடி!னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். ஊர்ல இருக்கரவரைக்கும் கல்யாணம்/காதுகுத்து இந்த மாதிரியான விஷேஷங்களோட மகிமை நமக்கு தெரியர்து இல்லை, வெளி நாட்டுல எங்கையாவது வசமா சிக்கினதுக்கு அப்புறம் தான் லீவுல ஊருக்கு போகும் போது ‘எவனாவது கல்யாணம்/காட்சினு எதாவது வைக்கனும் கடவுளே! அறுபதாம் கல்யாணமா இருந்தா கூட ஓக்கேதான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறேன்னு வேண்டிகிட்டு போவோம். என்னோட கல்யாணத்துக்கு போன வருஷம் ஊருக்கு வரும்போது கூட ‘ஹைய்யா ஜாலி கல்யாணம்!’னு ஊருக்கு கிளம்பி போனபோது, ‘பாவம்! உலக நடப்பு தெரியாம விட்டில்பூச்சியா இருக்கானே இந்த பிள்ளை!’னு தோஹால இருக்கும் மாமாக்கள் எல்லாம் வருத்தப்பட்டா.


மதுரைல ஒரு ப்ளாக் நண்பருக்கு கல்யாணம். மதுரைல போய் கல்யாணத்துக்கு போனா அங்க ப்ளாக் மனுஷா ஒருத்தரையும் காணும். ‘திருப்பதில பாம்பு வந்த கதையை எட்டணா போஸ்ட் கார்டுல எழுதி 80 பேருக்கு போஸ்ட் பண்ணின மாதிரி எல்லாருக்கும் காப்பி பண்ணி மெயில் அனுப்பினையேடா ஒருத்தரும் வரலையா!’னு ஹீன குரல்ல மாப்பிள்ளைகிட்ட கேட்டேன். ‘எல்லாரும் கடைசி சமயத்துல கவுத்திட்டா! ஜானுவாசத்துல பால்பாயாசம் விடுவானு சொன்னதால முகூர்தத்துக்கு வரவேண்டிய அனன்யாக்கா ஜானுவாசத்துக்கே வந்துட்டு போய்ட்டா!’னு பொலம்பினான். தெரிஞ்சமனுஷா யாராவது இருந்தா அவா கழுத்தை அறுக்கலாம்னு பாத்தா ஒருத்தரும் இல்லை. அப்புறமென்ன, இலை போடரவரைக்கும் யாரோ ஒரு மெட்ராஸ் மாமா என்கிட்ட மொக்கை போட்டுண்டு இருந்தார். முந்தின நாள் சாயங்காலமே மதுரையோட செல்லக்கிளி மீனாட்சியை போய் தரிசனம் பண்ணிட்டு வந்துட்டதால மத்யானமே திருச்சிக்கு கிளம்பினோம். ரெங்க நாத ஷேத்ரத்துல நம்ப அம்பத்தூர் கீதா மாமி சமீபத்துல தான் குடிவந்துருக்கர்தா கேள்விப்பட்டதால மாமியாத்துக்கு போலாம்னு முடிவு பண்ணினோம். திருச்சிலேந்து ஸ்ரீரெங்கம் வந்து பாலம் தாண்டும் போது தான் போன் பண்ணி மாமி உங்காத்துக்கு வர எந்த பஸ் ஸ்டாப்ல இறங்கனும்னு கேட்டா. அம்மா மண்டபத்துல இறங்கு தக்குடு!னு பதில் வந்தது. புரட்சித்தலைவி இந்த தொகுதியை ஏன் தேர்தெடுத்தார்னு அப்பதான் புரிஞ்சது.


