
மீண்டும் JKB....:)
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
i) குழந்தைகளோட அல்லது குழந்தை மாதிரி மனசு உள்ள நல்ல மனுஷா கூட சகவாசம்.
ii) எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி & துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து.
iii) அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
i) சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசக்கூடிய பேச்சு.
ii) அழியக்கூடிய அற்பமான விஷயங்களில் அதிகம் நாட்டம் உள்ள படிச்ச மேதாவிகளோட சவகாசம்.
iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
i) டாக்டர் போடும் ஊசி (இதுனாலையே எங்க ஊர் டாக்டர் முத்துக்குமரனை 'குத்து'குமரன்னு தான் சொல்லுவேன்).
ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள்.
iii) என்னோட கணக்கு வாத்தியாரரின் கோபம் (போன ஜென்மத்துல புரோட்டா கடைல மாஸ்டரா இருந்துருப்பார் போலருக்கு)
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
i) +2-ல என்னோட கணக்கு வாத்தியார் நடத்தின கணக்கு.
ii) வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான். (சிரிக்காதீங்கோ! நிஜமாவே புரியலை).
iii) பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
i) ஒரு ஆரஞ்சு மிட்டாய்
ii) ஒட்டகத்துக்கு ஷாம்பூ வாங்கின கணக்கு எழுதின ஒரு பைல்
iii) அழி லப்பரோட கூடின ஒரு பென்சில்
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
i) கிரேஸிமோஹனின் வசனம்,டாம் & ஜெர்ரி, Mr. Bean
ii) அண்ணாபிள்ளையோட பேச்சு & சேட்டை
iii) கத்திரிக்காய்க்கு இங்கிலிஷ்ல என்னது?னு கேட்ட டீச்சர் கிட்ட, 'K A T H R I K A I'-நு பதில் சொன்ன என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரன்.
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
i) கோபிகாவோட கேள்விக்கு பதில் எழுதிண்டு இருக்கேன்.
ii) ராக்ஸ்ஸ்ஸ் அக்காவோட தேங்கா சாத போட்டோவை பாத்து பொறாமை பட்டுண்டு இருக்கேன்.
iii) வெள்ளிக்கிழமை கருங்குளம் மாமா & கல்லிடை மாமியாத்து ஓசி சாப்பாட்டுல என்ன ஸ்வீட் போடபோறாளோ?னு யோசனையும் ஓடிண்டு இருக்கு
8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்
9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?
i)நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.
ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.
iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
i) கர்ண கொடூரமா இருக்கும்படியான வரிகள் & இசை உள்ள பாடல்கள், ஸ்வரம் சரி இல்லாத மந்திரங்கள்
ii) தன்னம்பிக்கையை தளர்த்தும் படியான பேச்சுகள்
iii) நமக்காக ஒரு துரும்பை கூட நகர்தாத மனிதர்கள் செய்யும் தேவை இல்லாத உபதேசங்கள்
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
i) வயலின் வாசிக்கனும் ரொம்ப ஆசை உண்டு. கண்ணை உருட்டிண்டு & தலையை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கவும் ஆசை...;)
ii) அரபி மொழி பேச & எழுத ஆசை.
iii) பொறுமை
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
i) ஸ்வீட் பத்தி தனியா கேள்வி இல்லாததால திரட்டிப்பாலை முதல்ல சொல்லிக்கறேன். (ஸ்வீட்லேந்து ஆரம்பிக்கனுமோல்லியோ!)
ii) அம்மா கையால செய்யும் அடை-அவியல்,புளிஉப்புமா,பொரிச்ச குழம்பு,தாளகம் & etc etc
iii) நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)
13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?
i) எம் எஸ் அம்மாவோட ‘குறையொன்றுமில்லை’, மஹாராஜபுரத்தோட ‘ஜகதானந்தகாரகா’, ரஞ்ஜனி & காயத்ரியோட ‘என்ன சொல்லி அழைத்தால்’
ii) சுப்பிரமணியபுரத்துலேந்து "கண்கள் இரண்டால்"
iii) ஹே ஹேனதோ யாசுதே! - குரு(ஹிந்தி)ல வரும் அருமையான கஸல்
14) பிடித்த மூன்று படங்கள்?
i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்
ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)
iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?
i)திருப்தியான மனசு
ii)மனசை வருடும் அருமையான சங்கீதம்
iii)கல்லிடை, தாமிரபரணியின் நினைவுகள் & ரசிப்புத் தன்மை உள்ள நண்பர்கள்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
i) மன்னார்குடி மைனர் - ஒவ்வொரு வார்த்தைலையும் சுவாரசியம் சேர்க்க கூடிய சுவாரசிய திலகமான இவர் எழுதினார்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். அற்புதமான ‘கலா’ரசிகர் இவர்(இந்த இடத்தில கலா என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்பதை ரசிகமணி அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்)..:)
ii) சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா - எங்க ஊர் பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி லாபுக்கு அப்புறம் அக்காவோட அடுக்களைதான் பல ஆய்வுகள் கண்ட ஒரு இடம். எப்போதும் “குங்குமபூ போண்டா செய்வது எப்பிடி?”னு எழுதும் இவர் “குங்க் ஃபூ பாண்டா” படத்துக்கு விமர்சனம் எழுதர மாதிரி நினைச்சுண்டு இந்த பதிவை நம்ப அக்கா எழுதனும்னு கேட்டுக்கறேன்.அக்காவோட கோஷ்டில இருக்கரவா எல்லாரும் இதை தொடர்ந்து எழுத ஆரம்பிச்சா 2 வருஷத்துக்கு எழுத ஆட்கள் வெச்சுருக்கா. (அடுத்த எலெக்ஷன்ல 'இலுப்பகரண்டி' சின்னத்தோட சிங்கப்பூர்ல நிக்க போகர்தா கேள்விப்பட்டேன்!..:) Based on your international readers, you can write it in english.
iii) மாதங்கி - 'ஓலை குடிசை! ஒற்றை ஜன்னல்!திடீரென்று மின்னல்!'னு கவிதை எழுதி எல்லாரோட கழுத்தை அறுக்கும் ஆட்களுக்கு நடுல இவா எழுதும் எழுத்து நடையே ஒரு கவிதை மாதிரி இருக்கும். ‘மேம் சாஃப்!’னு ரொம்ப மரியாதையா இவாளை கூப்பிடுவேன். "மேம் சாஃப்! இந்த பதிவை உங்க ஸ்டைல்ல நீங்க எழுதி அதை நாங்க எல்லாரும் படிக்கனும்