Thursday, March 17, 2011

மூக்கும் முழியுமா......III

உம்மாச்சி ப்ளாக்ல புது போஸ்ட்



Part 1 Part 2 படிச்சாதான் யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)

வண்டி புறப்பாடு ஆகர்துக்கு தயார் ஆச்சு, யாரோ ஒரு வெள்ளக்கார ஏர்ஹோஸ்டஸ் வந்து எல்லாருக்கும் புளிப்புமிட்டாய் குடுத்தா, நிறைய ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ! எதுக்கு எல்லாரும் மசக்கயா இருக்கர மாதிரி புளிப்புமிட்டாய் குடுக்கரா!!னு எனக்கு யோஜனையா இருந்தது, இருந்தாலும் குடுத்த காசுக்கு நம்மோட ஷேரை விட்டுடகூடாதுன்னு “மைக்கெல் மதன காமராஜன்”ல வரும் வரதுகுட்டி மாதிரி 2 புளிப்புமிட்டாய் எடுத்துண்டேன். புளிப்புமிட்டாய்க்கு வால் புடுச்சுண்டே அடுத்தாப்ல ஒரு கொழந்தை லெமன் ஜூஸ் குடுத்துண்டே வந்தது. அடராமா! ஏதுடா இது! சீமந்த விஷேஷ ஆத்துக்கு வந்தமாதிரி எல்லாம் ஒரே புளிப்பு வஸ்துவான்னா வந்துண்டு இருக்கு! அடுத்து என்னது மாங்காயும் நொக்கட்டான்புளியுமா?னு கேக்கலாம்னு வாயை திறக்கர சமயத்துல தான் லெமன் ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது.

தீவாளியோட Surname ஹரிலால்னு போட்டு இருந்தது (நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்). டம்ப்ளரை குடுத்துட்டு “தாங்க் யூ தீவாளி!”னு சொன்னேன். தினசரி வாழ்க்கைலையுமே இந்த மாதிரி நமக்கு உபகாரமா இருக்கரவாளை "ஏ தக்காளி!" "இந்தாப்பா கோலப்பொடி" "ஏ கீரை! இங்க வா!"னு சொல்லாமா அவாளோட பேரை சொல்லி கூப்பிடும்போது அவாளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். தீவாளியும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுட்டு போச்சு. எனக்கு பக்கத்துல இருந்த டவுசர்பாண்டியன் மட்டும் வைரமுத்துவா இருந்தா "தீவாளியின் கண்களோ மத்தாப்பூ! சிரிப்போ முத்துப்பூ! மொத்தத்தில் அவளே அழகின் முத்தாய்ப்பு!"னு கவிதை சொல்லி இருப்பார். நமக்கு தான் கவிதையே வராதே, அதுவும் போக பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்!னு லோகத்துக்கே தெரியும்(சந்தேகமா இருந்தா அகிலா மாமி கிட்ட கேளுங்கோ!). அதனால கிருஷ்ணா! ராமா!னு சொல்லிண்டு காதுல பஞ்சை வெச்சுண்டு சீட் பெல்ட்டை முதல் முயற்சிலயே வெற்றிகரமா போட்டுண்டு தயார் ஆனேன். வண்டி மெதுவா நகர ஆரம்பிச்சு அப்புறம் ஓட ஆரம்பிச்சு கடைசில பறக்கவும் ஆரம்பிச்சது.

நான் மெதுவா அல்லசல்ல யாரெல்லாம் இருக்கானு பாத்தேன். எனக்கு அடுத்து இருந்த நடைபாதைக்கு அடுத்து இருந்த வரிசைல எனக்கு நேர ஒரு குடும்பம் உக்காச்சுண்டு இருந்தது. அதுல இருந்த ரங்கமணி, தங்கமணி & குட்டீஸ் அச்சு அசலா ஒரு NRI-கு உண்டான எல்லா லக்ஷணங்களோட இருந்தா. ஆத்தங்கரைல இருக்கும் தும்பிக்கையாழ்வார் மாதிரி அந்த ரங்கமணிக்கு வேழ முகம் இல்லையே தவிர பேழை வயிறு (அதனால தான் புளிப்பு மிட்டாய் குடுக்கறாளோ?). ஜூஸை குடிச்ச உடனே கபார்னு தூங்க ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இருந்த டவுசர் பாண்டி Apple ஐபாடை பாடாபாடு படுத்திண்டு இருந்தார். என்னோட திரைல தேடி புடிச்சு ஒரு ஹிந்தி படம் பார்த்துட்டு நானும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.