ஒரு ஆட்டோவை பிடிச்சு கீதாபாட்டியாத்தை கண்டுபிடிக்க முயற்சி பண்ணினேன். ‘ஒரு ஏ டி எம் மெசின் இருக்கு பாரு! அப்புறம் ஒரு கல்யாண மண்டபம்! ரைட் சைடுல ஒரு முடுக்கு!’னு மாமி போன்ல சொல்லிண்டே வந்தா. ‘எல்லாம் இருக்கு மாமி உங்க அபார்ட்மென்ட் எங்க இருக்கு அதை சொல்லுங்கோ!’னு கேட்டேன். ஒரு வழியா கல்யாணமண்டபத்துக்கு எதிர்பக்க கட்டிடம் வந்தது. கீழ இறங்கி செக்யூரிட்டி கிட்ட இங்க ஒரு பாட்டி மெட்ராஸ்லேந்து....னு ஆரம்பிக்கர்துக்குள்ள ‘மாமா சொன்னதையே கேக்காம தொணதொணனு பேசிண்டே இருப்பாங்களே அந்த பாட்டியா?’னு கரெக்டா கேட்டார். அவரே தான்னு கன்பார்ம் பண்ணிண்டு அவாத்துக்கு போனா மாமிக்கும் மாமாவுக்கும் பரமசந்தோஷம். திடீர்னு ரெங்கம் ஸ்தல புராணம் சொல்ல ஆரம்பிச்சுட்டா. சுமாரா முக்கால்மணி நேரம் பேசி முடிச்சதுக்கு அப்புறம் ‘இப்ப நேரம் இல்லை அதனால சுருக்கமா சொல்லிட்டேன்’னு அந்த மாமி சொல்லும்போது தங்கமணி மிரண்டு போய் இருந்தா. அப்புறம் ரூம்ல போய் குளிச்சு திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை தரிசனம் பண்ணர்துக்கு ரெடி ஆயிண்டு இருந்தபோது, ‘ஏஏஏ அப்பா! அந்த மாமி எவ்ளோ விஷயம் சொல்லறா!’னு ஆச்சர்யப்பட்ட தங்கமணி கிட்ட ‘இதெல்லாம் அந்த மாமிக்கு ஜுஜூப்பி! காசில ஆரம்பிச்சு ராமேஸ்வரம் வரைக்கும் தலபுராணம் சொல்லுவா. சிலசமயம் எல்லாத்தையும் ஒரே சமயத்துல சொல்ல முயற்சி பண்ணி நம்பளையும் சேர்த்து குழப்பி விட்டுருவா அதுதான் கொஞ்சம் பிரச்சனை! ஆனா அந்த மாமிக்கு இருக்கும் சுறுசுறுப்பு யாருக்கும் வராது! புதுசு புதுசா விஷயம் கத்துக்க குழந்தை மாதிரி ஆசைபட்டு கத்துப்பா. எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துண்டு நம்ப மேல பாசம் காட்டுவா!’னு சொன்னேன்.



ரெங்கனின் கோபுரம்


திருவானைக்கா கோவில் ரொம்ப பெரிசா இருந்தது. உள்ள போக போக வந்துண்டே இருந்தது. தாடங்க மகிமை உள்ள ஷேத்ரம் அப்பிடிங்கர்து இதோட சிறப்பு. சுவாமி அனுக்கிரஹத்துல கூட்டம் இல்லாம இருந்ததால ஒரு தடவை லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லி பிரார்த்தனை பண்ணமுடிஞ்சது. பஞ்சபூத ஸ்தலத்துல இது ஜல ஸ்தலம். ரொம்ப நேரம் கோவில்ல தான் இருந்தோம். அதுக்கப்புறம் கீதாமாமியாத்துக்கு திரும்பி வந்தோம். மாமியாத்து மாடிலேந்து பாத்தா ஒரு பக்கம் உச்சிபிள்ளையார் கோவில், ஒரு பக்கம் ரெங்கனாதர் கோவில் கோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம் & ஒரு பக்கம் காவிரி ஆறும் தெரியர்து. அடுத்த நாள் காத்தால சீக்கரமே கிளம்பி கோவிலுக்கு போகனும்னு முடிவு பண்ணினோம். அர்த்தராத்ரி 3.30 மணிக்கே எழுந்து குளிச்சுட்டு மாமா/மாமி கிட்ட சொல்லிண்டு கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சோம். கோவில் ரெங்கா கோபுரம் வாசல்ல நீளமா ஒரு க்யூ. எனக்கு ரூபாய் குடுத்து அந்த வரிசைல போய் சாமி பாக்கர்துல உடன்பாடு கிடையாது. அதனால எந்த கோவில் போனாலும் கொஞ்ஜம் நேரம் ஆகும். வரிசைல ஊர்ந்து ஊர்ந்து போகும்போது ஒரு லோக்கல் மாமா ப்ரெண்ட் ஆனார். ஒரு கைடு மாதிரி அவர் எல்லா விஷயமும் சொல்லிண்டே வந்தார். அந்த ஊர்ல கீதா மாமி குடும்பம் & அந்த கோவில் மாமாவோட உபகாரம் ரொம்ப செளகர்யமா இருந்தது. கடைசில ஸ்ரீரெங்க நாயகனையும் ஸ்ரீரெங்க நாயகியையும் கண்குளிர தரிசனம் பண்ணினோம்.


