Saturday, August 30, 2025

ஊருக்கு போலாமா? (PART 2)

டிரைவர் அண்ணாச்சிகிட்ட பேசிண்டே போய் சீட்ல உக்காந்தாச்சு. தூங்கி எழுந்தா காத்தால சேரன்மாதேவி ரெயில்வே கேட் தாண்டியாச்சு. கல்லிடைல போய் இறங்கும் போதே தெருல பாதி தூரம் பந்தல். பந்தல் தோரணம் இதை எல்லாம் பார்க்கும் போதே நமக்கு பாதி உத்சாகம் வந்துடும். உண்மையில் நம்முடைய மனம் சந்தோஷ அலைக்கு வரர்துக்கு பல விஷயங்கள் தேவையா இருக்கு. வழக்கம் போல தெருவில் சிலபல அன்பான விசாரிப்புகள். தெரு பிள்ளையாருக்கு இருபத்தஞ்சு வருஷத்துக்கு பிறகு கும்பாபிஷேகம். தெருவே ஜே ஜேனு இருந்தது. போன கும்பாபிஷேகத்தின் போதும் அடியேன் கலந்து கொண்ட நினைவுகள் இன்னும் அப்பிடியே மனசுல இருக்கு. நல்ல நினைவுகள் மனசுல மறையாம இருந்தா தப்பு கிடையாது. அந்த சமயம் எனக்கு வெறும் பன்னிரண்டு வயசு தான். அஞ்சு நாளும் தெருவுக்கே சாப்பாடு. ஒரு நாள் மெனுல இருந்த சாமான் அடுத்த தடவை திரும்பி வராதமாதிரி விதவிதமா சாப்பாடு போட்டா. சாதாரணமாவே ஸ்வீட்டெல்லாம் திதுச்சுகட்டியா இருக்கும் கும்பாபிஷேகத்துல இன்னும் ஜாஸ்தியா இருந்தது. ‘பாயாசத்துல மைசூர்பாவை கலந்து ஒரு மாமா சுகமா அடிக்கரார்! சுகர் வராதவாளுக்கும் வந்துடும் உங்க ஊர் சாப்பாடு சாப்பிட்டா’னு தங்கமணி அடிகடி கிண்டல் பண்ணுவா. கல்லிடை காஸ்மோபொலிடன்ல எல்லாமே கொஞ்சம் ஜாஸ்திதான்னு சொல்லிண்டு இருக்கும் போது ‘கொழுப்பும் நக்கலும் கூட சேர்த்துங்கோங்கோ’னு காலை வாருவா. ‘நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ! எங்க ஊர் நானா மாமா வெக்கரமாதிரி பால் பாயாசம் மெட்ராஸ்காரா கனவுல கூட சாப்டு இருக்க மாட்டா. இன்னும் சொல்லணும்னா கண்ணால பாத்து கூட இருக்கமாட்டா. மெட்ராஸ்ல வெக்கரதுக்கு பெயர் பாலும் பாயாசமும் எங்க தெருல வைக்கரதுக்கு பேர்தான் பால்பாயாசம்’னு நான் சொல்லும் போது அவளுக்கும் கல்லிடை பாயசம் தான் பிடிக்கும் அப்பிடிங்கர்தால தங்கமணி பதில் சொல்லாம ஜகா வாங்கிடுவா. சூடான பால் பாயாசத்தை இலைல விட்டு சாப்பிடும் ருசியே தனிதான். அதுவும் பாயாச வாளியை தூக்கிண்டு சுப்பாமணி மாமா வந்தார்னா அன்னிக்கு அவ்ளோதான்! ஜோலி முடிஞ்சது! சாதாரணமா பெரிய கரண்டில ரெண்டு கரண்டி விடுவார். கர்பவதியா இருந்தா கூடுதல் அரை கரண்டி விட்டுட்டு ‘உள்ள இருக்கர கோந்தைக்கு வேண்டாமாடி! பேசாம சாப்பிடு!’னு சொல்லிட்டு போயிடுவார். மூனு ரவுண்ட் பாயாசம் விட்டதுக்கு அப்புறம் தான் மோர் சாதத்துக்கு சாதம் போட ஆள் வரும். நூறுபேர் ஒரு வரிசைல இருந்தாலும் யாருக்கு என்ன வரலைனு பாத்து கவனமா பரிமாறனும். சாப்பாடு விஷயம் சரியா இல்லைனா கூப்பாடு போட ஆரம்பிச்சுடுவா. வேத பாராயணக்காராளுக்கு தனியா பந்தி நடக்கும். அவாளுக்கு விஷயம் தெரிஞ்ச நாலு பேர் தான் பரிமாறுவா. எல்லாரும் வாளியை தூக்கிண்டு வந்துட முடியாது.
ஊர்லேந்து இருபது வருஷம் முன்னாடி வெளில போனவா கூட அடிச்சுபிடிச்சு எப்பிடியாவது எல்லாரையும் பாக்கலாம்னு ஆசைல வந்துடுவா. ‘நீ மாட்டுங்கால எங்க இருக்கை?’ ‘முன்னாடி அந்தேரில இருந்தை இல்லையோ?’ ‘சாமிலி இப்ப டோம்லிலையா இருக்கா?’ ‘அச்சா! நீ மூனாவது ஓர்படி இல்லையா?’ ‘முல்லண்டுல ஒரு கூனியூர் மாமா அப்பளாம் வியாபாரம் பண்ணின்டு இருந்தார் இல்லையா அதே தெருல தான் என்னோட ரெண்டாவது புள்ளை வீடு வாங்கியிருக்கான்!’ அப்பிடினு பாம்பே மாமிகள் கூட்டம் ஒரு ஓரமா ரீயூனியன் நடத்திண்டு இருப்பா. ‘கரோல் பாக் கிட்ட கான் மார்கெட் இருக்கில்லையா? அதுலேந்து நம்பாம் ரொம்ப கிட்ட’ ‘படேல் சவுக் மெட்ரோ ஸ்டேஷன் வந்துட்டு கால் பண்ணினா போதும் நான் வந்துடுவேன்’ ‘மயூர் விஹார்ல நான் இல்லை என்னோட மச்சினர் தான் இருக்கார்’னு ஒரு பக்கம் டெல்லி மாமா மாமிகள் விலாசம் மாறினதை விலாவரியா பாத் கர்ணாஹை. ‘கொச்சின் சாஸ்தா பிரீதில ஏது ஒன்னை காணர்தில்லை?’ ‘நூரணி தேருக்கு நாங்களும் போயிருந்தோம் கேட்டேளா!’ ‘நம்ப பெருமாள் கோவில் தேருக்கு வந்துட்டு ஆராட்டுக்கு ஆராக்கும் வந்தது?’னு சம்சாரிச்சுண்டு இருந்தா அதெல்லாம் வாயால சண்ட மேளம் வாசிக்கும் எண்ட கேரளம் கோஷ்டி. ‘இப்ப நங்கனல்லூர்லையே வராஹா அப்பளாம் வந்தாச்சே! குருவாயூரப்பன் கோவில் போர வழில இருக்கு பாருங்கோ!’ ‘நம்பாத்துக்கு நம்ப மஹாதேவன் தான் இப்ப வாத்யார். போன வருஷம் அப்பாவோட ஆடச்ராத்தத்துலேந்து அவன் தான் வரான்’ ‘பெங்களத்தூர் சங்கீதா ஹோட்டலுக்கு பக்கத்துல என்னோட பொண் இடம் வாங்கி தனியா வீடு கட்டி கிரஹபிரவேசம் பண்ணியாச்சே!’ ‘சங்கீதால பொங்கல் பண்ணினா இவாத்துல நெய் மணக்கும்’ னு சென்னை வாழ் கிராமத்துக்காரா பேசிண்டு இருந்தா. ‘இந்த டிரம்ப் *யோளி சும்மாவே இருக்க மாட்டேங்கரானே? டெய்லி காத்தால எந்திரிக்கும் போதே எவன் தாலிய அறுக்கலாம்னு வரானே! சதாபிஷேகம் பண்ணர வயசுல எதுக்கு யாரோ ஒருத்தியை பாத்து கண்ண காட்டிண்டு இருக்கான்? உங்களுக்கு இவனை தவிர வேற ஆளே கிடைக்கலையாடே? ஹெச் ஒன் பி! கிச் ஒன் பி! எல்லாம் சோலி முடிஞ்சதுனு சொல்லிக்கராளே? இவன் சங்காசமே வேண்டாம் பெங்களூரோட வந்துடு கோந்தைனு எங்காத்து பொண்ட போன வருஷன் தான் சொன்னேன்’னு தெரு மாமா அமெரிக்காலேந்து வந்த கோஷ்டிகள் கிட்ட பொலம்பிண்டு இருந்தார்.
இந்த முறை கோவில் தர்மகர்த்தா தெருவில் இல்லை என்பது மனசுக்கு ரொம்ப குறையா இருந்தது. அவாத்து மாமிக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம ஆனதால வைத்யம் பாக்கர்துக்கு மெட்ராஸ் போயிட்டார். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமா பாத்து பாத்து செய்யர்துல அவரை மாதிரி யாராலும் முடியாது. ‘ஆனா என்ன பண்ணர்து இந்த மாதிரி இருக்கரவாளைதான் ஸ்வாமியும் சோதிக்கரார். அநியாயமும் அக்கிரமமும் பண்ணக் கூடியவா தெம்பா நெஞ்சை நிமித்திண்டு வளையவரா’னு மெஸ் மாமி ரொம்ப வருத்தப்பட்டா பாவம். தெருல இந்த தடவை கொஞ்சம் நிலவரம் கலவரமா தான் இருந்தது. வேலையில்லாத ஒரு வெட்டிப்பயலும் கூட ரெண்டு பேருமா சேர்ந்துண்டு திருஷ்டி பரிகாரம் மாதிரி ஆக்கிட்டா. சில பேருக்கு தெருல யாராவது சிரிச்சு சந்தோஷமா இருந்தா அவாளுக்கு பிடிக்காது. இல்லாத பிரச்சனையை உருவாக்கி அதை வச்சு பொழுதுபோக்கிண்டு இருப்பா. எல்லாருடைய விக்னங்களையும் அழிக்கரவர் அவரோட உத்ஸவத்தை எப்பிடி நடத்தாம விடுவார்னு சில முட்டாள்களுக்கு தெரிவதில்லை. அவா உண்டாக்கின எல்லாவிதமான குழப்பத்தையும் தாண்டி சுவாமியோட கும்பாபிஷேகம் நல்லபடியா நடந்து முடிஞ்சது. சாயங்காலமே புஷ்பாஞ்சலி ஏற்பாடு பண்ணி இருந்தா. தோவாளையில் இருந்து வந்த பூ ரொம்ப நன்னா இருந்தது. தெருலேந்து கல்யாணம் ஆகி வெளில போன பொண்கொழந்தேள் எல்லாம் நன்னா ஜம்ஜம்னு வந்து பூ தாம்பாளம் எல்லாத்தையும் எடுத்துண்டு தெருவை சுத்தி வந்து ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலியாச்சு. ‘ஒழுங்கா வந்து போட்டோ எடுங்கோ’னு அங்க இருந்தவா உரிமையா என்னை அதட்டினா. முன்னாடி எட்டு தெருவுக்கும் வாத்யம் முழங்க யானை சகிதமா ஊர்வலம் போயிட்டு வந்து புஷ்பாஞ்சலி நடந்த பழைய புஷ்பாஞ்சலி ஞாபகம் எல்லாம் மனசுல வந்து போனது. கும்பாபிஷேகம் முடிஞ்சு மண்டலாபிஷேக சமயம் தான் என்னோட மச்சினன் சகிதமா தங்கமணி வந்தா. மச்சினன் குடும்பத்தை கூட்டிண்டு சின்ன சங்கரன்கோவில் & அகஸ்தியர் அருவி எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்தோம். இந்த தடவை நிறைய இடங்களுக்கு போக முடியலை. கோவில்ல மண்டலாபிஷேகம் நடந்துண்டு இருந்ததால ஒரு இடத்துக்கும் போகர்துக்கே மனசு வரலை. லீவும் கையில் இருக்கும் பணமும் ஒன்னு தான். எப்பிடி காணாம போச்சுனே தெரியாது. பழையபடி பெட்டியை தூக்கிண்டு பிளைட்டை பிடிக்க கிளம்பியாச்சு. கோட்டைதெரு சிவன் கோவிலை தாண்டி வண்டி போனாலும் மனசு ஊரை நோக்கி பின்னாடி போகர்து. மீண்டும் வருவேன் கல்லிடையே!!!

