Part 1 Part 2 படிச்சாதான் யாரோட மூக்கு, யாரோட முழினு புரியும்!..:)
வண்டி புறப்பாடு ஆகர்துக்கு தயார் ஆச்சு, யாரோ ஒரு வெள்ளக்கார ஏர்ஹோஸ்டஸ் வந்து எல்லாருக்கும் புளிப்புமிட்டாய் குடுத்தா, நிறைய ரூபாய் குடுத்து டிக்கெட்டு வாங்கினதுக்கு நல்லதா ஒரு 5 STAR சாக்லேட் குடுக்கப்படாதோ! எதுக்கு எல்லாரும் மசக்கயா இருக்கர மாதிரி புளிப்புமிட்டாய் குடுக்கரா!!னு எனக்கு யோஜனையா இருந்தது, இருந்தாலும் குடுத்த காசுக்கு நம்மோட ஷேரை விட்டுடகூடாதுன்னு “மைக்கெல் மதன காமராஜன்”ல வரும் வரதுகுட்டி மாதிரி 2 புளிப்புமிட்டாய் எடுத்துண்டேன். புளிப்புமிட்டாய்க்கு வால் புடுச்சுண்டே அடுத்தாப்ல ஒரு கொழந்தை லெமன் ஜூஸ் குடுத்துண்டே வந்தது. அடராமா! ஏதுடா இது! சீமந்த விஷேஷ ஆத்துக்கு வந்தமாதிரி எல்லாம் ஒரே புளிப்பு வஸ்துவான்னா வந்துண்டு இருக்கு! அடுத்து என்னது மாங்காயும் நொக்கட்டான்புளியுமா?னு கேக்கலாம்னு வாயை திறக்கர சமயத்துல தான் லெமன் ஜூஸ் குடுச்ச டம்ப்ளரை வாங்கர்துக்கு நம்ப தீவாளி வந்தது.
தீவாளியோட Surname ஹரிலால்னு போட்டு இருந்தது (நிச்சயமா நைனாவோட பேராதான் இருக்கும்). டம்ப்ளரை குடுத்துட்டு “தாங்க் யூ தீவாளி!”னு சொன்னேன். தினசரி வாழ்க்கைலையுமே இந்த மாதிரி நமக்கு உபகாரமா இருக்கரவாளை "ஏ தக்காளி!" "இந்தாப்பா கோலப்பொடி" "ஏ கீரை! இங்க வா!"னு சொல்லாமா அவாளோட பேரை சொல்லி கூப்பிடும்போது அவாளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். தீவாளியும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுட்டு போச்சு. எனக்கு பக்கத்துல இருந்த டவுசர்பாண்டியன் மட்டும் வைரமுத்துவா இருந்தா "தீவாளியின் கண்களோ மத்தாப்பூ! சிரிப்போ முத்துப்பூ! மொத்தத்தில் அவளே அழகின் முத்தாய்ப்பு!"னு கவிதை சொல்லி இருப்பார். நமக்கு தான் கவிதையே வராதே, அதுவும் போக பொம்ணாட்டிகளை தக்குடு நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்!னு லோகத்துக்கே தெரியும்(சந்தேகமா இருந்தா அகிலா மாமி கிட்ட கேளுங்கோ!). அதனால கிருஷ்ணா! ராமா!னு சொல்லிண்டு காதுல பஞ்சை வெச்சுண்டு சீட் பெல்ட்டை முதல் முயற்சிலயே வெற்றிகரமா போட்டுண்டு தயார் ஆனேன். வண்டி மெதுவா நகர ஆரம்பிச்சு அப்புறம் ஓட ஆரம்பிச்சு கடைசில பறக்கவும் ஆரம்பிச்சது.
நான் மெதுவா அல்லசல்ல யாரெல்லாம் இருக்கானு பாத்தேன். எனக்கு அடுத்து இருந்த நடைபாதைக்கு அடுத்து இருந்த வரிசைல எனக்கு நேர ஒரு குடும்பம் உக்காச்சுண்டு இருந்தது. அதுல இருந்த ரங்கமணி, தங்கமணி & குட்டீஸ் அச்சு அசலா ஒரு NRI-கு உண்டான எல்லா லக்ஷணங்களோட இருந்தா. ஆத்தங்கரைல இருக்கும் தும்பிக்கையாழ்வார் மாதிரி அந்த ரங்கமணிக்கு வேழ முகம் இல்லையே தவிர பேழை வயிறு (அதனால தான் புளிப்பு மிட்டாய் குடுக்கறாளோ?). ஜூஸை குடிச்ச உடனே கபார்னு தூங்க ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இருந்த டவுசர் பாண்டி Apple ஐபாடை பாடாபாடு படுத்திண்டு இருந்தார். என்னோட திரைல தேடி புடிச்சு ஒரு ஹிந்தி படம் பார்த்துட்டு நானும் தூங்க ஆரம்பிச்சுட்டேன்.