நல்ல தூங்கிண்டு இருக்கும் போது யாரோ என்னோட கன்னத்தை தட்டி எழுப்பர மாதிரியும் “எச்சுஸ்மி சார்!”னு ஸ்வர சுத்தமா புல்லாங்குழல்ல ஊதற மாதிரி இருந்தது. கண்ணை முழிச்சு பாத்தா பரிவான முகத்தில் கனிவான சிரிப்போட நம்ப தீவாளி நிக்கர்து. நீங்க என்ன சாப்ட போறேள்?னு கேட்டது. கொட்டாவி விட்டுண்டே நளதமயந்தி மாதவன் மாதிரி “நோ பிஷ்! நோ எக்! நோ சிக்கன்/மட்டன்!”னு சொல்லிமுடிக்கவும் புன்சிரிப்போட போய்ட்டா. பிஸினஸ் கிளாஸ்ல உள்ளவாளுக்கு எல்லாம் “இன்னும் ஒருவாய்! இன்னும் ஒருவாய்! ஆஆஆஆ அம்ம்ம்ம்!னு சொல்லிண்டே ஊட்டியே விடுவா போலருக்கு! மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி.அவாளுக்கு சாப்பாடு குடுத்துட்டு போர வழில மெதுவா "ஒரே ஒரு வெஜ் இருக்கு! நீங்க வேணா சாப்டுங்கோ!"னு சொல்லிண்டே ஒரு ட்ரே நிறையா தந்தா. எனக்கு குடுக்கர்தை பாத்துண்டே டவுசர்பாண்டியனும் கண்முழிச்சுட்டார். மத்தவா எல்லாருக்கும் சாப்பாடு வர 20 நிமிஷம் ஆச்சு, நமக்கு மட்டும் ஸ்பெஷல்..:) டவுசர்பாண்டியன் பரபரப்பான குரல்ல "என்னோட சாப்பாடுல வடை இல்லையே!"னு முதல் தடவையா தமிழ்ல பேசினார். “வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு?”னு மனசுல சொல்லிண்டே கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.



ஆஹாரம்....:)

சாப்பாடு எல்லாம் நன்னா தான் இருந்தது, இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயம். அர்த்தராத்ரில நன்னா வடையும் வெண்பொங்கலும் நொசுக்கிட்டு அப்புறம் கலக்கி விட்ருத்துன்னா என்ன பண்ணர்து!!? சுச்சா போனாலே காலை அலம்பி 7 தடவை வாய் கொப்பளிக்கர நமக்கு கக்கா போய்ட்டு “பேப்பர்ல தொடச்சுண்டு வாங்கோ!”னு சொன்னா நன்னாவா இருக்கும், அதனால எக்காரணத்தை கொண்டும் ப்ளைட்ல கக்கா போககூடாதுன்னு சபதம் பண்ணின்டுதான் ப்ளைட்டே ஏறினேன். சாப்பிட்டு முடிஞ்ச உடனே அடுத்த காமெடி ஆரம்பமானது.

நல்ல 6 அடி உசரத்துல ஒரு வெள்ளக்காரி ஒரு 'ஐடக்கல்' வண்டியை தள்ளிண்டு வந்து ‘அரங்கேற்றவேளை’ பிரபு கிட்ட ‘சார் லட்ட்ட்ட்டுடுடு’!னு கேட்ட மாதிரி "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேட்டா. பந்தில பரிமாறர்த்துக்கு முன்னாடி வாழக்கா பொருத்துவல்ல கொஞ்சம் வாய்ல போட்டுப்பா,ரசத்துல கொஞ்சம் குடிச்சுப்பா,ஸ்வீட் & வடையை விண்டு வாய்ல போட்டு பாத்துப்பா, அதை மாதிரி இந்த வெள்ளைகாரியும் எல்லா சரக்குலையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பாத்துருப்பாளோ?னு ஒரு சம்சியம் எனக்கு. அவள் நெளுச்சுண்டு நின்ன ஸ்டைல் வேற அதை ஊர்ஜிதம் பண்ணரமாதிரி இருந்தது. பாட்டில் மூடியை மோந்து பாத்தாலே மயக்கம் போடற கேஸான நான் ஒரு டம்ப்ளர் தூத்தம் மட்டும் வாங்கி குடிச்சேன்.