அதுக்கு அப்புறம் மிச்சம் இருந்த நாட்களை கல்லிடை மெட்ராஸ்னு கழிச்சுட்டு தோஹா கிளம்பி வந்தாச்சு! பொறுமையா ஐந்து பாகம் அவுத்துவிட்ட கழுதையை படிச்சு ஆதரவு குடுத்த எல்லா அன்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

Thursday, January 10, 2013

அவுத்து விட்ட கழுதை 4


Part 1 Part 2 Part 3


கல்லிடைல போய் இறங்கின சமயம் தாமிரபரணில நிறைய ஜலம் இருந்தது. பாத்ரூம்/பக்கெட்/பிளாஸ்டிக் மஃக்னு பழகி போன மெட்ராஸ் வாசியான என்னோட சரிபாதியை கூட்டிண்டு ஆத்தங்கரைக்கு கிளம்பியாச்சு. ‘ஆத்தங்கரை மரமே! அரசமர இலையே! ஆரம்பிச்சு ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’ வரைக்கும் இந்த ஆத்தங்கரைல எடுத்த பாட்டுதான் தெரியுமா?னு தாமிரபரணி மகாத்மியத்தை சொல்லிண்டே குளிக்கர இடத்தை அடைஞ்சோம். ஸ்படிகமா இருந்தது ஆத்தங்கரை ஜலம். சுகமா ஒரு குளியலை போட்டேன். திடீர்னு ஒரு அலறல், என்னடாப்பானு திரும்பி பாத்தா மேடம் தான் கத்தினது. ‘நீங்க மீன் கடிக்காது சொன்னேளே’னு பரிதாபமா கேட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ‘எங்காத்து பொண் பரமசாது’னு உங்க அப்பா கூட அள்ளிவிட்டார் நான் நம்பலையா?’னு மனசுக்குள்ள நினைச்சுண்டேன். இதே மாதிரி தான் சில வருஷங்களுக்கு முன்னாடி என்னோட கல்லிடை வந்த கிண்டி மாமாவும் மீன்கடிக்கு பயந்து துள்ளிகுதிச்சு ஓடினார். குளிச்சுட்டு வரவழில கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பச்சை நிறமே பச்சை நிறமேனு பாடும்படியா இருந்தது. வானத்தோட நீல நிறம், நடுல நடுல கொஞ்சம் வெள்ளை மேகம், தூரத்துல தெரியும் ஆத்தங்கரை பாலத்துல ஊர்ந்து போகும் பஸ்/லாரி, இதமான பொதிகைமலை காற்றுனு ரொம்ப ரம்மியமா இருந்தது.


ஆத்தங்கரை போகும் வழி


வர வழில எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி வட்டிக்காரன் மாதிரி என்னை பிடிச்சுண்டுட்டா. ‘ஏ தக்குடு எப்பிடி இருக்கை? உங்க ஊர்ல எல்லாரும் செளக்கியமா? பெங்களூர்ல நம்பாத்து ஜனனியை மடிவாலால வச்சு பாத்தையாமே?’னு வரிசையா பேசிண்டே இருந்தா. ‘ஆமாம் மாமி! உங்காத்து பொண்ணரசியை பாத்தேன். நம்ப ஊர்ல இருந்த வரைக்கும் கத்திரிக்கா நறுக்கர நைஃப் மாதிரி இருந்தா இப்ப பெங்களூர்ல கத்ரினா கைஃப் மாதிரி இருக்கா’னு நானும் மூச்சு விடாம பதில் சொல்லிட்டு நகர்ந்தேன். போய் இறங்கி ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள நானும் தங்கமணியும் குருவாயூர் கிளம்பியாச்சு. குருவாயூர் போகனும்னு ரொம்ப வருஷமாவே நினைச்சுண்டு இருந்தேன், போதாக்குறைக்கு மேடமும் இந்த வருஷம் குருவாயூர் கூட்டிண்டு போவேளா?னு கேக்கவும் டபக்குனு டூர் ப்ளான்ல சேர்த்துட்டேன். திருனவேலி போய் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ல ஏறியாச்சு. காத்தால அஞ்சு மணிக்கே எனக்கு முழிப்பு வந்துடுத்து. வெளில நன்னா மழை பெஞ்சுண்டு இருந்தது. எல்லாரும் தூங்கிண்டு இருக்கும் போது தனியா உக்காச்சுண்டு ஜென்னல் வழியா வேடிக்கை பாத்துண்டு வரர்து ஒரு தனி சுகம். அதுவும் அதிகாலை பொழுதா இருந்தா கேக்கவே வேண்டாம். காத்தால ஆறு இருபது மணிக்கு குருவாயூர் ஸ்டேஷன் வந்துருந்து.