நல்ல தூங்கிண்டு இருக்கும் போது யாரோ என்னோட கன்னத்தை தட்டி எழுப்பர மாதிரியும் “எச்சுஸ்மி சார்!”னு ஸ்வர சுத்தமா புல்லாங்குழல்ல ஊதற மாதிரி இருந்தது. கண்ணை முழிச்சு பாத்தா பரிவான முகத்தில் கனிவான சிரிப்போட நம்ப தீவாளி நிக்கர்து. நீங்க என்ன சாப்ட போறேள்?னு கேட்டது. கொட்டாவி விட்டுண்டே நளதமயந்தி மாதவன் மாதிரி “நோ பிஷ்! நோ எக்! நோ சிக்கன்/மட்டன்!”னு சொல்லிமுடிக்கவும் புன்சிரிப்போட போய்ட்டா. பிஸினஸ் கிளாஸ்ல உள்ளவாளுக்கு எல்லாம் “இன்னும் ஒருவாய்! இன்னும் ஒருவாய்! ஆஆஆஆ அம்ம்ம்ம்!னு சொல்லிண்டே ஊட்டியே விடுவா போலருக்கு! மன்னார்குடி/மாயவரத்தை சேர்ந்த மொரட்டு சம்பந்திகளுக்கு போடரமாதிரி அவாளுக்கு தான் முதல் பந்தி.அவாளுக்கு சாப்பாடு குடுத்துட்டு போர வழில மெதுவா "ஒரே ஒரு வெஜ் இருக்கு! நீங்க வேணா சாப்டுங்கோ!"னு சொல்லிண்டே ஒரு ட்ரே நிறையா தந்தா. எனக்கு குடுக்கர்தை பாத்துண்டே டவுசர்பாண்டியனும் கண்முழிச்சுட்டார். மத்தவா எல்லாருக்கும் சாப்பாடு வர 20 நிமிஷம் ஆச்சு, நமக்கு மட்டும் ஸ்பெஷல்..:) டவுசர்பாண்டியன் பரபரப்பான குரல்ல "என்னோட சாப்பாடுல வடை இல்லையே!"னு முதல் தடவையா தமிழ்ல பேசினார். “வாடி வா! வடையை பாத்தவிட்டுதான் தமிழ் வருதா உமக்கு?”னு மனசுல சொல்லிண்டே கனீர் குரல்ல “தீவாளி!”னு கூப்டு அவருக்கு வடை வாங்கி குடுத்தேன்.

ஆஹாரம்....:)
சாப்பாடு எல்லாம் நன்னா தான் இருந்தது, இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயம். அர்த்தராத்ரில நன்னா வடையும் வெண்பொங்கலும் நொசுக்கிட்டு அப்புறம் கலக்கி விட்ருத்துன்னா என்ன பண்ணர்து!!? சுச்சா போனாலே காலை அலம்பி 7 தடவை வாய் கொப்பளிக்கர நமக்கு கக்கா போய்ட்டு “பேப்பர்ல தொடச்சுண்டு வாங்கோ!”னு சொன்னா நன்னாவா இருக்கும், அதனால எக்காரணத்தை கொண்டும் ப்ளைட்ல கக்கா போககூடாதுன்னு சபதம் பண்ணின்டுதான் ப்ளைட்டே ஏறினேன். சாப்பிட்டு முடிஞ்ச உடனே அடுத்த காமெடி ஆரம்பமானது.