அடுத்து நேர பக்கத்து சீட்டு ரங்கமணியை "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேக்க, அவர் ஏக்கமான முகத்தோட தங்கமணியை பாத்துண்டே ஷீணமான குரல்ல நோ! நோ!னு மறுத்தார். “மீசை வெச்ச ஆம்பிளையா இருந்தா க்ளாஸ்ல கையை வெச்சு பாருய்யா பாப்போம்!!”னு சொல்லற மாதிரி அவரோட தங்கமணி மொறச்சுண்டு இருந்தாங்க. ரயில்ல எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ? லூசுமாதிரி பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை ரிசர்வ் பண்ணினா இப்பிடிதான் ஆகும். என்கிட்ட ரிசர்வ் பண்ண சொல்லி இருந்தா 2 வரிசையே தள்ளி பண்ணிவெச்சுருப்பேன். டவுசர்பாண்டியன் மொடாக் குடியனா இருப்பார் போலருக்கு, எதோ தேர் திருவிழால நீர்மோர் குடிக்கர மாதிரி சுர்ர்! சுர்ர்!னு உரிஞ்சு தள்ளிட்டார். “இந்த ரேஞ்சுல சோடா கலக்காம குடிச்சேள்னா தோஹால நீங்க பிடிக்க வேண்டிய மினிசோட்டா ப்ளைட்டை வீல் சார்ல போய் தான் ஓய் பிடிக்கமுடியும்!”னு அவர் கிட்ட சொன்னதுக்கு அப்புறம் நிப்பாட்டினார்.

தங்கமணி மட்டும் பக்கத்துல இல்லைனா இந்த ரங்கமணிகள் வாழ்க்கையை எப்பிடி எல்லாம் அனுபவிக்கரா தெரியுமோ! மாமியை மெட்ராஸுக்கும், பெங்களூருக்கும்,கல்லிடைக்கும் அனுப்பி வச்சுட்டு தோஹால சில மாமாக்கள் அடிக்கர கொட்டம் சொல்லி முடியாது..:) ஒரு வழியா நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்தது, சாமான் செட்டை எல்லாம் எடுத்துண்டு இறங்கர இடத்துல டாடா சொல்லர்த்துக்கு நின்னுண்டு இருந்த தீவாளிட்ட “ரொம்ப சந்தோஷம் கோந்தை! அப்ப நான் போய்ட்டுவரேன்!”னு சொல்லிண்டு இப்பதான் இறங்கின மாதிரி இருக்கு, அதுக்குள்ள 1.5 வருஷம் முடிஞ்சாச்சு!!....:)

(கதை பலன் - யாரெல்லாம் கர்மசிரத்தையோட இந்த கதையை படிச்சுட்டு ஒழுங்கா கமண்டும் போடராளோ அவா போகும் ப்ளைட்ல நம்ப தீவாளி மாதிரி மூக்கும் முழியுமான பிகர் ஏர்ஹோஸ்டஸா வருவா. படிச்சது அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:) (சுபம்)

Thursday, March 10, 2011

மூக்கும் முழியுமா......II

Part I இவட நோக்கனும்

என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன். அவர் உடனே என்ன சொன்னார் தெரியுமோ?? ஆத்தங்கரைல ஜலம் நிறைய இருக்கா?னு மெதுவான குரல்ல கேட்டார். எனக்கு ஒன்னும் புரியலை. “எனக்கு வி.கே.புரம் தான் சார், முதல் தடவையா வெளி நாடு போறீங்களா?”னு கேட்டார். நான் ஆமா!னு சொல்லி முடிக்கும் போது ' நச்'னு சீல் குத்தி “பேஷா போய்ட்டு வாங்கோ!"னு சொல்லி பாஸ்போர்ட்டை கைல தந்தார். தோஹால டோலோத்ஸவம் நடத்தி வைக்கர்த்துக்கு போகும் கடையனல்லூர் பாகவதர் மாதிரி ‘U’ ஷேப்ல இருந்த என்னோட நெத்தி கோபியை பார்த்துட்டு இப்படி சொன்னாரோ?னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எது எப்பிடியோ தாமிரபரணி தாயார் மாதிரி எங்க போனாலும் கூட வந்து காப்பாத்தர்து மட்டும் நன்னா புரிஞ்சது.