Thursday, August 14, 2025

ஊருக்கு போலாமா?

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ‘என்னடா இது தக்குடுவை ஆளையே காணுமே’னு தேடினவா தேடாதவா எல்லாருக்கும் நன்றிகள். போன மாசம் ஜூலைல கல்லிடை காஸ்மோபொலிடன் கோவில் கும்பாபிஷேகம். அதனால குடும்பம்/குட்டியோட பொட்டியை தூக்கிண்டு கிளம்பி வந்தாச்சு. சாயங்காலம் வில்லுப்பாட்டு ராத்ரி திண்டுக்கல் ரீட்டா ஆடல்/பாடல் கச்சேரினு ஊர்ல நிகழ்ச்சி நிரல் இருக்கர மாதிரி வழக்கம் போல ஏர் அரேபியால டிக்கெட்டை போட்டாச்சு. கத்தார் ஏர்வேஸ் ப்ளைட்ல சாப்பாடு நன்னா இருக்கும் தான்சென்னைலேந்து வரும் போது காத்தால சுடசுட பொங்கலும் ஓட்டை வடையும் தருவா தான் ஆனா டிக்கெட் ரூபாய் பட்ஜெட்ல ஓட்டை போடர்தால சார்ஜாவுக்கு போய் கனெக்டிங் வண்டியை பிடிக்கலாம்னு தங்கமணியை தாஜா செய்வது கொஞ்சம் கடினமா இருந்தது. இருந்தாலும் சப்புசவரு சாமான் விக்கும் அமேசான்/ மீஷோ / ஜுடியோனு எல்லாத்துலையும் அஞ்சு எக்ஸ்ட்ரா ஆர்டர் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்பட்டது. ஷார்ஜால எங்களுக்கு ஒரு ஆஸ்தான பாத்ரூம் உண்டு. எல்லாரும் அந்த பக்கம் வரமாட்டா. ‘போன தடவை கதவு கைபிடி ஆடிண்டு இருந்ததே?’ ‘உன்னோட தங்கச்சிக்கு கல்யாணம் நல்லபடியா ஆச்சா?’னு செளஜன்யமா அங்க இருக்கும் சிங்கள ஊழியரிடம் குசலம் விசாரிக்கும் அளவுக்கு அந்த பாத்ரூம் எங்களுக்கு நெருக்கம். பாத்ரூமுக்கு இவ்ளோ பில்டப்பானு நினைக்க கூடாது. சில ஏர்போர்ட் பாத்ரூம்லாம் உள்ள போனா நீச்சல் குளம் மாதிரி தரையெல்லாம் ஜலப்ரவாஹமா இருக்கும். உச்சா போனாளா இல்லை ஸ்னானம் பண்ணினாளானே கண்டுபிடிக்க முடியாது. இதுக்குள்ள நாம போயிட்டு வெளில வரும்போது டயப்பர் ஒழுங்கா கட்டாத குழந்தையோட டவுசர் மாதிரி நம்ம டிரெஸ் தொப்பலா நனைஞ்சு இருக்கும். அதெல்லாம் இல்லாம இந்த பாத்ரூம் அனாதரட்சகனாக இந்த முறையும் காப்பாத்திவிட்டது. மெட்ராஸ் ஏர்போர்ட்ல வேற மாதிரி தலைவலி அங்க ஒரு பயலும் தண்ணியே விடமாட்டான். விக்கரவாண்டி பஸ்ஸ்டாண்ட் மாதிரி கமகமா குமுகுமுனு நாத்தம் பிடிச்சு நாறும். இப்ப கொஞ்சம் சுத்தமா இருக்கு.

 




சென்னையில் மாமனார் வீட்டில் எப்போதும் என் மீது ஒரு ஆவலாதி உண்டு. ரெண்டு நாளைக்கு மேல இங்க தங்கவே மாட்டார். தங்கினாதான் என்ன?னு தங்கமணியிடம் சொல்லுவா. நானும் காதுல விழாத மாதிரியே இருந்துட்டு கல்லிடை ஓடி போயிடுவேன். மாமியார் வீட்டில் சாம்பாரின் ஸ்வரூபம் ரசமாக மாறுவதர்க்கு முன்னாடி இடத்தை காலி பண்ணுவது நம்முடைய பாலிசி. இந்த முறை அவாளோட மனசையும் சந்தோஷப் படுத்தரமாதிரி கூட ஒரு நாள் தங்கிட்டு அப்பிடியே தங்கமனி குடும்பத்துடன் போய் காளஹஸ்தி தரிசனம் பண்ணலாம்னு கிளம்பியாச்சு. கூகிள் மேப்ல சென்னைக்கு மிகமிக அருகில்னு தான் காட்டர்து ஆனா கார்ல போகும் போது போயிண்டே இருக்கு. போகும் வழி எங்கும் மாமரங்கள் காய்ச்சு குலுங்கிண்டு இருந்தது. மத்யானம் சாப்பாடு முடிஞ்சு ஒரு மணிக்கு சென்னைலேந்து கிளம்பினதால தூங்கிண்டே போய் சாயங்காலம் கோவில் வந்துருத்து. கார்ல போகும் போதே ‘என்ன திடீர்னு காளஹஸ்திஅதான் உங்களுக்கு கல்யாணம் நல்லபடியா ஆயாச்சே’னு மாமனார் என்னோட வாயை பிடுங்கினார். ‘ராகு கேதுவுக்கு பயந்து அங்க போகலை! ஏற்கனவே ரெண்டுக்கும் நடுல தான் சிக்கி இருக்கேன்’னு நான் சொல்லும்போது என்னோட வலது பக்கம் தங்கமணியும் இடது பக்கம் மச்சானும் உக்காந்து இருந்தது எதேச்சையான ஒரு நிகழ்வுனு நான் சொன்னா நீங்க நம்பவா போறேள். காளஹஸ்தி பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலம். போன லீவுல ஜம்புகேஸ்வரமும்(திருவானைகோவில்) அருணாசலமும் தரிசனம் ஆயிடுத்து அதனால இந்த முறை காளஹஸ்தி தரிசனம் பண்ணனும்னு மனசுல ஒரு ஆசை. குடும்பத்தோட போய் கும்புடு போட்டதுல ரொம்ப சந்தோஷம். கோவிலுக்கு வெளில வந்து ஒரு கடைல எல்லாரும் ஏலக்காய் மணக்க டீ குடுச்சோம். சிந்தூர கலர்ல பக்கத்துலயே பஜ்ஜி பொரிச்சுண்டு இருக்கர்தை பாத்த உடனே என்னோட மாமியாருக்கும் மச்சானுக்கும் நாக்குல ஜலம். ‘ஆந்திரால சமையலுக்கு மிளகாய் போடமாட்டாமிளகாய்லதான் சமையலே பண்ணுவா அப்புறம் போகர வழில பத்துகிலோமீட்டருக்கு ஒரு தடவை நிப்பாட்டி மாந்தோப்புல பப்புசெட்டு இருக்காஅதுல தண்ணி வருமா?னு தேடவேண்டிய நிலைவந்துடும்’னு தங்கமணி பயம்காட்டினதால பேசாம இருந்தா.




 

கார்ல வரும்போதே செல்வம் டிராவல்ஸ் ஏஜென்ட் அண்ணாச்சிக்கு ஒரு போனை போட்டு ‘டிக்கெட்டை போடுங்க அண்ணாச்சி! பெருங்குளத்தூர்ல ஏறிக்கிடுதேன்!’னு நான் சொல்லும்போதே ‘நீங்க ஆவணிலலா வருவேள்! ஆனி மாசமே காத்தடிக்கி! கும்பாபிஷேகத்துக்கு வாரேளோவீட்டம்மா குழந்தேள்லாம் கூட்டு வரலையா?’னு ஜாரிச்சார் அண்ணாச்சி. ‘அவாள் விஷேஷத்தை ஒட்டி வரா நான் கொஞ்சம் முந்தி வாரேன்’னு சொல்லிட்டு கால் கட்பண்ணும் போது என்னோட தெய்வத்தின் தெய்வம் (அதான் மாமனார்) ஆச்சரியமாக என்னை பாத்துண்டே 'அது எப்பிடி மாப்ளே! உங்க ஊர் ஆட்கள் யாருமே ஆன்லைன்ல டிக்கெட் போடாம போன்லையே வேலையை  முடிக்க பாக்கரேளே’னு கேட்டார். ஆன்லைன்ல போட்டர்தவிட ஆள்மூலமா போட்டா நமக்குதான் நல்லது. ஏஜெண்ட் அண்ணாச்சி டிரைவருக்கே போனை போட்டு ‘நம்ம கல்லிடைகுறிச்சி சாமி கத்தார்லேந்து கோவிலுக்கு வாராரு! பெருங்குளத்தூர்ல அவரை ஏத்தாம வண்டி நவழக்கூடாது பாத்துக்கோ!’னு சொல்லிடுவார். டிக்கெட் ரூபாயும் ஊர்ல போய் இறங்கிட்டு கடைல போய் குடுத்தா போதும். ‘நீங்க எங்க போவப்போரீக நான் எங்க போவப்போறேன்’னு ஏஜெண்ட் அண்ணாச்சி சொல்லுவாரு. திருனெல்வேலி பக்கம் வாக்கு சுத்தம் அதிகம். சொன்னா சொன்ன சொல் மாறாது’னு சொன்னேன். அடுத்த நாள் சாயங்காலம் சொன்ன மாதிரியே பெருங்குளத்தூர்ல வண்டிய புடிச்சு ஏறியாச்சு. அழகென்ற சொல்லுக்கு முருகா!னு டி எம் எஸ் கூட சேர்ந்து கிடாமீசை வச்ச டிரைவரும் சேர்ந்து உருகிண்டு இருந்தார். ‘நல்லா இருக்கேளாசுவம் தானாவீரபாகுத்தேவரே வந்து வட்டை பிடிச்சு வண்டியோட்ர மாதிரிலா இருக்கு?னு விசாரிக்கும் போது அவர் முகத்துல புன்னகை. என்னதான் சொல்லுங்கோ நம்ம ஊரு வண்டி நம்ப ஊர் வண்டி தான்......  (பயணம் தொடரும்)

