Thursday, October 20, 2016

நவகுண்டம்

இந்த தடவை கல்லிடை காஸ்மோபொலிடன் சிட்டில சதுர்த்தி உத்ஸவத்துல ஸ்பெஷலா என்ன பண்ணலாம்னு எல்லாரும் மண்டையை போட்டு கசக்கி எடுத்து கடைசில கண்டு பிடிச்சதுதான் ' நவகுண்ட நவக்கிரஹ மஹாயக்ஞம்'. ஒரே குழப்பம். பத்தாயிரம் மோதக ஹோமம் தொடங்கி லெக்ஷ்மி ஹோமம் துர்கா ஹோமம்னு எல்லாமே பண்ணிமுடிச்சதால புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சு கடைசில முடிவு பண்ணினதுதான் இந்த நவகுண்டம். தெரு மாமாக்களுக்கும் பரம சந்தோஷம். “எல்லா கிரகமும் நம்மை பிடிச்சு ஆட்டர்து ஓய்! அதனால எல்லா கிரகத்துக்கும் ஒரு ஓமத்தை பண்ணிட வேண்டியது தான்”னு ஒரு மாமா தீர்மானமா பேசிண்டு இருக்கும் போது பக்கத்துல இருந்த மாமா ‘உங்காத்து மாமி கூப்படரா ஓய்ய்!’னு சொல்லவும், ‘இந்த கிரகம் ஜென்மத்துக்கும் என்னை பிடிச்சு ஆட்டர்து, என்ன பரிகாரம் பண்ணர்துன்னே தெரியலை ஓய்!!’னு முனுமுனுத்துண்டே அந்த மாமா போனாராம். ஒன்பது கிரஹத்துக்கும் தனித் தனியா ஹோமகுண்டம்,தனித்தனியா மூனு வாத்தியார், தனித்தனியா பூர்ணாஹுதினு தடபுடல் ஏற்பாடு பண்ணி இருந்தா. தெருவே ஜேஜேனு இருந்தது. நானும் தங்கமணி & அத்வைதா சகிதமா ஊர்ல போய் இறங்கிட்டேன்.



காஷ்மீர் பிரச்சனை எப்பிடி ஓயாம இருக்கோ அதே மாதிரி கும்பா மாமிக்கும் அவாத்து மாட்டுப்பொண்ணுக்கும் பிரச்சனை இன்னும் ஓயரபாடா இல்லை. இந்த தடவையும் சண்டை மண்டை உடஞ்சுண்டு இருந்தது. அவாத்து மாட்டுப்பொண் இல்லாத சமயமா அவாத்துக்கு போயிட்டு கும்பா மாமிக்கு சிலபல ராஜதந்திர ஆலோசனைகள் சொன்னேன். “மாமி! எப்ப பாத்தாலும் பைட் சீனே போட்டுண்டு இருந்தா படம் சுவாரசியப்படாது. சில செண்டிமண்ட் சீன் & லாலே லா சீன் அதோட சேர்த்து சில ரொமான்ஸ் எல்லாம் இருந்தா தான் நன்னா இருக்கும்”னு சொல்லிண்டு இருக்கும்போதே மாமிக்கு வெட்கம் வந்துருத்து. “ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு தான் மணியா பேரன் வந்தாசேடா!”னு மாமி முடிக்கர்துக்கு முன்னாடியே, “நான் அதை சொல்லலை மாமி! உங்களுக்கும் மாட்டுபொண்ணுக்கும் நடுல பாசமான லாலே லா!”வை சொன்னேன். மாமியும் எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிட்டு சாயங்காலமே அவா கழுத்துல இருந்த ரெட்டைவடம் செயினை மா.பொண்ணுக்கு போட்டுவிட்டு அழகு பாத்து இருக்கா. அவாளோட மா.பொண்ணும், “செயின் என்னோட கழுத்துக்கு அளவெடுத்து பண்ணின மாதிரி இருக்குனு” சொல்லிட்டு கழுத்தோட போட்டுண்டு போயிட்டா. இப்ப செயினை எப்பிடி திரும்பி வாங்கர்துன்னு தெரியாம கும்பா மாமி முழிச்சுண்டு இருக்கா.