அதுக்கு அப்புறம் செக்யூரிட்டி செக் எல்லாம் முடிஞ்சு வெயிட்டிங் ஹால்ல போய் அப்பாஆஆஅடா!னு உக்காசுண்டேன். வெயிட்டிங் ஹால் நன்னா கலகலப்பா இருந்தது. துபாய் விமானம் ஒன்னு அந்த சமயம் புறப்பாடு ஆயிண்டு இருந்தது இன்னொரு பக்கம் எதோ சிங்கப்பூர் ப்ளைட்ல ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்! ஜெய்ஷ்ரீ மிஸ்ஸிங்!னு ஸ்பீக்கர்ல ஏலம் போட்டுண்டு இருந்தா. லிப்தான்ஸா ஏர்வேஸ் சும்மா சொல்லக் கூடாது அடா! அடா! அடா! என்ன ஒரு கவனிப்பு!! என்ன ஒரு கவனிப்பு!! “தோஹா வழியா போறேள்னா என்னையும் செத்த இறக்கி விட்டுட்டு போவேளா?”னு கேட்டு பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா “மூக்கும் முழியுமா பால்கோவா நிறத்தோட வேற ஏர்லைன்ஸை சேர்ந்த க்ரவுண்ட் கண்ட்ரோல் பிகர் யாராவது வந்து கூப்டானு வெள்ளந்தியா பின்னாடியே போயிடாதீங்கோ!”னு எங்க மன்னி எனக்கு முன்னாடியே உபதேசம் பண்ணி அனுப்பி இருந்தா அதனால கேக்கலை. ஒரு வழியா என்னோட ப்ளைட்டொட நம்பரையும் குழாய்மைக்செட்ல சொல்லி நாங்களும் ப்ளைட் உள்ள போய் சீட் தேடி உக்காசுண்டோம். எனக்கு நடு வரிசைல வலது பக்க ஓரத்து சீட்டு.



லிப்தான்ஸா.....:)

சீட் ரிசர்வ் பண்ணும்போதே கொஞ்சம் நடுசென்டர்ல சீட் போடுங்கோ!னு சொல்லி இருந்தேன். ரொம்ப பின்னாடி போயிடுத்துன்னா அப்புறம் தெரு சாப்பாட்டு பந்தி நடக்கும் ஹாலோட முகப்புல தாம்பூல பையோட நின்னுண்டு “எல்லாம் திருப்தியா முடிஞ்சுதா? வயிறு நிறைய சாப்டேளா?”னு ஜாரிக்கரமாதிரி யாரெல்லாம் ‘கக்கா’ போகர்துக்கு அவசர அவசரமா போறானு கணக்கு எடுத்துண்டு இருக்கனும் & ப்ளைட் மேடுல ஏறி இறங்கும் போதெல்லாம் தூக்கி தூக்கி போடும், அதுக்காக ரொம்ப முன்னாடி போயிட்டோம்னா எதிர்த்தாப்ல வரும் ப்ளைட்காரனோட ஹெட்லைட் நம்ப மூஞ்சிக்கு நேர அடிச்சு ராத்ரி முழுசும் தூங்க முடியாது