Friday, October 18, 2024

கல்யாணம் – காதுகுத்து (Part 3)

 கல்யாண மண்டபத்துல எல்லாரும் சாயங்காலம் நலங்குக்கு ரெடி ஆகிண்டு இருந்தா. மாப்பிள்ளையாத்து மாமிகள் " நாளைக்கு காத்தால கட்டுச்சாதக்கூடை வரைக்கும் இவன் நகரமாட்டான் போலருக்கே?"னு மனசுக்குள்ள நினைச்சுண்டு மேலும் கீழுமா பாத்தா. . என்னை மாதிரியே நாலு பேர் ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’னு மண்டபத்துக்குள்ள லாந்திண்டு இருந்தா. நாங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கும்போது ‘அப்பாடா இன்னும் இந்த மாமாவே போலை’னு நானும், ‘கல்லிடைகுறிச்சி அம்பி இன்னும் போகலை’னு அந்த மாமாவும் ஆசுவாசம் ஆகிப்போம். பொண்ணோட அப்பாட்ட பேசிண்டு இருக்கும் போது “உங்காத்துகாராள்டையும் சம்பந்தியாத்துலையும் சொல்லிடுங்கோ எனக்கு சாயங்காலம் ஆறு மணிக்குதான் ரயில் அதுவரைக்கும் காபி டிபன் எல்லாம் முடிஞ்சுதான் போவேனாக்கும்” சிரிச்சுண்டே சொன்னேன். சூடா பஜ்ஜியும், காப்பியும் வாய்ல போட்டுண்டு எல்லார்கிட்டையும் சொல்லிண்டு கிளம்பிட்டேன். முன்னாடி தோஹால இருந்த ஒரு பாலக்காடு மாமியும் அவாளோட பொண்ணும் என்னை பாக்கவந்துட்டு அவாளே ஸ்டேஷன்ல கொண்டு போய்விட்டா. திருச்சிலேந்து வண்டியை பிடிச்சு காத்தால ஆலுவா ஸ்டேஷன்ல போய் இறங்கிட்டேன். மெட்றாஸ்லேந்து என்னோட தங்கமணி, குழந்தைகள், மாமனார் மாமியார் எல்லாரும் அதே ஸ்டேஷனுக்கு வேற வண்டில வந்துட்டா. அடுத்த மூனு நாள் ‘என்ட பாஷை மலையாளம், என்ட சிஎம் பினராயி, என்ட ஹீரோயின் ஹனிரோஸ்’னு சொல்லிண்டு சுத்தி வந்தோம். நேரா வாமனமூர்த்தி கோவிலுக்கு போயிட்டு அடுத்து சோட்டானிக்கரா பகவதி கோவிலுக்கு போனோம். அடாடாடா! கேரளா கேரளா தான்! அம்பாள் என்னமா இருக்கா( நான் உள்ள இருந்த அம்பாளை சொன்னேன்). ஒரு முருகன் கோவிலுக்கும் போயிட்டு, டிபனை முடிச்சுட்டு நேரா பெரும்பாவூர் ரிசார்டுக்கு போயிட்டோம். பெரியாறு நதியோட தொட்டடுத்த கரைல ரிசார்ட் இருக்கு. நாங்க தங்கின ரிசார்ட் ஒரு ஆயுர்வேதா ரிசார்ட். வல்லாரை கீரை, பொன்னாங்கன்னி சட்னி, கொப்பு / கொழை இந்த மாதிரிதான் அவாளோட மெனு. முக்கியமா எதுலையும் தாளிப்பும் கிடையாது காரமும் கிடையாது. இதை மொதல்லயே சொல்லியிருந்தா மகராசியை பெத்த ரெண்டு பேரும் வந்தே இருக்கமாட்டா. மொளகாயையும் உப்பையும் சேர்ந்து அரைச்சு குடுத்தா 'கொஞ்சம் காரமும் உப்பும் கம்மியா இருக்கு’ சொல்லுவார் எங்க மாமனார். மாமியாருக்கு உடம்புலதான் சுகர் மனசு குழந்தை மாதிரி, அதனால ஸ்வீட்னு பேப்பர்ல எழுதிக்குடுத்தா கூட சந்தோஷமா சாப்பிடுவா. ‘மத்யான சாப்பாட்டுக்கு என்ன சொல்லியிருக்கேள்’னு எங்க மாமானார் ஆரம்பிச்சார். ‘கப்பகிளங்கும் கஞ்சியும் தருவா!’னு சொன்னேன். அவர்கிட்டேந்து ஒரு பதிலும் வரலை. நல்லவேளை மத்தியான சாப்பாட்டுக்கு காய்கறிகூட்டுசாம்பார் எல்லாம் பண்ணி வச்சுருந்தா. சாயங்காலம் டீயை குடுச்சுட்டு நாலு மணிக்கு ரூம்லேந்து கீழ வந்துடுக்கோனு எங்க மாமானார்கிட்ட சொன்னேன். என்ன சமாசாரம் என்ன சமாசாரம்னு கேட்டார். சாயங்காலம் உங்களுக்கு ஆயில் மசாஜ் பண்ணர்துக்கு ரெண்டு ஓமனகுட்டி வரபோரானு சொன்னேன். சாயங்காலம் மூனு மணிக்கே கீழ வந்து காத்துண்டு இருந்தார். மசாஜ் ரூமுக்கு போய் ஒரு மணிநேரத்துக்கு அப்புறமும் ஆளை காணும். பத்து நிமிஷம் கழிச்சு வேஷ்டியை கஷ்கத்துல வச்சுண்டு மெதுவா வெளில வந்தார். ‘மலையாளத்து மசாஜ்ல உங்கப்பாவே கொஞ்சம் வெளுத்தமாதிரி இருக்காரேடீ’னு தங்கமணிகிட்ட சொன்னதை அவள் காதுல வாங்கலை. அம்மாவும் பொண்ணும் ‘என்ன பண்ணினாஎன்ன பண்ணினா?’னு ஆர்வமா கேட்டா. ‘ஒருமணி நேரம் பின்னிபெடலெடுத்துட்டா!’னு ஆரம்பிச்சார். ‘பின்னிபெடல் எடுக்கர்துக்கு எங்க மாமியாரே போதுமே இவா என்ன பண்ணினா?’னு நான் கேட்டேன்.

 



கொஞ்சம் ஏமாற்றமா முகத்தை வச்சுண்டு ‘ஓமணகுட்டி வருவானு சொன்னேளே! கலாபவன் மணி மாதிரி ஒரு மலையாளத்தான் தான் வந்தான்’னு மாமா ரொம்ப வருத்தப்பட்டார். ‘ஷஷ்டியப்த பூர்த்தி ஆனவாளுக்கு ஓமனக்குட்டன் தான் அனுப்புவாளாம். இப்பதான் ரிசார்ட் மேனேஜர் சொன்னார். நான் மசாஜ் பண்ணிக்கர்தா இருந்தா ஓமனக்குட்டிதான் வருவானு சொல்லிமுடிக்கர்துக்குள்ள ‘ஓமணக்குட்டியும் வேண்டாம் ஆனைகுட்டியும் வேண்டாம் பேசாம இருங்கோ’னு தங்கமணி பாய்ஞ்சுண்டு வந்துட்டா. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கரைபுரண்டு ஓடும் நதியும் அந்த பக்கம் காடு மாதிரியான நதியோட இன்னொரு கரை. ரொம்ப ஏகாந்தமான சுற்றுப்புறம். காத்தால சீக்கரமே கிளம்பி காலடிக்கு போனோம் அங்கேந்து வண்டி நேரா திரிச்சூருக்கு போச்சு. திரிச்சூர்ல பூரம் உத்ஸவம் நடக்கும் வடக்கு நாதர் கோவிலுக்கு போய் தரிசனம் பண்ணினோம் அதுக்கு அப்புறமா வரவழில ராவணன் படத்துல ஐஸ்குட்டி ஒரு அருவிலேந்து கீழ விழற மாதிரி மணி சூட்டிங் பண்ணின அதிரப்பள்ளி வாட்டர்பால்ஸுக்கு போனோம். ஜலபிரவாகம் அற்புதமா இருந்தது. அதை முடிச்சுட்டு திரும்பி ரிசார்ட்டுக்கு வந்துட்டோம். அடுத்த நாள் ஊருக்கு கிளம்பர வரைக்கும் வேற எங்கையும் போகலை. காத்தால கிளம்பி அங்கமாலி ஸ்டேஷன்லேந்து எர்ணாகுளம் போயி திருவனந்தபுரத்துக்கு போகும் வந்தே பாரத் ரயிலை புடிச்சேன். தங்கமணி குரூப் கொச்சிலெந்து ப்ளைட்டை புடிச்சு மெட்ராஸ் போயிட்டா. வந்தே பாரத்துல பக்கத்து சீட்ல திருச்சூர் குத்துவிளக்கு மாதிரி ஒரு பொண்ணு. நல்லவேளை தங்கமணி இருந்தா என்னை அடுத்த கம்பார்ட்மண்டுக்கே இடம்மாத்தியிருப்பா. மூனு மணினேரத்துல அனந்தனோட ஊர் வந்துருத்து. திருவனந்தபுரத்துல எங்க தெருக்காரா ஒருத்தர் இருக்கா. ரொம்ப வருஷமா அவாத்துக்கு வரேன் வரேன்னு சொல்லிண்டு இருந்தேன். அவாத்துக்கு போயிட்டு ஒரு மணி நேரம் தெருக் கதை சம்சாரிச்சுட்டு சாயங்காலம் கோவிலுக்கு கிளம்பியாச்சு. நாங்க போன நேரம் சாயரக்ஷை தீபாராதனை நடந்தது. அனந்தசயனத்தை ஆனந்தமா தரிசனம் பண்ணிட்டு நேரா ஆட்டுங்கால் பகவதியம்மன் கோவிலுக்கும் போயிட்டு வந்தோம். அடுத்த நாள் காத்தால ஆஹாரம் பண்ணிட்டு நாகர்கோவில் வண்டியை பிடிச்சி கல்லிடை வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாளில் இருந்து சதுர்த்தி உத்ஸவம் தொடங்கியாச்சு.

