Sunday, March 29, 2020

சைனா வைரஸ்

அமெரிக்கால டிரம்ப் ‘சைனா வைரஸ்’னு சரியாதான் சொல்லியிருக்கார். இதை கேடுட்டு சப்பைமூக்கனுக்கு ஒரே கோபம் ‘அதெப்படி சைனா வைரஸ்னு சொல்லலாம், அதான் அழகா லக்ஷணமா “கொரோனா”னு சாஸ்த்ரோக்தமா நாமகரணம் பண்ணியிருக்கே!’னு சப்பைகட்டு கட்டரான். கடங்கார சப்பைமூக்கன் எல்லா ஊர்லையும் பரப்பி விட்டுட்டு “எங்க ஊர்ல இப்ப சரியாயிடுத்து நீங்களும் எங்களை மாதிரி செத்து செத்து விளையாடுங்கோ!”னு உபதேசம் பண்ணிண்டு இருக்கான். நம்ப ஊர்ல இருக்கும் ‘ரெட்லைட் ஏரியா ஏஜண்ட்ஸ்’ அதான் மீடியாகாரா சீனாவிடமிருந்து உலகம் கற்கவேண்டிய பாடம் என்ன?னு ஆர் எஸ் பாரதி சொன்ன மாதிரியே ‘தொழில்’ பண்ணிண்டு இருக்கா. இது போதாதுனு கேரளாவில் பினராயி விஜயனுக்கு வேற கால் அமுக்கி விடவேண்டி இருக்கு. உலகத்துல எங்க இழவு விழுந்தாலும் முதல்ல சீதகம் கேரளாகாரனுக்கு தான். ஏன்னா அவன் டீகடை வைக்காத இடமே கிடையாது. வைரஸ்/பாக்டீரியா/காச்சல்/கபம்/லூஸ்மோஷன் எல்லாத்துக்கும் அவன் எப்போதும் தயாரா இருப்பான். நயவஞ்சகமா அவன் ஊர்ல இருக்கர தமிழ் நாட்டு தொழிலாளிகளை அவசரம் அவசரமா ஊருக்கு அடிச்சு விரட்டிண்டு இருக்கான். நம்பாத்து குப்பையை மொத்தமா எடுத்து பக்கத்தாத்துல போட்டாசுன்னா நம்ப வீடு சுத்தமாதானே இருக்கும், இந்த ஜோலியைதான் சேட்டன் பாத்துண்டு இருக்கான். மருத்துவமனை கழிவு எல்லாத்தையும் வண்டில ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து கொட்டர்து & ஆம்புலன்ஸ்ல ஆட்களை ஏத்தி தமிழகத்துல கொண்டு வந்து இறக்கிவிடர்து, காசர்கோட்ல இருக்கும் கொரொனா கேஸ்களை ‘மங்களூர்ல போய் சிகிச்சை பாருங்கோ!’னு அனுப்பி வைக்கர்துனு 24 மணி நேரமும் நயவஞ்சக வேலைதான். இந்த மானம் கெட்ட பொழப்புக்கு பீத்தல் ஒரு கேடு. இத்தாலி இத்தாலினு இத்தனை நாளா பீத்தீண்டு இருந்தா, இப்ப தான் புரியுது அங்க ஒரு தாலியும் இல்லைனு. பாஸ்தாவும் பிசாவும் திண்னதுதான் மிச்சம் வரிசையா 50 பேர் ஆஸ்பத்திரிக்கு போனா அங்க கையும் ஓடலை காலும் ஓடலை. ஏதோ இருக்கர மிச்சம்மிஞ்ஜாடி மருந்தை வெச்சு வைத்தியம் பாத்துண்டு இருந்தா இப்ப அதுக்கும் வழி இல்லாம போயாச்சு. ஆஸ்பத்திரி ரொம்பி வழிஞ்சு உள்ள போகவே இடம் இல்லாம பாதிபேர் ஆஸ்பத்திரி வாசல்ல இருக்கும் மரத்தடில இருக்கா இது போதாதுனு பாதிபேருக்கு சலூன்ல முடிவெட்டிக்க வந்தவா மாதிரி ஒரு போர்வையை மட்டும் போர்த்தி நாற்காலில உக்காத்தி வச்சுருக்கா. இந்த லட்சணத்துல இத்தாலியை போல இந்தியாவும் நிலைமையை சிறப்பா கையாளனும்னு தெருமுருகன் காந்தி (எ) டேனியல் ஒப்பரி வெச்சுண்டு இருக்கான். உலக அளவுல இந்தியா நல்லமுறையில் தான் கையாண்டுவருகிறது. இந்திய அளவில் தமிழக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது. முக்கியமாக நம்ப சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல்ல இந்த உலக சுகாதார நிறுவனத்தை வெளுக்கனும். நவம்பர்லையே தைவான்காரன் ஐ.