அதுவும் போக நடுசென்டர்ல தான் கொஞ்சம் தெளிவான நீரோட்டம் இருக்கும்!னு சொன்னதால ‘கஷ்ஷ்ஷ்டம்!’னு கரிச்சு கொட்டிண்டே இந்த சீட்டை மன்னி எனக்கு ரிசர்வ் பண்ணி குடுத்தா. எங்க மன்னி இதுக்கு முன்னாடி ஒரு தடவை இதே மாதிரி பயங்கரமா ஆட்டம் போட்ட எங்க அண்ணாவுக்கு சத்தம் இல்லாம ஏர்-இண்டியால ரிசர்வ் பண்ணி வெச்சுட்டா. அங்க இருக்கும் ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அசப்புல பாக்கர்த்துக்கு ஒன்னு விட்ட 'ஆம்பூர்' அத்தைபாட்டி மாதிரி இருப்பா. ஏர்ஹோஸ்டஸ்புடவை & பன் கொண்டைல இருக்கர்துனால ‘அவுரங்காபாத்’ அத்தைபாட்டினு வேணும்னா சொல்லிக்கலாம். கத்தார் ஏர்வேஸ்ல எப்பிடி இருப்பானு இன்னும் தெரியாது, அதனால “போனா போகர்து மச்சினர் பொழச்சு போகட்டும்!”னு ஓரத்து சீட்டு பண்ணிகுடுத்தா.



அத்தைபாட்டி...:)

இருந்தாலும் டெக்னாலஜி இன்னும் இம்ப்ரூவ் ஆக்லைனு தான் நான் சொல்லுவேன். நம்ப டிக்கெட்டை ரிசர்வ் பண்ணும்போதே “கண்ண்ண்ணா லட்டு திண்ண ஆசையாஆஆ?”னு பேக்ரவுண்ட் வாய்ஸோட பக்கத்து சீட்ல யாரு முன்னாடி,பின்னாடி,அடுத்த சீட்ல யாரு இதெல்லாம் திரைல வந்தா எவ்ளோ செளகர்யமா இருக்கும்.( நான் சொல்லர்து கரெட்டுதானே ஷோபா மேடம்?). அல்லசல்ல யாரு வரானு நமக்கு ஒரு ஐடியா கிட்டுமே இல்லையா!!

எனக்கு அடுத்த சீட்ல அரைடவுசர் போட்ட புள்ளையாண்டான் உக்காசுண்டு இருந்தார். செந்திலுக்கு அப்புறம் உங்களுக்குதான் டவுசர் ப்ரமாதமா இருக்கு!னு சொல்லனும் வாய் வரைக்கும் வந்துடுத்து, இருந்தாலும் சொல்லலை. அவரோட முகத்துல இருந்த அசட்டு களையை வெச்சே அமெரிக்கா பார்ட்டினு புரிஞ்சுடுத்து. ஒரு ஆள் அமெரிக்காவா,லண்டனா இல்லைனா அலப்பறை பிடிச்ச கனடாவா என்பதை சில லக்ஷணங்களை வெச்சு கண்டுபிடிச்சுடலாம்.

டி-சர்ட் பாக்கெட்ல சின்னதா ஒரு முதலை எம்ப்ராய்டரி லோகோ, முக்கால் காலுக்கு 6 - 8 பாக்கெட் வெச்ச ஒரு டவுசர், நாரதர் கைல இருக்கும் சிப்லாகட்டை மாதிரி சதாசர்வ காலமும் இருக்கும் ஒரு ஆப்பிள் ஐபோன் & ஐபாட்(அதுல கித்தார் மியூசிக்கோட "வெல்கம் டூ ஹோட்டல் கலிபோர்னியா"னு நன்னா கனிஞ்ச வாழைபழ கொழகொழப்போட ஒரு பாட்டுதான் ஓடிண்டு இருக்கும்), ‘வேணாம்! வேணாம்!னு நம்ப சொன்னாலும் அவா பேசும் போது Wanna,gonna,gotta வார்த்தை ப்ரயோகம் இல்லாம நிச்சயமா பேச மாட்டா. கல்லிடை கான்வெண்ட்ல வேப்பமரத்தடில படிச்ச ஓட்ட இங்கிலிபீஷை வெச்சு that that worries, that that person-நு நம்ப சமாளிச்சாலும் பிடிவாதமா நம்ப கிட்ட இங்கிலிபீஸ்லதான் பேசுவா. பொதுவா இந்த மாதிரி சமயங்கள்ல நான் உடனடியா எங்க தெரு பிள்ளையாருக்கு நேந்துண்டு காலவரையற்ற மெளனவிரத்தை ஆரம்பிச்சுடுவேன்.