 



கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா சதுர்த்தி உத்ஸவத்துக்கு வரர்தே இல்லை. அத்வைதாவோட ஸ்கூல்ஆபிஸ் லீவுனு தட்டிப்போயிண்டே இருந்தது. இந்த வருஷம் திரும்ப கிடைச்சது. சின்னக்குழந்தையிலிருந்தே எனக்கு காது குத்தலை. அதனாலையோ என்னவோ தங்கமணி அடிக்கடி என்னக்கு காது குத்திடரா. அதனால இந்த தடவை அம்பாசமுத்ரத்துல இருக்கும் பாலு ஜுவல்லர்ஸ் கடைக்கு போய் ஆசாரி கையால நாரத்தை முள்ளு வச்சு காது குத்தி கடுக்கண் போட்டுண்டேன் (கல்யாணத்துல தொடங்கி காதுகுத்துக்கு வந்தாச்சா) . ரெண்டு மூனு மாசம் முன்னாடி ஊர்ல முக்கியமான ரெண்டு மாமி திடுதிப்புனு வைகுண்ட லோகம் போயிட்டா. ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப ஸ்னேகமானவா. ஒருத்தருக்கு எழுபது வயசுக்கு பக்கம்.. பேசினா ரெண்டு கிலோமீட்டருக்கு கேக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய சண்டையை இந்தவாரமே இழுத்துண்டு வந்துடுவா! தன்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் பாடுபட்டு சமையலில் உழைச்ச அசாத்தியமான ஒருத்தி. ‘எவனை நம்பியும் நான் கிடையாது’னு அடிக்கடி சொல்லுவா. ஊருக்கு நான் எப்ப போனாலும் ராத்ரி எங்காத்து திண்னைல வந்து உக்காந்துண்டு ‘நீயே பாவம் காத்தாட உக்கந்துண்டு இருக்கை! நான் வேற சிரமபடுத்தறேன்’னு சொல்லிண்டே எங்கிட்ட அரைமணி நேரம் பொலம்பித் தள்ளுவா பாவம்! நானும் கண்னை மூடிண்டே ‘ம்’ கொட்டுவேன்.இந்த வருஷம் அவா இல்லாம அந்த வட்டாரமே அமைதியாவெறிச்சோடி இருந்தது. இன்னொரு மாமி என்னோட ஸ்னேகிதனோட அம்மா. சின்னக் குழந்தைலேந்து தெரியும். பேசர்தே வெளில கேக்காது.கடைசி ஐஞ்சு வருஷமா காதும் கொஞ்சம் கேக்கலை ஆனா ஒன்னும் ஆகாத மாதிரியே முகத்தை வச்சுண்டு சமாளிப்பா. அரிசி அப்பளாம் வாங்க அவாத்துக்கு போனா ‘சமாசாரம் தெரியுமா?சமாசாரம் தெரியுமா?’னு குழந்தை மாதிரி கேட்டுண்டு அரைமணி நேரம் எங்கிட்ட எல்லா கதையும் பேசிட்டு ‘எதுக்கு வந்தைடாஅதுவே மறந்து போச்சு பாரு’னு சொல்லுவா. அவா சொல்லர்து எல்லாத்தையும் கேட்டுட்டு நானும் சில சமாசாரத்தை சொல்லிட்டு அரிசி அப்பளாத்தை வாங்கிண்டு வருவேன். இந்த வருஷம் அப்பளாம் வாங்கவே மனசு இல்லை. கழுத்துகை நிறையா நகை போட்டுண்டு சக்கப்பழமா உக்காந்துண்டு குழந்தை மாதிரி சிரிப்பா. இப்ப அவாத்து திண்னைல மண்ணும் புழுதியுமா பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரு ஊர் அப்பிடிங்கர்து வெறும் தெருவும்வீதியும் மட்டும் கிடையாது. திண்னைஅரசமரம்கோவில்நதி,வயல்,ஊர் மாந்தர்கள்திருவிழாசுகம்துக்கம்னு எல்லாம் சேர்ந்த கலவை. நகரத்துல உள்ளவாளுக்கு இது சுலபமா புரியாது. சரி விடுங்கோ நானும் புலம்ப ஆரம்பிச்சுட்டேன். பத்து நாள் உத்ஸவமும் நன்னா கழிஞ்சது. அடுத்த நாளே வந்தேபாரத்துல மெட்ராஸ் வந்துட்டு குடும்பம் குட்டியோட தோஹா வந்தாச்சு.

Monday, September 30, 2024

கல்யாணம் – காதுகுத்து (Part 2)

ராத்ரி தூங்க போகும் போது கல்யாண ஆத்துக்கு வந்த ஒரு மாமா ‘காத்தால சீக்கரமே முகூர்த்தம் அதனால நீ சீக்கரம் வந்துடு கோந்தை’னு சொன்னார். நான் வாஸ்தவமா காத்தால சீக்கரம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போயிட்டு வரனும்னு நினைச்சுண்டு இருந்தேன். அதுக்காக தான் கோவிலுக்கு பக்கத்துல இருக்கும் ஹோட்டல் ரூம்ல தங்கிண்டு இருந்தேன். இப்ப இவர் சொன்னதுக்கு அப்புறம் ப்ளனை மாத்தி மண்டபம் பக்கத்துல ஏற்கனவே புக் பண்ணி வச்சுருக்கும் ஒரு லாட்ஜ்ல போயி  பையை வச்சு தூங்க ஆரம்பிச்சேன். காத்தால குளிச்சுட்டு சந்தனகலர் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் கட்டிண்டு மண்டபத்துக்கு போயாச்சு. மண்டப வாசல்ல காசி யாத்ரை முடிஞ்சு ஊஞ்சல்ல மாப்பிள்ளை பொண்ணை உக்கார வச்சு இஸ்ரேல் லெபனான் மேல குண்டு போடர மாதிரி பச்சபுடி சுத்தி  கலர்கலரா உருண்டையை வீசிண்டு இருந்தா. யாரோ ஒரு கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்ட மாமி பச்சபுடி உருண்டையை காப்பர் சல்பேட் கலர் புடவை கட்டின மாமியை பாத்து யதேச்சயா வீசர மாதிரி ஆனா குறிபாத்து வீசினா.. அனேகமா அவாளோட நாத்தனாரா இருக்கும்னு நினைச்சேன். இன்னொரு மாமி போட்டோ கிராபர் மூஞ்சிக்கு ஒரு சிவப்பு உருண்டையை வீசினா. நேத்திக்கி அந்த மாமி பாலிகை தெளிக்கும் போது போட்டோ எடுக்காத கோவம் இப்ப பச்சபுடியை வச்சு புடிபுடினு புடுச்சுண்டு இருந்தா. ‘இன்னும் அரைமணி நேரம் எமகண்டம் இருக்கர்தால பாலும் பழமும் காலியாகர வரைக்கும் குடுத்துண்டே இருங்கோ’னு ஒரு திருனெல்வேலி மாமா சொல்லிட்டதால என்ன பண்ணர்துன்னு தெரியாம வாத்யார் மாமா குட்டிபோட்ட பூனை மாதிரி சுத்து சுத்தி வந்தார். லெப்ட்ல எடு! ரைட்ல எடு!னு போட்டோகிராபரை வந்தவா போனவா எல்லாம் ஏவ ஆரம்பிச்சுட்டா. இதுக்கு நடுல கமலாம்பாள் காட்டெரிங் சர்விஸ்ல காத்தால ஸ்பெஷல் என்னனு போய் பாத்துட்டு வந்த வேலையை பாப்போம்னு கொஞ்சமா ஒரு கரண்டி காசி அல்வா, ஒரு ஊத்தப்பம், ஒரு இட்லி, ஒரு ரவா தோசை, ஒரு வடை, பக்கத்து இலை மாமாவுக்காக கொஞ்சம் பொங்கல், அரைடம்பளர் காப்பியோட சமாப்தி பண்ணினேன். நான் முடிச்சு டைனிங் ஹால்லெந்து வெளில போகும் போது மாப்பிள்ளை பொண்ணு மண்டபத்துக்குள்ள கையை புடுச்சுண்டு வரர்துக்கு சரியா இருந்தது.

 