நல்ல 6 அடி உசரத்துல ஒரு வெள்ளக்காரி ஒரு 'ஐடக்கல்' வண்டியை தள்ளிண்டு வந்து ‘அரங்கேற்றவேளை’ பிரபு கிட்ட ‘சார் லட்ட்ட்ட்டுடுடு’!னு கேட்ட மாதிரி "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேட்டா. பந்தில பரிமாறர்த்துக்கு முன்னாடி வாழக்கா பொருத்துவல்ல கொஞ்சம் வாய்ல போட்டுப்பா,ரசத்துல கொஞ்சம் குடிச்சுப்பா,ஸ்வீட் & வடையை விண்டு வாய்ல போட்டு பாத்துப்பா, அதை மாதிரி இந்த வெள்ளைகாரியும் எல்லா சரக்குலையும் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பாத்துருப்பாளோ?னு ஒரு சம்சியம் எனக்கு. அவள் நெளுச்சுண்டு நின்ன ஸ்டைல் வேற அதை ஊர்ஜிதம் பண்ணரமாதிரி இருந்தது. பாட்டில் மூடியை மோந்து பாத்தாலே மயக்கம் போடற கேஸான நான் ஒரு டம்ப்ளர் தூத்தம் மட்டும் வாங்கி குடிச்சேன்.
அடுத்து நேர பக்கத்து சீட்டு ரங்கமணியை "சார் ட்ரிங்ங்ங்ஸ்!"னு கேக்க, அவர் ஏக்கமான முகத்தோட தங்கமணியை பாத்துண்டே ஷீணமான குரல்ல நோ! நோ!னு மறுத்தார். “மீசை வெச்ச ஆம்பிளையா இருந்தா க்ளாஸ்ல கையை வெச்சு பாருய்யா பாப்போம்!!”னு சொல்லற மாதிரி அவரோட தங்கமணி மொறச்சுண்டு இருந்தாங்க. ரயில்ல எல்லாம் டிக்கேட் எடுக்கர மாதிரி ஒரு 10 சீட் தள்ளி அவரோட தங்ஸ்சுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்க கூடாதோ? லூசுமாதிரி பொண்டாட்டிக்கு பக்கத்து சீட்டை ரிசர்வ் பண்ணினா இப்பிடிதான் ஆகும். என்கிட்ட ரிசர்வ் பண்ண சொல்லி இருந்தா 2 வரிசையே தள்ளி பண்ணிவெச்சுருப்பேன். டவுசர்பாண்டியன் மொடாக் குடியனா இருப்பார் போலருக்கு, எதோ தேர் திருவிழால நீர்மோர் குடிக்கர மாதிரி சுர்ர்! சுர்ர்!னு உரிஞ்சு தள்ளிட்டார். “இந்த ரேஞ்சுல சோடா கலக்காம குடிச்சேள்னா தோஹால நீங்க பிடிக்க வேண்டிய மினிசோட்டா ப்ளைட்டை வீல் சார்ல போய் தான் ஓய் பிடிக்கமுடியும்!”னு அவர் கிட்ட சொன்னதுக்கு அப்புறம் நிப்பாட்டினார்.
தங்கமணி மட்டும் பக்கத்துல இல்லைனா இந்த ரங்கமணிகள் வாழ்க்கையை எப்பிடி எல்லாம் அனுபவிக்கரா தெரியுமோ! மாமியை மெட்ராஸுக்கும், பெங்களூருக்கும்,கல்லிடைக்கும் அனுப்பி வச்சுட்டு தோஹால சில மாமாக்கள் அடிக்கர கொட்டம் சொல்லி முடியாது..:) ஒரு வழியா நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்தது, சாமான் செட்டை எல்லாம் எடுத்துண்டு இறங்கர இடத்துல டாடா சொல்லர்த்துக்கு நின்னுண்டு இருந்த தீவாளிட்ட “ரொம்ப சந்தோஷம் கோந்தை! அப்ப நான் போய்ட்டுவரேன்!”னு சொல்லிண்டு இப்பதான் இறங்கின மாதிரி இருக்கு, அதுக்குள்ள 1.5 வருஷம் முடிஞ்சாச்சு!!....:)
(கதை பலன் - யாரெல்லாம் கர்மசிரத்தையோட இந்த கதையை படிச்சுட்டு ஒழுங்கா கமண்டும் போடராளோ அவா போகும் ப்ளைட்ல நம்ப தீவாளி மாதிரி மூக்கும் முழியுமான பிகர் ஏர்ஹோஸ்டஸா வருவா. படிச்சது அக்கா & மாமிமார்களா இருந்தா பலன் அவாளோட ஆத்துக்காரரை போய் சேரும்...:) (சுபம்)