பரபரப்பே இல்லாத சின்ன அழகான ஊர் குருவாயூர். ரயில்வே ஸ்டேஷன்லேந்து கோவில் ரொம்ப பக்கத்துல தான் இருக்கு. ஆட்டோ பிடிச்சாலும் இருபது ரூபா தான் ஆகர்து. புக் பண்ணி வச்சுருந்த ரூமுக்கு போய் மடமடனு குளிச்சு நான் ரெடி ஆயிட்டேன். ஒரு வழியா அரைமணி நேரத்துல அம்மணியும் ரெடி. புது வேஷ்டி, அங்கவஸ்திரம், கோபி சந்தனமுமா நின்னுண்டு இருந்த என்னை பத்து வினாடி மேடம் கண்கொட்டாம பாத்தாங்க. நானும் பெருமை தாங்காம ‘என்ன அசப்புல பாக்கர்த்துக்கு பாலக்காட்டு மாதவன் மாதிரி இருக்கா?’னு அங்கவஸ்திரத்தை சரிபண்ணிண்டே கேட்டேன். ‘பஞ்சவாத்ய கோஷ்டில ஜெண்டமேளம் வாசிக்கரவர் மாதிரி இருக்கு’னு சொல்லிட்டு ஒரு நக்கல் சிரிப்பு. இந்த பொம்ணாட்டிகளே இப்படித்தான் மனசால ரசிச்சதை வாய் நிறைய பாராட்டவே மாட்டா. ஆம்பளேள் தான் லூசு மாதிரி ‘தேவதையா இருக்கை! அப்பிடியே அள்ளிண்டு போராடா!’னு தகுதிக்கு மீறி பாராட்டிடறோம். ‘சரி சரி விடுடா சூனா பானா! உன்னோட அழகு யாருக்கு வரும்!’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டு கிளம்பினோம்.


பூ கோலம்


ஓணத்துக்கு 2 நாள் முன்னாடி நாங்க குருவாயூர்ல இருந்ததால எங்க பாத்தாலும் ஒரே பூ கோலமா இருந்தது. பொம்ணாட்டிகள் தலை நிறையா பூ வச்சுண்டா ஒரு தனி அழகுதான்னு சொல்லிண்டே ஆசையா ஒரு முழம் பூ வாங்கி தரலாம்னு பூக்காரர்ட விலை கேட்டா அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயோட மதிப்பை சொன்னார். இதுக்கு மேல வாங்கிதரலைனா ‘ஒரு முழம் பூ வாங்கி தர வக்கு இருக்கா?’னு தங்கமணி கேட்காட்டாலும் பூக்காரர் கேட்ருவார்னு பயந்து அவருக்கு தண்டம் அழுதேன். கேரளா கோவில்களுக்கே உண்டான தனிச்சிறப்பு அதோட கட்டுப்பாடுகள் தான். கோவில் விதிகளை யாருக்காகவும் விட்டுக்குடுக்கமாட்டா. யாரா இருந்தாலும் ஒரே ஒரு வரிசை தான். சினிமா தியேட்டர் மாதிரி 50 ரூபாய் வரிசை 300 ரூபாய் வரிசை அங்க கிடையாது. வரிசைல போகக்கூடிய ஆட்கள்ல பாதி பேர் கைல எதாவது ஒரு உம்மாச்சி புஸ்தகம் இருக்கு. வளவளனு வம்பு பேசிண்டு போகக்கூடியது நாம மட்டும் தான். அதே மாதிரி சுத்தமா குளிச்சு, நெத்தில சந்தனம் குங்குமம் இட்டுண்டு, கோடி வஸ்த்ரம் கட்டிண்டு பயபக்தியா வரும் மக்களை பாக்கர்துக்கே ஆசையா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வரிசை நகர்ந்து சன்னதிக்குள்ள போனோம். சுந்தரவதனன் மயில்பீலி அசைய மஞ்சள் பட்டாடை பளபளக்க பூமாலைகள் சூடி தீப ஒளியில் குழந்தையாய் காட்சி அளித்தான். சிலவினாடிகள் சில யுகங்கள் பெறும்னு சொல்லும்படியா சில வினாடிகள் கண்ணில் தோன்றி மறைந்த அந்த மாயாவியின் அழகில் மயங்கித் தான் போனோம்.