கல்யாணப்பொண்ணை விடவும் கீழ இருக்கரவா தான் மேக்கப்ல அசத்தரா. பவுன்டேஷன் பவுடரே நாலு கோட்டிங் அடிப்பா போலருக்கு. முன்னாடி இருக்கர முடியை பின்னாடி போட்டுக்கர்தும் பின்னாடி இருக்கர புடவை தலைப்பை முன்னாடி கொண்டு வரர்தும்னு கவுண்டமணி சொன்ன மாதிரி ‘இவளுக படுத்தரபாடு இருக்கே!’ லாக்கர்ல இருந்த காசுமாலைகல்வச்ச அட்டியல்டெம்பிள் ஜுவல்லரினு மினுக்கிண்டு இருந்தா. புடவை ஆயிரம் ரூபாய் தான் இருக்கும் போலருக்கு ஆனா ரவிக்கை மூவாயிரம் வந்துடும் . ரவிக்கைக்கு பின்னாடி மயில் பறக்கர்துகிளி ஆடர்துமீன் ஓடர்துனு ஆரி ஒர்க் அமக்களப்படர்து. எவ்ளோ தையக்கூலி குடுத்தர்னு அவாத்து மாமா கிட்ட கேட்டா தெரியும்.  கல்யாண மண்டபத்துல போயி ஆரி ஒர்க் ஆராய்ச்சி நடந்துருக்கு போல!னு நாக்கு மேல பல்லை போட்டு யாரும் கேள்வி கேட்காதீங்கோ. வளையல் போட்டுவிடரவர்மெகந்தி போடரவர் எல்லாம் ஒரு பொன்ணு கையை பிடிச்சா கையை பிடிச்சு இழுத்தான்னு யாரும் கத்த மாட்டா. அதே மாதிரி எனக்கு பிடிக்காட்டாலும் யுவான் சுவாங் மாதிரி ஞாபகம் வச்சுண்டு உங்களுக்கு சொல்லிண்டு இருக்கேன்.. மேடைல வாத்யார் மாமா ‘பொளத்ரி நப்த்ரி’னு ஆரம்பிச்சார். சரி இப்ப போனா சரியா இருக்கும்னு மேல போனேன். பிரவரம் சொல்லி கோத்ரம் மாத்திண்டு இருந்தா. பொண்ணோட அப்பாட்ட போயி “கண்கலங்காம இருங்கோ! உங்க பொண்ணுதான் அவாத்துக்கு போறா! நீங்க என்ன அழுதாலும் உங்காத்து மாமி உங்க கூடதான் இருக்க போரா அதனால ஹெப்பியா இருக்கர மாதிரி முகத்தை வச்சுக்கோங்கோ”னு சொன்னேன். கரெக்டா மாங்கல்ய தாரணம் ஆகர சமயம் ஹோமகுண்டம் புகைய ஆரம்பிச்சுடுத்து. எல்லா இடத்துலையும் வாத்யார் இந்த ஜோலிதான் பாக்கரார். அதை கொஞ்சம் நன்னா தான் ஜுவாலை பண்ணினா என்ன. போட்டோகாரர் வந்து ‘சாமி கொஞ்சம் நெய் விடுங்கோ! புகையை போட்டா தாலிகட்டர கட்டம் ஆல்பத்துல டல்லா இருக்கும்’னு கெஞ்சிண்டு இருந்தார். ‘தூரத்துல இருக்கரவா எல்லாம் பக்கத்துல வந்து அக்ஷதையை தம்பதிகளுக்கு போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. எனக்கு ஆசிர்வாதம் பண்ணாதீங்கோ!  என்னோட தலைல போடாதீங்கோ! காத்தால பச்சபுடி சுத்தின மாமி எல்லாம் பக்கத்துல வந்துடுங்கோ’னு வாத்யார் ரொம்ப உஷாரா எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார். ஒருவழியா அக்னி வந்துருத்து மாங்கல்ய தாரணமும் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாவுக்கு ‘அப்பாடா’னு இருந்தது மாப்பிள்ளைக்கு கை நடுங்க ஆரம்பிச்சுடுத்துபையனோட அம்மாவுக்கு வேர்கவே ஆரம்பிச்சாச்சு. எல்லாருக்கும் தர்பூசணி ஜூஸ்சாத்துக்குடி ஜூஸ்னு பிரஷ்ஷா மிக்ஸில அடிச்சு குடுத்தா.

 


ஹோமம் எல்லாம் பூர்த்தியானதுக்கு அப்புறம் கோவில் பிரசாதம் கிப்ட் கவர் வாத்யார்கிட்ட சொல்லி ஓதியிட்டோம். இதுக்கு நடுல ஒரு மாமா மேடைல என்கிட்ட வந்து ‘மத்யானம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலாம்னு இருக்கேன் நீங்களும் என்னோட வரேளா’னு கேட்டார். ‘சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பனையங்கார் உத்தரவு’ அப்பிடிங்கர கதையா இருக்கேனு மனசுல நினைச்சுண்டு ‘ஓ பேஷா போலாமே மாமா!’னு சொன்னேன். அப்பிடியும் இப்படியுமா எல்லார்கிட்டையும் ஒக்காந்து பேசிண்டு இருந்ததுல காத்தால சாப்பிட்ட டிபன் ஜீரணம் ஆயிடுத்து. மத்யான சாப்பாடுக்கு எல்லாரும் மெதுவா நகர ஆரம்பிச்சா. சாப்பாடும் பிரமாதமா இருந்தது. எல்லாத்தையும் சாப்பிட வயித்துல இடம் தான் இல்லை. சாப்பாடு முடிஞ்சு அந்த மாமா கூட கோவிலுக்கு கிளம்பியாச்சு. மாமாவும் நானும் ஒரு ஆட்டோவை புடிச்சு ரங்கா ரங்கா கோபுரம் பக்கத்துல போய் இறங்கிட்டு உள்ள போக ஆரம்பிச்சோம். உள்ள நுழையர்துக்கு முன்னாடி அங்க வாசல்ல இருந்த 'வசூல் ராஜா'(அதான் அறமில்லாத துறை) ஆபிஸ்குள்ள அந்த மாமா போனார். நானும் ரெண்டு நிமிஷம் நின்னேன் அப்புறம் என்ன ஆச்சுன்னு உள்ள போய் பார்த்தா ரெண்டு கிரவுண்ட் இடத்துல பெரிய ஆபிஸ்மொத்த ஆபிஸுக்கும் குளுகுளுனு ஏசி (எல்லாம் நாம உண்டியல்ல போடும் காசுல வந்ததுதான்). அங்க இருந்த ஒரு அதிகாரிக்கு சென்னைலெந்து ஒரு போன் கால் வந்தது உடனே அவர் எங்க கூட வந்துட்டு கொடிமரம் பக்கத்துல ஒருந்த ஒரு ஊழியரிடம் ‘இவங்களை தரிசனத்து அனுப்பி வைங்க’னு ஒரு வார்த்தை தான் சொன்னார். அதுக்கு அப்புறம் எல்லா கிரில் கேட்டும் வரிசையா திறந்தது. மூனாவது நிமிஷம் அரங்கனோட சன்னதி முன்னாடி நிக்கரோம். அரங்கனை நன்னா தரிசனம் பண்ணிண்டே புருஷ ஸூக்தம்நாராயண ஸூக்தம் எல்லாம் பாராயணம் பண்ணினேன்.வெளில வந்தா ஆச்சரியமா இருந்தது. இவ்ளோ சுலபமா தரிசனம் பண்ணக்கூடிய பெருமாளை இந்த அறம் கெட்ட துறை எவ்ளோ தூரத்துல நிப்பாட்டி வச்சுருக்கானு வருத்தமா இருந்தது. தாயார் சன்னதியிலும் அற்புதமான தரிசனம். பிரகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த மாமாட்ட “அப்பிடி என்ன தான் ஆபிஸ்லனு சொன்னேள்?”னு கேட்டா பாட்ஷா ரஜினி மாதிரி ‘உண்மையை சொன்னேன்’னு சொல்லி சிரிச்சார். எது எப்பிடியோ ரங்கனோட அனுக்கிரஹத்தால நல்லபடியா தரிசனம் பண்ண முடிஞ்சதுனு மனசுல நினைச்சுண்டேன். வெளில வந்துட்டு கீதா மாமிக்கு போன் பண்ணி பேசினேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்துலேந்து ப்ளாக் எழுதும் அசாத்தியமான நபர். மாமாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்ட போது ரொம்ப வருத்தமா இருந்தது.  கோபுரத்தோட ஒரு போட்டோ எடுத்துட்டு மறுபடியும் மண்டபத்துக்கு போனா……….                  

 

 

Show quoted text

Thursday, September 19, 2024

கல்யாணம் – காதுகுத்து (Part 1)

 ஆவணியாவிட்டத்துக்கு கல்லிடை போயிட்டு சதுர்த்தி முடிஞ்ச கையோட தோஹா வந்தோம். எப்போதுமே ஆடி மாசம் வெக்கெஷன்ல போகர்தால ஆத்தாடி மாரியம்மா பாட்டோட அம்மன் கோவில் திருவிழாதான் நடக்குமே தவிர கல்யாணம் காதுகுத்துனு நல்ல சாப்பாடுக்கு வழியில்லாமையே இருக்கும் இந்த தடவை தோஹால இருக்கும் ஒரு மாமா அவரோட பொண்ணுக்கு ஆகஸ்ட்ல கல்யாணம் வச்சு பத்திரிக்கையும் குடுத்து இருந்தார். பந்தக்கால் நாட்டுக்கே வந்துடரேன் கவலையே படாதீங்கோனு சொல்லிட்டேன். மெட்ராஸ்ல வந்து இறங்கின அன்னிக்கு மத்தியானமே குடும்பத்தோட திருவண்ணாமலைக்கு போயாச்சு. கோவிலுக்கு உள்ள நுழையும் போதே நல்ல மழை. அருமையான தரிசனம் பண்ணிட்டு வெளில வந்தா ‘கிரிவலம் எவ்ளோ தூரம்’னு எங்க மாமியார் கேட்டா. வாக்கிங் அப்பிடிங்கர ஊருக்கு எந்த பக்கம் வழினு தெரியாத மாமா மாமியை வச்சுண்டு பதினஞ்சு கிலோமீட்டர் கிரிவலம் நடக்காத காரியம்னு தெரிஞ்சதால யாராவது கிரினு பேர் வச்ச பையன் இருந்தா அவனை நிக்க வச்சு வேணும்னா வலம் வரலாம் னு சொன்னேன். கிரிவலத்துக்கு பதிலா கார்லையே வலம் வரலாம், கிரிவலப்பாதைல எட்டு சிவலிங்கம் வரும் போது கண்ணத்துல போட்டுக்கோங்கோனு சொல்லி கூட்டிண்டு போனேன். பதினஞ்சு வருஷம் முன்னாடி கிரிவலம் போன போது இருந்த இடமே இப்ப இல்லை. நாலு அடிக்கு பத்து கடை வருது. ஆந்திரா கோஷ்டி நிறைய வரர்தால கடை பேர் எல்லாம் தெலுங்குல எழுதியிருக்கா. திராவிட மாடல்ல ஹிந்தி மட்டும் எழுதகூடாது மத்தபடி ஓங்கோலில் இருந்து வந்தவர்களுக்கு தெலுங்கு இனிக்கும். ‘இந்த்ர லிங்கம் வருது கண்ணத்துல போடுங்கோ’னு சொன்னா எங்க மாமியார் ‘இங்கு சூடான பஜ்ஜி வடை கிடைக்கும்’னு போர்டு போட்ட எதோ ஒரு காபி கடையை பாத்து கண்ணத்துல போட்டுண்டா. அடுத்த மூனு லிங்கமும் இதே மாதிரி காப்பி கடை, டிடன் கடை, பிரியானி கடைக்கு கும்புடு போட்டு கழிஞ்சது. கொஞ்சம் மழை வேற பெஞ்சுண்டு இருந்தது. லிங்கம் ஏன் ரோட்ல இருந்து பாத்தா தெரியமாட்டெங்கர்துனு தங்கமணி ரொம்ப குறைபட்டுண்டா. உங்காத்து பெட்ரூம்ல உக்காந்துண்டு சாமி பாக்கனும்னு நினைச்சா முடியுமாடினு கேட்டேன். மழைக்கு பஜ்ஜியும் டீயும் நன்னா இருக்கும் எதாவது கடைவந்தா வண்டியை நிறுத்துங்கோனு மாமா காதுல எங்க மாமியார் சொன்னா. அவர் என்ன மூடுல இருந்தாரோ தெரியலை அவாத்து வாசல் வரைக்கும் வண்டியை நிறுத்தவே இல்லை.