நா-ல போய் ‘பக்கத்தாத்துல(சீனா) ஏதோ பிரச்சனை மாதிரி இருக்கு! எல்லாரும் கட்டிபிடிச்சு அழுதுண்டு இருக்கா! என்னனு கேளுங்கோ!’னு புகார் சொன்னா அதை சரியா ஜாரிக்காம சப்பைமூக்கன் சொன்னதை அப்படியே திருப்பி வாங்கி ‘ஒன்னும் பிரச்சனை இல்லையாம்! பேசிண்டு தான் இருக்காளாம்!’னு முழு பூசணிக்காயை மறைச்சதோட விளைவு உலகத்துக்கே ‘ஹேப்பி நியூ இயர்’ ஆயிடுத்து. எதையோ அடுத்து வேட்டிக்குள்ள விட்டுண்ட கதையா பாரிஸ் மேயர் பிப்ரவரில “சப்பைமூக்கனை கட்டிபிடிப்போம்!”னு ஒரு டிரெண்டிங்கை டிவிட்டர்ல ஆரம்பிச்சு வெச்சு, “நீங்களும் ஆளுக்கு ஒரு சப்பைமூக்கனை கட்டிபிடிச்சு முத்தா குடுத்து போட்டோ போடுங்கோ!”னு கிளப்பிவிட்டான். அங்க இருக்கும் பைத்தியங்களும் கட்டிபிடிச்சு போட்டோ போட்டு முடிக்கும் போது ஊரோட கொரொனா உற்சவம் ஆரம்பிச்சு கட்டிப்பிடிச்சவன் எல்லாருக்கும் மறுபத்து கழிஞ்சு அடுத்த மாசத்துலேந்து மாசியம் வரபோகர்து. நம்ப ஊர்ல பிரதமர் முன்னாடியே சுதாரிச்சுண்டு, ‘அமையசமைய ஆத்துக்குள்ள இருங்கோ! இல்லைனா எல்லாருக்கும் ஒரே சமயத்துல வைகுண்டப்ப்ராப்தி கிடைச்சிடும்!’னு சொல்லி எச்சரிச்சாலும் ஒருத்தனும் அடங்கர்தா இல்லை. பால் வாங்க போறேன்! பழம் வாங்க போறேன்!னு பைக்கை எடுத்துண்டு சுத்தர்துகள். இந்த மாதிரி வெளில சுத்தரவா எல்லாரையும் ஒரு ஸ்பெஷல் ப்ளைட்ல ஏத்தி இத்தாலிக்கு அனுப்பிட வேண்டியது தான். நிறைய வீடுகள்ல ‘work from home’ என்பது ‘work for home’-ஆ ஆயிண்டு இருக்கு. ‘சும்மா மவுசை தெய்க்கர்துக்கு பதிலா எனக்கு ரெண்டு பத்துபாத்ரம் தேச்சு தந்தா என்ன?’ ‘இப்ப பிரேக் சமயம் தானே வாஷிங்மெஷின்ல துணியை போடுங்கோ!’ ‘அஞ்சாவது விசில்ல குக்கரை ஆப் பண்ணுங்கோ!’ மாதிரியான ஒர்க் அலகேஷன் ஆயிண்டு இருக்கு. ஆத்துக்குள்ள சும்மா இருக்கும் போது பொழுதுபோகர்துக்கு நிறையா வழிகள் இருக்கு. தங்கமணிக்கு சமையல்கட்டுல கொஞ்சம் ஒத்தாசையா(சமையல்ல மட்டும்) இருங்கோ! ஏப்ரல் 15 வரைக்கும் வீட்டுக்குள்ள உயிரோட நடமாடனும்னு ஆசையிருந்தா தேவையில்லாத விவாதம் எதையும் தங்கமணிகிட்ட ஆரம்பிக்காதீங்கோ! அவாளுக்கு தான் கத்தி எங்க இருக்கு கரண்டி எங்க இருக்குனு நன்னா தெரியும். முக்கியமா அவா அப்பாவையோ அண்ணா/தம்பியையோ திட்டாதீங்கோ. கோரோனா பயம் ஜாஸ்தி ஆச்சுனா உங்களோட கல்யாண கேசட்டை/சிடியை எடுத்து ஒரு தடவை போட்டு பாருங்கோ! ‘இவ்ளோ பெரிய ஆபத்தையே பாத்துட்டோம் இதையும் தாண்டி வந்துடலாம்’னு மனசுல ஒரு தைரியும் வரும். அனேகமா இந்த சைனீஸ் வைரஸோட அட்டகாசம் முடிஞ்சு கைஜோசியக்காரா எல்லாரும் வேற ஜோலி தான் பாக்கணும். அவனவனுக்கு கை அலம்பி அலம்பியே ரேகை காணாம போயிடுத்து. நான் அலம்பிண்டு இருக்கர அலம்புக்கு இனிமே ஆர்தோ டாக்டர் எக்ஸ்ரே இல்லாம என்னோட கைல எலும்பு சரியா இருக்கானு பாக்கலாம் அந்த நிலைமைல இருக்கு. இதுக்கு நடுல என்னோட தங்கமணி “சும்மா வந்து வந்து கை அலம்பர்துக்கு பதிலா இட்லி குக்கர், பால்பாத்ரம் நு ஒவ்வொன்னா தேச்சு வைக்கலாம் இல்லையா”னு சவுண்ட் குடுப்பதால் அடுத்த பதிவுல பாக்கலாம்.