வெளில வந்ததுக்கு அப்புறம் ஒரு ஹோட்டல்ல ஆகாரம் பண்ணிட்டு ரூமுக்கு போய் டிரெஸ் மாத்திண்டு பக்கத்து ஊரான பாலக்காட்டுக்கு கிளம்பினோம். பாலக்காட்டுல எனக்கு தெரிஞ்ச ஒரு ஸ்னேகிதர் இருக்கார். பஸ்ஸோட சைஸ்லையும் இல்லாம மினிபஸ் அளவுக்கு சின்னதாவும் இல்லாம மத்யமமான ஒரு சைஸ்ல நாங்க போன பஸ் இருந்தது. தகரடப்பா மாதிரி பஸ் இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல வில்லனை துரத்தும் ஹீரோ மாதிரி சிட்டா பறந்தது வண்டி. போகர வழில ரோட்ல யாராவது அகஸ்மார்த்தா கஷ்கத்தை சொறியர்துக்கு கையை தூக்கினா கூட டிரைவர் உடனே ஒரு ஸ்டடன் ப்ரேக் போட்டு ‘வா வா!’னு அழைக்கரார். போகும் வழி முழுக்க காடும் மலையுமா இருக்கு. ஊருக்கு உள்ள இருக்கும் வீடுகளை காட்டிலும் கிராமங்களுக்கு நடுல வரும் மொரட்டு பங்களா வீடுகள் கண்களை மிரட்டர்து. வளைகுடா நாடுகளோட வளமை அந்த வீடுகள்ல பிரதிபலிக்கர்து. பாலக்காட்டுல யாராவது ‘போனாமாக்கும்,வந்தோமாக்கும்’னு பாலக்காடு ஸ்டைல்ல பேசிண்டு இருக்காளானு காதை தீட்டி வச்சுண்டு போனேன். பாலக்காட்டுல இருக்கும் போது தோஹால இருக்கும் ஒரு அக்காவையும் நம்ப அனன்யா அக்காவையும் நினைச்சுண்டே இருந்தோம்.

பாலக்காட்டுல சாயங்காலம் வரைக்கும் நண்பர் ஆத்துல பேசிண்டு இருந்துட்டு மறுபடியும் குருவாயூர் கிளம்பி வந்தோம். அடுத்த நாள் காத்தால 4 மணிக்கு முன்னாடி சுவாமி தரிசனம் பண்ணனும்னு நினைச்சோம் ஆனா செல்போன் அலாறம் அடிக்காம அழிச்சாட்டியம் பண்ணி ஏழு மணிக்கு போகும்படியா ஆயிடுத்து. மலபார்ல இருக்கும் எல்லா நகைகடை விளம்பரத்துலையும் வரும் அழகிகள் மாநாடு எதாவது நடக்கர்தோ!னு நாங்க வாயை பொழக்கும்படியா தங்கத்துல மாங்காமாலை தேங்காமாலை காசுமாலை போட்ட ஏகப்பட்ட கல்யாணஜோடிகள் கோவில் வாசல்ல கல்யாணம் பண்ணிக்க செட்டு செட்டா நின்னுண்டு இருந்தா. ‘என்னோட கையை நன்னா கெட்டியா பிடிச்சுக்கோ! எதாவது ஓமணக்குட்டி கூட்ட நெரிசல்ல என்னை ஆத்துக்காரர்னு நினைச்சு கூட்டிண்டு போயிடபோரா!’னு தங்கமணிக்கு எச்சரிக்கை பண்ணினேன். ‘ஓசில குடுத்தாலும் உங்களை ஓமணக்குட்டியோட அம்மா கூட திரும்பிபாக்கமாட்டா!’னு பதில் சொல்லி பழிப்பு காட்டினா. அதுக்கு அப்புறம் பக்கத்துல இருக்கும் ஆனைக்கோட்டைக்கு போனோம். திரும்பின பக்கம் எல்லாம் யானையா இருந்தது. சுமாரா 50 - 60 யானை பாத்து இருப்போம். யானை,ரயில் & வானவில் இதை எல்லாம் எத்தனை தடவை பாத்தாலும் அலுக்காது. யானை ஷவர் பாத் எடுக்கர்து,ஊசி போட்டுக்கர்து,மம்மு சாப்பிடர்து,விளையாடர்துனு எல்லா வேடிக்கையையும் பாத்துண்டு இருந்தோம்.

அடுத்த போஸ்ட்ல மதுரை திருச்சி போன கதை என்னாச்சுனு பாப்போம் கேட்டேளா!