 

அடுத்த நாள் ஆவணியவிட்டத்துக்கு கல்லிடை போயாச்சு. தெருல பழைய கலகலப்பு இல்லை. பாதிபேர் வெளியூருக்கு போயிட்டாகொஞ்சம் பேர் நடமாட்டம் இல்லைகொஞ்சம் பேர் போட்டோல இருக்கா. நான் வழக்கம் போல ஆன்லைன்ல தோஹால இருக்கும் மாமாக்களுக்கு உபாகர்மா பண்ணிவச்சுட்டு நானும் போட்டுண்டேன். ஒரு காலத்துல LMS மாமாவாத்து முன்னடி ரூம்ல குளத்து தீக்ஷிதர் மாமாட்ட சங்கல்பம் பண்ணர்துக்கு உக்கார இடம் கிடைக்காது. வாய்க்கால் மண்டபம் நிறைஞ்சு ஆட்கள் இருப்பா. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. காயத்ரி ஜபம் கழிஞ்சு அடுத்த நாள் காத்தால ஸ்ரீரங்கத்துல கல்யாணத்துக்கு விரதம் ஆரம்பம். ராத்ரியே ரெண்டு பஸ் மாறி காத்தால ஆறு மணிக்கு மண்டபம் போயாச்சு. கல்யாண மண்டபம் போகர்துக்கு முன்னாடி அம்மா மண்டபம் போயி அது எப்பிடி இருக்கும்னு பாத்துட்டு வந்தேன். காத்தால டிபன்ல ஆரம்பிச்சு அடுத்த நாள் நலுங்கு டிபன் வரைக்கும் பிரமாதமா இருந்தது. ரொம்ப நாளா என்னோட மூஞ்சி புச்தகத்துல கமலாம்பாள் காட்டெரிங் சர்வீஸ்னு ஒரு ரீல்ஸ் வீடியோ வரும். 'அவாத்து கல்யாணத்துல பரிமாறின டிபன்! இவாத்து கல்யாணத்துல போட்ட சாப்பாடு'னு வீடியோ வந்துண்டே இருக்கும். நானும் நாக்கை தொங்கபோட்டுண்டு பாப்பேன். 'கடைசி வரைக்கும் வீடியோ பாத்ததுதான் மிச்சம்'னு தங்கமணி நக்கல் அடிப்பா. சைட் அடிச்ச பொண்ணே பக்கத்து சீட்ல உக்காந்த கதையா அந்த காட்டிரிங் சர்வீசோட சமையல் இன்ப அதிர்ச்சியா இருந்தது. மடமடனு குளிச்சு ரெடியாகி டிபன் சாப்பிட்டு மேடைக்கு வந்துட்டேன். பொதுவா எந்த விஷேஷத்துக்கு வந்தாலும் வைதிக காரியங்கள்ல ஒத்தாசையா இருக்கர்து என்னுடைய வழக்கம். சாப்பிட்ட டிபன் கொஞ்சம் ஜெரிச்ச மாதிரியும் ஆச்சு பொண்ணாத்துக்காராளுக்கு உபகாரமா இருந்தாப்புலயும் ஆச்சு. முதல் நாள் காத்தால விரதம் நாந்தினு வரிசையா எல்லாம் நல்லபடியா ஆச்சு. பொண்ணோட அப்பாமாவை உண்மையில் பாராட்டனும் ஏன்னா மத்தவா மாதிரி வீடியோகிராபர் சொன்னதை எல்லாம் கேட்டுண்டு அப்பிடியே போஸ் குடுத்துண்டு இருக்காம “எந்த விஷயமும் ரெண்டாம் தடவை செய்ய முடியாது நீங்க தான் முதல் தடவை பண்ணும் போதே ஒழுங்கா எடுக்கனும்”னு சொல்லிட்டார். பாலிகை தெளிக்க வரவா எல்லாரும் பஞ்சாபி டான்ஸ் ஆடப்போறவா மாதிரி வரா. தலைமுடி ஒருபக்கம் தொங்கர்து புடவை தலைப்பு இன்னோரு பக்கம் இதுக்கு நடுல பக்கம் பக்கமா விளக்கு வேற எரியர்து. போட்டோவுக்கு போஸ் குடுத்துண்டே ஒரு மாமி பாலிகையை வாத்யார் தலைல தெளிச்சுண்டு இருந்தாஅவா தெளிக்கர்து கூட கவனிக்காம அவர் போன்ல பேசிண்டு இருந்தார். ‘அப்பிடியே நேச்சுரலா இருக்கு மாமி! இன்னொரு தடவை அவரோட தலைல தெளிங்கோ’னு சொல்லி போட்டோகிராபர் பிரகஸ்பதி ஏத்தி விட்டுண்டு இருந்தார்.  நாந்தி ஆகும்போது யார் யாருக்கு பிரதக்ஷிணம் பண்ணர்துனு ஒரே குழப்பம். மாப்பிள்ளையோட அப்பா பழக்கதோஷத்துல அவாத்து மாமியை பிரதக்ஷிணம் பண்ண ஆரம்பிச்சுட்டார். அவருக்கு என்ன தெரியுமோ அதைதானே அவர் பண்ணுவார். மாமிக்கு ஒரே சிரிப்பு. இதுக்கு நடுல கலிபோர்னியாலேந்து வந்த ஒரு மாமி நானும் பிரதக்ஷிணம் பண்ணலாமாஆனா எங்க மாமனார் மாமியார் இருக்கானு வாத்யார்கிட்ட டவுட் கேட்டுண்டு இருந்தா. பக்கத்துல இருந்த மாமா  பரவால்லை சும்மா பண்ணுங்கோ சீக்கரமே குட் நியூஸ் வரும்னு சொல்லி உள்ள அனுப்பிட்டார். மஸ்கட்லேந்து வந்த ஒரு மாமி அந்த ஊர் ஞாபகத்துல ரிவர்ஸ்ல சுத்திண்டு இருந்தா. நாந்தி முடியர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. இவா எல்லாரும் பண்ணின குழப்பத்துல வாத்யாருக்கு வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபமே மறந்து போயிடுத்து.




 

மத்யானம் சாப்பாடுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாயங்காலம் நேர திருவாணைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போயிட்டேன். ரெண்டு நாள் முன்னாடி அக்னி ஸ்தலமான அருணாசலம் இன்னிக்கி ஜலஸ்தலமான ஜம்புகேஸ்வரம் தரிசனம் ஆச்சு. கோவில் தோட்டத்துல யானை குளிக்கர்துக்கு ஒரு தொட்டி கட்டி வச்சுருக்கா அதை போய் பாத்துட்டு வந்தேன். அங்கேந்து நேரா மண்டபத்துக்கு திரும்பி வந்தா எல்லாரும் மண்டபத்துக்கு வாசல்ல ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். காத்தால சாதுவா இருந்த அமெரிக்கா மாமா இப்ப அருள் வந்த மாமா மாதிரி ஆடிண்டு இருந்தார். மாப்பிள்ளையாத்துல பெண்களூர் பக்கம் அப்பிடிங்கர்தால ஹிந்தி பாட்டு கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. சிலபேர் இடுப்பும் நோகாம காலும் நோகாம இப்ப வரும் ரஜினிகாந்த் மாதிரி நளினமா ஆடிண்டு இருந்தா. ரெண்டு சம்பந்தியும் சேர்ந்து ஜோடியா ஆடினா. 'மாலை டம்டம் மங்கள டம்டம் பாட்டு போடுங்கோ'னு ஒரு மாமி சவுண்ட் குடுத்தா. எல்லாம் ஆடி முடிஞ்சு ஒரு வழியா மண்டபத்துக்குள்ள போனதுக்கு அப்புறம் நிறைய தோஹா நண்பர்களை பாக்க முடிஞ்சது. யாரோ ஒரு மாமா “இவர்தான் என்னோட மூத்த மாப்பிள்ளை. கலிபோர்னியால இருக்கார். கூகிள்ல வேலை பாக்கரார். கிட்டத்தட்ட கலிபோர்னியா ஆப்ரேஷன்ல நம்பர் டூ பொஷிஷன்ல இருக்கார்”னு நீட்டி முழக்கிண்டு இருந்தார். அப்போ கலிபோர்னியா Google ல ரெண்டாவது ஓ இவர்தான்னு சொல்லுங்கோனு இன்னொரு மாமா கடிஜோக் அடிச்சுண்டு இருந்தார். ‘முன்னாடி மாதிரி கூகிள்ல தேடினா எதுவும் வரமாட்டேங்கர்தே?’னு ஒரு மாமி அந்த கூகிள் மாப்பிள்ளைட்ட ரொம்ப குறைபட்டுண்டா.  அமெரிக்காகாராளுக்கே உரித்தான பொருவிளங்கா உருண்டையை வாய்ல இடுக்கிண்டே பேசும் இங்கிலீஷ்ல It depends upon the search algoritham னு அவர் சமாளிக்க ஆரம்பிச்சவுடனே மாமனாருக்கு பெருமை பிடிபடலை. ஒரு வழியா பெரிய நிச்சயதார்த்தம் முடிஞ்சு எல்லாரும் சாப்பிட போனா. சாப்பாடு பிரமாதமா இருந்தது. எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் ஒரு போட்டோ எடுத்து தங்கமணிக்கு அனுப்பி வம்புக்கு இழுத்தேன். ‘எங்காத்து வத்ஸலாவுக்கு பாக்கறோம்!’ ‘வெங்கி இப்ப எம் எஸ் பண்ணின்டு இருக்கான்!’ ‘கமலா ஹாரிஸ் நம்ப ஊர் பக்கம்தான் தெரியுமோ!’ மாதிரியான சம்பாஷனைகள் போயிண்டு இருந்தது. ராத்ரி தூங்க போன போதுதான்...  