அந்த டவுசர் பாண்டியன் கிட்ட பேசிண்டு இருக்கும் போதே கேப்டன் மாமா எதோ அனோன்ஸ்மண்ட் பண்ணினார். நமக்கு சின்ன வயசுலேந்தே காதும் கண்ணும் கொஞ்சம் சூஷனை ஜாஸ்தி. அனோன்ஸ்மண்ட்ல யாரு ப்ரதானபைலட்,யாரு கோ-பைலட்,யாரு நமக்கு காப்பிதண்ணி எல்லாம் தரபோறா!னு வரிசையா சொன்னார். ஒரு பேர் கூட வாய்லையே நுழையலை, பகவானே! இப்படி மோசம் போய்ட்டேனே!னு வருத்தப்பட ஆரம்பிக்கர சமயத்துல “பக்தா! உன் பக்தியை யான் மெச்சினோம்!”னு பகவான் சொல்ற மாதிரி சொன்னான் பாக்கனும் ஒரு மேட்டர்!! காதுல தேன் பாயரதோட உண்மையான அர்த்தம் அன்னிக்கிதான் விளங்கித்து. கேப்டன் மாமா சொன்ன கடைசி ஏர்ஹோஸ்டஸோட பேர் 'தீவாளி'. வடக்கத்திக்காராதான் இப்படி தீவாளி/திருகார்த்திகைனு எல்லாம் பேர் வெப்பா. நம்ப சைடு எல்லாம் காயத்ரி,விஜி,அர்ச்சனா,கல்யாணி,கல்பனா,மீனா,உமா, நித்யா, ராஜி,ப்ரீத்தீ & etc etc இந்த மாதிரிதான் வெப்பா. ஸோ, தீவாளி குஜராத்தியா இல்லைனா டில்லியானு ஒரே யோஜனையா இருந்தது.

அப்போ என்ன நடந்தது தெரியுமோ?? (அடுத்த வெள்ளி தொடரும்.....)

Thursday, March 3, 2011

மூக்கும் முழியுமா.........

கல்லிடைல தாமிரபரணில குளிச்சுட்டு தலை துவட்டும் போது 2 - 3 தடவை பாத்து இருக்கேன். அதுக்கு அப்புறம் பூலோக சொர்கமான பெங்களூர்ல நித்யம் அதிகாலை 4.30க்கு அர்க்யம் குடுக்கும் போதும் அதே காட்சியை பாத்ததுண்டு. நான் மொட்டை மாடிக்கு அதிகாலைல வருவேன்னு அவளுக்கு எப்பிடித்தான் தெரியுமோ, கரெக்டா எதிர்த்தாத்து மாடிக்கு மேல அவளும் வந்துடுவா. பாக்கும் போதெல்லாம் ஒரு விதமான ஆசை வருமே தவிர மோஹம் வந்தது கிடையாது. தள்ளி இருந்து பார்க்கும் போதே ரொம்ப அழகா இருக்கும். “மூக்கும் முழியுமா இருக்கா!”னு சொல்லும் வசனம் நிச்சயமா அவளுக்கு தான் பொருந்தும். வில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் கோவில் கருடாள்வார் மாதிரி அவளுக்கு கூர்மையான மூக்கு. என்ன ஒரு கூர்மையான மூக்கு!னு ஆச்சர்யப்பட்டாலும், பஜாரியாட்டமா அவளோட சத்தம் ஊரையும் நாட்டையும் கலக்கும். எதுக்கு இப்போ கத்திண்டு இருக்கை?னு கேக்கனும் போல இருக்கும், கேட்டாலும் ஒன்னும் பெரிசா மாற்றம் எல்லாம் வந்துடாதுனு நன்னா தெரியும், அப்பிடியே வழுக்கிண்டு போகர மாதிரி 'பளபள'னு ஒரு சரீரம்.