தெருல ஒரு ‘டோல்கேட்’ மாமா இருக்கார். போரவா வரவா ஒருத்தரை விடர்து இல்லை. கேள்வியா கேட்டு கழுத்தருக்கரார். படிச்சு முடிச்சவாளா இருந்தா எப்ப வேலைக்கு போகப்போரை?னு கேக்கரார்.வேலைக்கு போகரவாகிட்ட ‘எந்த கம்பெனில வேலை?’னு கேட்டா கூட பரவாயில்லை ‘எவ்ளோ சம்பளம்?’னு சத்தமா கேக்கறார். “சம்பளம் எங்க தராங்க சுண்டலும் சக்கரபொங்கலுமா குடுத்து ஏமாத்தராங்க!”னு வாய்விட்டு சொல்லமுடியுமா. இதாவது பரவாயில்லை ‘தொலைஞ்சுபோகர்து போ!’னு விடலாம் ஆனா ‘உங்காத்து பொண்ணுக்கு கல்யாணம் பாக்கர்தா உத்தேசமே இல்லையா?’ ‘கல்யாணம் கழிஞ்சு 3 வருஷம் ஆச்சே விஷேஷம் உண்டா?’னு கேட்டு தர்மசங்கடப் படுத்தறார். இவருக்கு பயந்தே பாதிபேர் தெரிச்சு ஓடறா. போன வருஷம் எங்க மாமியாரை பாத்துட்டு ‘இது யாருடே? இது  யாருடே?’னு கேட்டுண்டே இருந்தார். “எங்க மாமனாரோட அப்பாவோட மூத்த மாட்டுப்பொண்னோட ரெண்டாவது ஓர்படி!”னு சொல்லிட்டு நடையும் ஓட்டமுமா இடத்தை காலிபண்ணிட்டேன். இவ்ளோ குழப்பி இருக்கோமே மனுஷன் இம்சிக்கமாட்டார்னு பாத்தா சாயங்காலம் மறக்காம “உன்னோட மாமனாரோட கூடபொறந்தவா மொத்தம் எத்தனை பேர்?”னு மறுபடியும் ஆரப்பிக்கரார்.

ஒன்பது ஹோமகுண்டத்துக்கு பக்கத்துலையும் ஒரு தம்பதியை சங்கல்பம் பண்ணிக்க ஒக்காத்தினா! நானும் தங்கமணியும் ஒரு கிரகத்துக்கு சங்கல்பம் பண்ணிண்டோம். வாத்தியார் மாமா சங்கல்பம் சொல்லிண்டு இருக்கும் போது ஒரு மாமி "எங்க அப்பா அம்மா பேர் நக்ஷத்ரமும் சொல்லலாமா மாமா?"னு கேட்டார். உன்னோட பேரை சொன்னாலே எல்லா கிரகமும் ஓடிரும் உங்க அப்பாம்மா பேரை வேற சொல்லனுமா?னு அவாத்து மாமா ஏழரையை கூட்டிண்டு இருந்தார். ரெண்டு வாத்தியார் அவாளுக்குள்ள பேசிண்டு இருந்தா. “போனவாரம் போன ஜோலில எஜமானனுக்கு காதே கேக்கலை ஓய்! பிராஜாபத்தியம் பவித்ரம்!னு சொல்லசொன்னா, "பிராஜாபத்தியம் பைத்தியம்!”னு சொல்றான் என்னத்த சொல்லர்து !'னு பொலம்பிண்டு இருந்தார். எல்லா மாமியும் புல் மேக்கப்புல  வந்துருந்தா, அதுலையும் சிலமாமிகள் மாமாவை வச்சு அவாளோட வயசை ஜட்ஜ் பண்ணிடகூடாதுனு முன்னெச்சரிக்கையா அவாத்து மாமாவுக்கும் 'டை' அடிச்சுவிட்டு கூட்டிண்டு வந்திருந்தா. சுக்கிரனோட ஹோமகுண்டத்துல இருந்த வாத்தியார் மாமாவுக்கு எல்லா கிரகத்தோட புகையும் போயிண்டு இருந்தது. எல்லரும் சுக்கிரனோட குண்டத்துல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு சனி கிரகம் பக்கத்துல வரும்போது ஓ பன்னீர்செல்வம் மாதிரி பயபக்தியா பம்மிட்டு போனா. “சனியோட பார்வை குரு மேல இருக்கு போலருக்கே?”னு ஒரு மாமா இன்னொரு மாமாவை ஜாடைமாடையா பேசி சிரிச்சுண்டு இருந்தார்.

“நீ சொன்னதை நம்பித் தான் என்னோட ரெட்டைவட செயினை அவுத்து போட்டேன் ஒழுங்கு மரியாமரியாதையா திருப்பி தரர்துக்கு ஐடியா குடு!”னு கும்பா மாமி மிரட்டின மிரட்டுல, நேரா அவாத்து நாட்டுபொண்ணு கிட்ட போய் "இந்த செயின்ல உங்களை பாக்கர்துக்கு அப்பிடியே உங்க மாமியார் மாதிரியே இருக்கு!"னு ஒரு குண்டை போட்டேன், அவ்ளோதான்  சாயங்காலமே மாமி கழுத்துக்கு செயின் வாபஸ் வந்துருத்து. மாமிக்கு வாயெல்லாம் பல்லு, “என்ன சொன்னை? என்ன சொன்னை?”னு என்னை பிடுங்கி எடுத்தா.தலைவர் ஸ்டெயில்ல "உண்மையை சொன்னேன்"னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டேன்.

(அக்டோபர் 3ம் தேதி மறக்காம ஞாபகம் வச்சு மூஞ்சி புஸ்தகத்துலையும், உள்டப்பியிலும்(அதான் இன்பாக்ஸ்)வந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எல்லாரோட அன்புக்கும் பாசத்துக்கும் தக்குடு என்றும் கடமை பட்டுருக்கேன்.)