Thursday, December 15, 2022

கால்பந்து பைத்தியம் - Qatar FIFA 2022

 

போன மாசம் நவம்பர் 20ம் தேதிலேந்து இங்க தோஹால உலககோப்பை கால்பந்தாட்டம் நடக்கர்து. எனக்கும் கால்பந்துக்கும் ஒரு ஸ்னானப்ராப்தியும் கிடையாது. இங்க இருக்கரவாளுக்கு தெரிஞ்சது Football  எனக்கு தெரிஞ்சது எல்லாம் வெறும் Food balls (குலாப்ஜாமூன், மாலாடு,ரசகுல்லா,பருப்புருண்டை குழம்பு & Etc)  இருந்தாலும் ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’னு இருக்கும் எனக்கு எங்காத்துலையே விஷேஷம்னா சும்மா இருக்க முடியுமா.  இங்க இருக்கரவாளுக்கு கால்பந்துன்னா ஒரே பைத்தியம். இந்த ஊர் பைத்தியங்களையே சமாளிக்கமுடியாதுன்னா உலகத்துல இருக்கர எல்லா ஊர் பைத்தியமும் கடந்த ஒரு மாசமா இங்க தான் கூடி கும்மியடிச்சுண்டு இருக்கா. என்னை தூக்கி ஒரு ரயில்வே ஸ்லேஷன்ல ஒருமாசத்துக்கு ஸ்பெஷல் டூட்டி போட்டுட்டா. 'ரயிவே ஸ்டேஷன்ல என்னடா ஜோலி?'னு எங்க அம்மா போன்ல கேட்டா. ப்ளாட்பாரத்துல நிக்கரவா எல்லாரையும் ரயிலுக்குள்ள ஏத்தி விடனும் ரயிலுக்குள்ள இருக்கரவாளை இது அவா இறங்க வேண்டிய ஸ்டேஷனே இல்லைனு சொன்னாலும் விடாம கீழ இறக்கிவிடனும், எல்லாத்தையும் விட முக்கியமா புதுசா வந்தவாளுக்கு வழி சொல்லனும்னு சொன்னேன். பொதுவா கல்லிடைகுறிச்சிகாராளுக்கு இந்த வழி சொல்லர்து & விலாசம் சொல்லர்து எல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம். சுகமா காத்தால தாமிரபரணில ஸ்னானம் பண்ணிட்டு வாசல் திண்ணைல உக்காசுண்டு எங்கேந்து வந்துருக்கேள்? யாராத்துக்கு போரேள்? என்ன ஜோலியா வந்துருக்கேள்?’னு வரிசையா கேள்வி கேக்கர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுல இருக்கர சுவாரசியம் வேற எதுல இருக்கு சொல்லுங்கோ!




 விலாசம் சொல்லர்து சாதாரண விஷயம் கிடையாது. வந்து இருக்கும் பாதிபேருக்கு இங்கிலிஷ் தெரியாது பிரன்ஞ் ஜெர்மன் ஜாப்பனிஸ் ஸ்பானிஷ்னு நமக்கு தெரியாத எல்லா பாஷைலையும் பேசுவா. ஒரு பிரஞ்சுக்காரன் போஞ்சூர் போஞ்சூர்னு சொல்லரனே தவிர மேல விஷயம் என்னனே சொல்லமாட்டேன்கரான். நானும் பெண்களூர்ல வெச்சு கத்துண்ட ஓட்டை பிரஞ்சை வச்சு என்னவெல்லாமோ கேட்டாச்சு ஒரு பயனும் இல்லை. மறுபடியும் 'போஞ்சூர்/மூஞ்சூர்'னு வந்து நிக்கரான். கடைசில பாத்தா அவரோட ஆத்துக்காரி அடுத்த ரயில்ல வராளாம் ‘அவாளுக்கு காத்துண்டு நிக்கரேன்’னு சொன்னார். “தங்கமணிக்கு காத்துண்டு இருக்கரவனை தடிபோட்டு கிளப்பினாளும் ஒரு அடி நகரமாட்டான். சொன்ன இடத்துல நிக்கலைனா அப்புறம் என்ன ஆகும்னு அவனுக்கு தெரியும்!”னு சொல்லிட்டு மத்தவாளை போக சொன்னேன். ‘என் இனமடா நீ!’னு அவரை பாத்து சொல்லனும் போல இருந்தது. ஜப்பான்காரனுக்கு பேச ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி மூனு நமஸ்காரம், பேசும் போது நடுல ரெண்டு நமஸ்காரம் அப்புறம் முடிச்சதுக்கு அப்புறம் மூனு நமஸ்காரம் பண்ணனும். ரொம்ப மரியாதையான மனுஷா. நமக்குதான் பெண்டு கழண்டுரும்.

 

இந்த கூத்து போதாதுனு எனக்கு பேச்சாட்டு துணைக்கு ஒரு இங்கிலிஷ்காரனையும் இதே ஸ்டேஷன்ல போட்டுருக்கா. அப்பிடியே போடர்தா இருந்தாலும் ஒரு லெபனான் லேடியோ இல்லைனா ஸ்பெயின்காரியையோ போட்டா கொஞ்சம் கலகலப்பா இருக்கும் வேலையும்(அதாவது ஸ்டேஷன் வேலை) கொஞ்சம் சுவாரசியமா இருக்கும். ஆம்பிளையும் ஆம்பிளையும் காம்பினேஷன் நன்னா இருக்காதுடா கடன்காரானு எச் ஆர் கிட்ட சொன்னா கேட்டாதானே. அந்த வெள்ளைகாரனுக்கு பதில்சொல்லும்போதெல்லாம் வாய்ல ஒரு பொருவிலங்கா உருண்டையை போட்டுண்டு பேசவேண்டியிருக்கு. இல்லைனா 'பர்டன் பர்டன்'னு சொல்லி கழுத்தை அறுக்கரான்.  நீதான்டாப்பா எனக்கு பெரிய Burdenநு மனசுக்குள்ள சொல்லிப்பேன். ‘ராணி எலிசபத் இப்படி திடீர்னு அல்ப ஆயுசுல போயிட்டாளே உனக்கு எத்தனை நாள் சீதகம்? கோத்ர தாயாதியா?’னு துக்கம் விசாரிச்சேன். அவனும் ‘இப்படி திடீர்னு போவானு யாரும் எதிர்பாக்கலை! என்ன பண்ணமுடியும் எல்லாரும் ஒரு நாள் பகவான்கிட்ட போய்தானே ஆகனும்’னு இங்கிலிஷ்ல சொன்னான். கத்தார்காராளை விட மலையாளத்துகாராளைதான் கைலையே பிடிக்க முடியலை. என்னவோ அவா ஊர்ல எல்லாம் நடக்கரமாதிரி அவர்கள் போடும் சீன் தாங்கமுடியலை. “ஞான் நேற்று ராவுல மெஸ்ஸியை கண்டு! நாளை ரொனால்டொவை காணும்”னு இங்க இருந்து கேரளாவுக்கு போன் போட்டு அவா பண்ணும் அலப்பரைக்கு அளவே இல்லை கேட்டேளா? அதுவும் மலையாள சேச்சிகள் படுத்தரபாடு இருக்கே . ஊர்ல இல்லாத கம்பூனிஷ்டை கட்டிண்டு அழற மாதிரி இந்த சேட்டன்களுக்கு கிரிக்கட்டை விட கால்பந்து பிராந்து (பைத்தியம்) ரொம்ப அதிகம். ஸ்டேஷன்ல உக்காந்துண்டு ஒரு சேட்டன் வாய்ஸ் கால்ல கேரளால இருக்கும் அவரோட ஆத்துக்காரியோட பயங்கர சண்டை “ஞான் இவ்விடே ஒருபாடு பிசி கேட்டோ! ஞனக்கு சம்சாரிக்க இஷ்டமில்லடி! கால் கட்செய்யடி!”னு ஆரம்பிச்சு கத்த ஆரம்பிச்சுட்டார். சிவசிவா ராமராமா! அவரை சமாதானம் பண்ணர்துக்குல்ல போதும் போதும்னு ஆயிடுத்து. ஆத்துக்காரி கிட்ட எதுக்கு தேவையில்லாம சண்டைனு வெள்ளைக்காரன் என்னோட காதுல மெதுவா சொன்னான். சண்டை ஆரம்பிக்கும்போதே சேட்டன் கால் கட்பண்ணிட்டார் அதுக்கு அப்புறம் மனசு சமாதானம் ஆகரவரைக்கும் இங்க கத்தி இருக்கார். சேச்சி மட்டும் நேர்ல நின்னா இவ்ளோ பேச்சு சேட்டனால பேச முடியுமானு கேட்ட உடனே. சூப்பர் ஐடியானு வெள்ளைகாரன் வியந்தான். “வெள்ளைக்கார தம்பதிகளுக்குள்ள சண்டை வந்தா ரெடிகுளஸ்/குடிகுளஸ் என்னத்தையாவது அகராதியில் இல்லாத ரெண்டு கெட்ட வார்த்தையை சசிதரூர் மாதிரி திட்டிட்டு ரூம்ல போய் தனித்தனியா கதவை சாத்திண்டு சரக்கை அடிச்சுட்டு மல்லாக்க படுப்பேள் சண்டையும் சப்புனு முடிஞ்சுடும். ஆனா இந்தியாவுல இருக்கும் ரங்கமணிகள் அப்பிடி கிடையாதுனு சொன்னேன்.




 ஆரம்பத்துல ஒரு போட்டில அர்ஜன்டினாவை ஜெயிச்சுட்டு சவுதிஅரேபியாகாரனுக்கு தலைகால் புடிபடலை. ஒரே கத்தும் கூப்பாடுமா படுத்தி எடுத்துட்டான். தனுர் மாசத்து பஜனை கோஷ்டி மாதிரி எல்லாபயலும் வரும் போதே தாள வாத்தியம் கொட்டு பீப்பி சகிதமா வரான். ரயில்வே ஸ்டேஷன் உள்ள நுழையும் போதே ‘சரணு வேங்கட நாயகா!’னு வாசிக்க ஆரம்ப்பிச்சுருவா. சிலர் வேஷம் போட்டுண்டு வருவா. கிளி மாஞ்சாரோ பாட்டுக்கு ஆடின செட்டு அதே வேஷத்தோட அஹா அஹா!னு வந்துட்டா. இதெல்லாம் பரவாயில்லை ஒரு பிரெஞ்ச்காரன் கஷ்கத்துக்கு நடுல ஒரு சேவலை தூக்கிண்டு வந்துட்டான். கேட்டா போன மேட்ச்ல இந்த சேவல் சகிதமா வந்ததாலதான் எங்க ஊர் போட்டில ஜெயிச்சதுனு சொல்றான். ஒரு பிரெஞ்ச்காரி அப்பிடியே ரெட் வெல்வட் கேக் மாதிரி வந்தா. அடா அடா அடா! மொத்த ஸ்டெஷனும் ஆ!னு வாயை பொளந்துண்டு பாத்தா. ஸ்டேஷன் மாஸ்டர் வராத ரயிலுக்கு கொடி ஆட்ட ஆரம்பிச்சுட்டார். குரேஷியாகாரி மைதாமாவுல பண்ணின பொம்மையாட்டமா வந்தா. நான் டியூட்டில இருந்ததால எதையும் பாக்கலைனு தங்கமணிகிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் சரி சரினு மாப்பிள்ளையாத்துல சொல்லிட்டு ஜானுவாசம் அன்னிக்கு மைசூர் போண்டாவுக்கு பதிலா வாழக்காய் பஜ்ஜி போட்டு ஏமாத்தர மாதிரி முதல்ல சரக்கு இத்யாதிகள் எல்லாம் உண்டுனு சொல்லிட்டு கடைசி சமயத்துல ‘எங்க அத்திம்பேருக்கு ஹார்ட் ஆப்பிரேஷன் ஆயிருக்கு அதனால தீர்த்தவாரி கிடையாது, மைதானத்துல சுத்தபத்தமா இருங்கோ’னு இந்த ஊர் ராஜா சொல்லிட்டார். அது வேற எல்லா பயல்களுக்கும் செம கடுப்பு. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ!னு கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா இதுவரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் யாவரும் நலம்.