நான் சொன்னது இவரைதான்...:)

சின்ன வயசுலேந்தே ஏரோப்ளேன்ல போகனும்னு ரொம்ப ஆசை உண்டு, ஆனா திருனெல்வேலி பஸ் ஸ்டாண்டுக்கும் கல்லிடை மெட்ரோவுக்கும் நடுல ஏரோப்ளேன் சர்வீஸ் கிடையாதுங்கர்துனால போகலை. தோஹாவுக்கு வரும் போதுதான் முதல்முதலா ‘மூக்கும் முழியுமா’ இருக்கும் ஏரோப்ளேல உக்காசுண்டு வந்தேன். தூரதேசத்துக்கு போறேன்னு எங்க அம்மா அப்பா எந்த அளவுக்கு கவலை பட்டாளோ அதே அளவுக்கு எங்க மன்னியும் கவலைபட்டா. ‘மத்தவா மாதிரி பிரமாதமான சாமர்த்தியமும் நம்ப மச்சினருக்கு கிடையாதே!!’னு அவாளுக்கு கவலை(இருக்காதா பின்ன!!). எங்க அண்ணா நல்ல நாள்லையே என்னை பயம் காட்டுவான். போதாகொறைக்கு அவன் ஆபிஸ்லேந்து வேற லண்டன் வரைக்கும் போய்ட்டு வந்துட்டான், இப்ப கேக்கவே வேண்டாம்.அந்த லண்டன் ஏர்போர்ட் பேர் கூட எனக்கு சரியா சொல்ல வராம கொஞ்சம் மாத்தி சொல்லி, எங்க மன்னி "கருமம்! கருமம்!"னு தலைல அடுச்சுண்டா. ‘ஹீத்ரூ ஏர்போர்ட்’னு சொல்லர்துக்கு பதிலா நான் ‘seethrough ஏர்போர்ட்’னு சொல்லிட்டேன்..:)

எதோ தங்கமலைக்கு போகும் விக்ரமபாண்டியனுக்கு ராஜகுரு வழிமுறை சொல்லி குடுக்கர மாதிரி எங்க மன்னி விளாவரியா சொல்லிகுடுத்தா. நடுல எங்க அண்ணா, "மாப்ப்ளே! எல்லாம் தாண்டிடலாம், இந்த இமிக்ரேஷந்தான் ரொம்ப கஷ்டம்! நிறையா கேள்வி எல்லாம் கேப்பா! பன் கொண்டை போட்ட எதாவது ஒரு காமாட்சி மேடம் வந்தா நீ பொழச்சை, ஒருவேளை கட்டம் போட்ட சட்டை & கண்ணாடி போட்ட சுப்பிரமணி ஆபிசரா இருந்தா நீ தொலஞ்சை!னு நல்ல பயம் காட்டினான். நான் போகவேண்டிய ப்ளைட் அர்த்தராத்ரி 1.30 பேயோட்டர சமயம்(நம்ப இட்லி மாமி போஸ்ட் போடும் நேரம்! என்றும் சொல்லலாம்).ஏர்போர்ட்டுக்கும் போயாச்சு, “வெற்றி நமதே விக்ரமபாண்டியா!”னு எங்க மன்னி வாழ்த்தி அனுப்பினா, நான் எங்கையாவது மாட்டிண்டு 'பக்க்ர! பக்க்ர!'னு முழிச்சா பாத்து ரசிக்கலாம்னு எங்க அண்ணா ஆவலா இருந்தான்.

என்னோட பாக்கேஜ் பொட்டில இருந்த புளிகாய்ச்சல்/பருப்புபொடி/சாம்பார்பொடி/ரசப்பொடி/கோலப்பொடி/புண்ணாக்குபொடி எல்லாம் நல்ல படியா தப்பிச்சாலும் எதிர்பாத்த மாதிரியே பிரச்சனை ஆரம்பம் ஆனது. என்னோட விசா நம்பரை கம்யூட்டர்ல அடிச்ச அந்த ஏரோப்ளேன் கம்பெனி பிகரோட முகம் அமைதியான ஜலபாத்ரத்துல விழும் முதல் மழைதுளியோட காட்சியை குடுத்து நெற்றியும் புருவமும் சுருக்கியது. ‘கல்யாணி!’னு பேர் போட்ட பேட்ச் குத்தின அந்த மாது இரண்டு மூனு தடவையா என்னோட விசா நம்பரை டைப்பிட்டு மண்டையை ஆட்டிண்டே அங்க இருந்த ஒரு ஆபிசரை கூப்பிட்டு எதோ சொல்லி என்னோட பாஸ்போர்ட்டை குடுத்தது. அதை எடுத்துண்டு காணாம போன ஆபிசர் சிலம்போட போன கோவலன் மாதிரி திருப்பி வரவே இல்லை.