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... இந்த பயத்துலேயும் இப்படி சிரிக்க வைக்க ஒரு பதிவு! வீட்டுல இருப்பதால இன்னும் கொஞ்சம் பதிவுகள் அப்பப்ப எழுதலாமே! அப்படி எழுதும்போது இந்த எழுத்துக்களோட அளவை கொஞ்சம் பெரிசா போடறது! எல்லாம் நம்மள மாதிரியே யங்ஸ்டர்ஸ் இல்லையே! வயசான ஆட்களுக்கு இந்த மாதிரி சின்ன எழுத்துரு படிக்க கஷ்டம்! :)

bandhu said...

கலக்கல்! ரணகளத்திலும் உங்கள் நகைச்சுவை அசர வைக்கிறது! கொஞ்சம் பெரிசா பதிவு போட்டா தான் என்ன?

Vaishnavi said...

சூப்பர் சார்.அதுவும் தைவான்_நவம்பர் ஐ.நா. தக்குடு டச்.உங்க ஊர் மாமா மாமி உள்ள வந்தா சூப்பரா இருக்கும்.இந்த சமூவம் உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்குது.கலக்குங்க சார்.

Srinivasan J said...

தக்குடு அண்ணா பதிவுக்கு நன்னி ஹய்
ஸ்ட்ரெஸ் பஸ்டர்

//மறுபத்து கழிஞ்சு அடுத்த மாசத்துலேந்து மாசியம் வரபோகர்து...//

நெல்லைத் தமிழன் said...

நல்லா இருக்கு பதிவு. கீதா சாம்பசிவம் அவர்கள் சுட்டி கொடுத்து இந்தத் தளத்துக்கு வந்தேன்.

நம்ம மட்டும் அல்ல, ஊரார் எல்லா வீட்லயும் இதே கதிதான் என்று தெரிஞ்சுக்கும்போதே நிம்மதி வந்துடறது.

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)