சின்ன கவுண்டர்..:)

ஒரு மணி நேரம் ஆயாச்சு, போன மச்சான் போயே போனான்டி!னு ஆனதால நம்ப கல்யாணிகிட்ட மெதுவா 'எச்சுஸ்மீ'னு ஆரம்பிச்சு விஷயத்தை கேட்டேன். “உங்க விசா நம்பர் செல்லாது!னு வரர்தே சார்!”னு பதில் சொன்னா. "பெயரோ கல்யாணி! மங்களகரமான பெயர்! ஆனால் அமங்களமாய் பேசுகிறாயே கண்ணே!னு சொல்லனும் போல இருந்தது. இருந்த ஒரே ‘அல்லக்கை’ அனலிஸ்ட் வேலையையும் பெங்களூர்ல ராஜினாமா பண்ணிட்டு வந்தாச்சு, விசா செல்லாதுன்னு சொன்னா அப்புறம் கல்லிடைல இருக்கும் ராஜியோட மாமா பக்கத்துல திண்ணைலதான் உக்காச்சுக்கனும்னு ஒரே டென்ஷன். "பிரச்சனை மட்டும் சரிஆகட்டும் முருகா! திருச்செந்தூர்ல எங்க அண்ணாவுக்கு மொட்டை அடிக்கறேன்!"னு வேண்டுதல் எல்லாம் பண்ணிண்டு இருந்தேன்.



குலவிளக்கு with குத்துவிளக்கு...:)

அந்த சமயம் என்னோட பாஸ்போர்ட்டை கைல வெச்சுண்டு, திருக்கார்த்திகைக்கு முதல் விளக்கை வாசல்ல வைக்கர்த்துக்கு வர மாதிரி புல் மேக்கப்போட புடவை கட்டின ஒரு புண்ணியவதி பூமி அதிர வந்து “கங்கிராடுலேஷன்ஸ்! உங்க விசா நம்பர் செல்லும்! கல்யாணி அரபி டிரான்ஸ்லேட் பண்ணும் போது ஒரு நம்பரை விட்டுட்டாங்க!”னு இங்கிலிபீஸ்ல சொன்னா. சிரிச்சுண்டே அந்த புண்ணியவதி வந்து சொன்ன விதத்தை தள்ளி இருந்து பாக்கறவா "கங்கிராடுலேஷன்ஸ்! நீங்க அப்பா ஆயிட்டீங்க" மாதிரி புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்.

குலதெய்வத்தை வேண்டிண்டே இமிக்ரேஷன் பகுதியை நோக்கி நடையை கட்டினேன். எங்க ஊர் அண்ணாச்சி கடை மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி முதல்ல ஒன்னை பூர்த்தி பண்ணி தரசொன்னா . அதுக்கு அடுத்து என்னோட முறைக்கு காத்துண்டு இருந்தேன். இதுக்கு முன்னாடியே ஒரு வாரமா இமிக்ரேஷன் ஆளை சமாளிக்க ஸ்பெஷல் கமாண்டோ டெரியினிங் எல்லாம் எடுத்தேன். ‘அபியும் நானும்’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஜப்பான்ல இருக்கர்து டோக்கியோ, போன்ல சிறந்தது நோக்கியா"னு நிறையா ஹோம்வொர்க் பண்ணினேன். என்னோட பாஸ்போர்ட் எந்த ஸ்டாம்பிங்கும் இல்லாம ‘அய்யா’ படத்துல வரும் நயந்தாரா மாதிரி புத்தம் புதுசா ‘பளிச்’னு இருந்ததால தான் இவ்ளோ தலைவலி. என்னை ஒரு ஆபிசர் அழைக்கவும் பக்கத்துல போய் பாஸ்போர்ட்டை குடுத்துட்டு தொண்டையை சரிபண்ணிண்டு பதில் சொல்ல தயாரானேன்.

அவர் உடனே என்ன கேட்டார் தெரியுமோ??..:) (அடுத்த வாரம் தொடரும்)


(Note - பிரஞ்சு மொழில எல்லாத்துக்குமே ஆண்பால் பெண்பால் உண்டு. அதனாலதான் ‘ஏரோப்ளேன்’ அவள் ஆனாள்...;)