பலவிதமான அழுத்தங்களுக்கு நடுல கத்தார் இந்த போட்டியை  'வளர்ப்புமகன்' கல்யாணம் மாதிரி ஜாம்ஜாம்னு நடத்தரா. எல்லாம் நல்லபடியா செளக்கியமா முடியனும்.

Thursday, October 27, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 3)

 

நாம எதுல நிப்பாட்டினோம்? மஞ்சகலர் சுடிதார்.. இல்ல இல்ல இமிக்ரேஷன்ல நிப்பாட்டினோம். இமிக்ரேஷன்ல ரொம்ப நாழியா நின்னுட்டு லக்கேஞ் எடுக்க போனா அங்க அது பத்தாவது தடவையா கன்வேயர் பெல்டுல பிரதக்ஷினம் பண்ணின்டு இருக்கும். ஒருவேளை நமக்கு யோகம் நன்னா இருந்து இமிக்ரேஷன்ல சீக்கரம் முடிச்சு லக்கேஞ்சுக்கு வந்தா நம்ப பெட்டி மட்டும் வரவே வராது . அப்பிடியே வந்தாலும் நாலு பெட்டில கடைசி பெட்டி மட்டும் வராம நம்ப பொறுமையை சோதிக்கும். ஒரு வழியா கடைசி பெட்டியும் வந்து வெளில வந்து மச்சினன் கார்ல ஏறி மாமனாராத்துக்கு ஒரு வழியா போய் சேர்ந்தோம். என்னோட பழைய போஸ்ட்ல சொன்ன மாதிரி எங்க மாமியாராத்து மாடிப்படி பக்கத்துல நின்னு பாத்தாலே எல்லா ஏரோப்ளேனும் எந்த பக்கம் போகர்துன்னு நன்னா தெரியும். இன்னிக்கு கன்னியாகுமரியும் நெல்லையும் கொஞ்சம் லேட்டு போலருக்கேனு கல்லிடைல ரயில் விஷயமா மாமக்கள் சம்பஷனை பண்ணிக்கர மாதிரி இன்னிக்கி துபாய் வண்டி ஏது இன்னும் வரலை? கத்தார் ஏர்வேஸ் காலைலயே போயிட்டானே!னு எங்க மாமியார் சில சமயம் லெவல் காட்டுவா. அதே மாதிரியே ஏர் அரேபியா இறங்கி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகர்தே? ஏது லேட்டு? பெட்டி வரலையா?னு ஜாரிச்சா. இறங்கர இடத்துல எங்க ஊர் மாமா ஒருத்தரை பாத்தேன் அதான் லேட்டுனு சொன்னேன். உங்க ஊர் மாமாவா? அப்ப நேரம் ஆகத்தான் செய்யும்னு சொல்லிட்டு போயிட்டா.

 

நலம் நலமறிய ஆவல்! மாதிரியான பரஸ்பர சம்பாஷனைகள் எல்லாம் முடிஞ்சது. அன்னிக்கு சாயங்காலமே கல்லிடைக்கு கிளம்பியாச்சு. வழக்கம் போல செல்வம் ஆம்னி பஸ்ல டிக்கெட் போட்டு இருந்தேன். தங்கமணிக்கு பஸ் அவ்ளோதூரம் பிடித்தமில்லை. காத்துவராது தண்ணிவரும்னு கொஞ்ச நேரம் முனகிட்டு அப்புறம் செளக்கியமா செட்டில் ஆயிட்டா. காலையில் கல்லிடை வந்தாச்சு. நாங்கள் ஊருக்கு போன நேரம் சில புண்ணியாத்மாக்கள் ஊர்ல இல்லை. அதனால கொஞ்சம் நிம்மதியா இருந்தது. முக்கியமா தெருக்காத்தான் மாமா & எக்ஸ்ரே மாமி. மச்சினன் பிள்ளைக்கு பாம்பேல பூணல்னு சொல்லிட்டு பாம்பே போயிருந்தாலாம். தெருக்காத்தான் மாமாவுக்கு தெரியாம தெருல யாரும் ..சு கூட போடமுடியாது. காத்தால ஆத்தங்கரைல குளிச்சுட்டு கிழக்க பாத்து திண்னைல உக்காந்தார்னா அவரோட பார்வைலேந்து யாரும் தப்ப முடியாது. யார் யாராத்துக்குள்ள போறா,எங்கேந்து வந்தா,யாரு யாரு கூட பேசறா போன்ற உலக அமைதிக்கு தேவையான அனைத்து சமாசாரங்களுக்கும் மாமா  தான் அத்தாரிட்டி. அவாத்து மாமி புதுசா யாராவது வந்தா அவாளை மேலேந்து கீழ பார்வையாலையே ஒரு எக்ஸ்ரே எடுப்பா. அதோட சோலி முடிஞ்சது. வடிவேல் ஒரு படத்துல சொல்லுவாரே நான் பாத்தாலே பத்திண்டு எரியும்னு அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை நம்ப மாமியோட பார்வை. இதுல வேடிக்கை என்னான்னா மாமியோட பார்வைக்கு எல்லாரும் பயந்து நடுங்கிண்டு இருக்கும் போது அந்த மாமி என்னடான்னா காத்தால ரேஷன் கடைக்கு போகும் போது “எதிர்தாப்ல அவதான் வந்தா! ரேஷன் கடைல ஜீனி இல்லைனு சொல்லிட்டான்! போனதே வேஸ்ட்!”னு இன்னோரு மாமியை பாத்து ஆவலாதி சொல்லிண்டு இருப்பா.  ‘செளக்கியமா இருக்கியா’னு போன தடவை கேட்டா. ‘இதுவரைக்கும் செளக்கியம் தான் இதுக்கப்பரம் ஸ்வாமிதான் காப்பாத்தனும்’னு சொல்லிட்டு வந்தேன். நல்லவேளை மாமா & மாமி ரெண்டு பேரும் இல்லாததால கொஞ்சம் நிம்மதியா நடமாடமுடிஞ்சது.




 எங்கையுமே கூட்டிண்டு போகலைனு தங்கமணி எப்போதும் ஆவலாதி வாசிப்பா. அதனால இந்த தடவை ரெஸ்டே இல்லாம திருச்செந்தூர், மதுரை, குலதெய்வம் கோவில், நெல்லையப்பர் கோவில்னு நித்தியம் ஒரு இடம் போயிட்டு வந்தோம். அத்வைதாவும் விஷ்வஜித்தும் பேசி சிரிச்சு விளையாடி பாட்டியை சந்தோஷப்படுத்தினா. ஒரு வாரம் போனதே தெரியலை. போகும் போது சென்னைக்கு தூத்துக்குடில ப்ளைட் ஏறினோம். விஷ்வாவுக்கு ப்ளைட் பிடிக்கலை. அம்மாவை ப்ளைட்ல வரச்சொல்லு நாம செல்வம் பஸ்ல வரலாம்னு கொஞ்சம் மொரண்டு பிடிச்சான். அடுத்த முறை குழந்தேளை காரணம் காட்டி இனிமே தங்கமணி ப்ளைட் புக் பண்ணமுடியாதுனு நினைச்ச போது கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அவா எல்லாரையும் சென்னைல கொண்டு போய் விட்டுட்டு இரன்டு நாள் கழிச்சு நான் மட்டும் கல்லிடைக்கு திரும்பி வந்தேன். அம்மாவுக்கு ரொம்ப நாளா கால்முட்டில வலி இருக்கு. அதுக்கு இங்கிலிஷ் வைத்தியம் பாத்தா கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கர மாதிரி பாவலா காட்டிட்டு மறுபடியும் பழைய குருடி கதவை திறடினு வந்து நிக்கர்து. இந்த தடவை அதுக்கு எதாவது பண்ணலாம்னு தான் முக்கியமான உத்தேசம். கேரளால போய் ஆயுர்வேத வைத்தியம் பாக்கலாம்னு பாத்தா அம்மாவுக்கு வெளில உள்ள சாப்பாடு எதுவும் வயத்துக்கு ஒத்துக்காது. திருனெல்வெலிக்குள்ள எதுவும் சொல்லிக்கர மாதிரி இல்லை. என்னடா பண்ணர்துன்னு இருந்தப்ப தான் ஆழ்வார்குறிச்சில ஒரு வைத்திய சாலை இருக்குனு கேள்விப்பட்டேன்.

 

அங்க போய் பாத்தேன். நல்ல ரம்மியமான சூழ்னிலை மற்றும் சமையல் இல்லாத சாப்பாடு முறைகள் இருக்கு. அங்க இருந்தவா பாதிக்கு மேல மூட்டுவலி கேஸ் இல்லைனா உடல் எடை பிரச்சனை உள்ளவா. வயசானவானு இல்லை நாற்பது வயசுக்கு குறைவா உள்ளவா கூட சிகிச்சைக்கு வரா. யாரும் இப்ப நடக்கர்தே இல்லை எல்லாத்துக்கும் பைக் பைக்னு வாகனத்துல ஏறினா கடைசில ஆழ்வார்குறிச்சில வந்து அவல் பொறிகடலை சுண்டல்னு சாப்பிட வேண்டிய நிலை வந்துடர்து. அங்க ஒரு சேலத்துகாரர் ‘பத்து பரோட்டா சாதாரணமா சாப்பிடுவேன் இப்ப பத்து நாளா கொத்தமல்லி சாறு தான் காத்தால ஆகாரமா தரா’னு ரொம்ப பாவமா சொல்லிண்டு இருந்தார். ‘இன்னும் பத்து நாள் கொத்தமல்லியோட சேர்த்து இஞ்சி சாறும் சாப்பிட்டாதான் இத்தனை நாளா சாப்பிட்ட பரோட்டாவை சரிகட்டமுடியும்’னு சொல்லிட்டு வந்தேன். ஒரு பெண்களூர்காரருக்கு உடம்பு முழுக்க தேங்காயை அறைச்சு பூசி விட்டுருந்தா இன்னொருத்தருக்கு கொத்தமல்லி பேக் போட்டு விட்டுருந்தா. தக்காளி சட்னியும் வெங்காயசட்னியும் மட்டும் தான் பாக்கி அதுவும் அனேகமா மரத்துக்கு அந்த பக்கமா இருப்பாளோனு கொஞ்சம் சம்சியமா இருந்தது. இட்லி பேக் உண்டானு யாரும் கேக்காதீங்கோ அதுக்கு பதிலா ஆட்களையே இட்லி மாதிரி ஆவில வேகவச்சு பளபளனு ஆக்கரா.

 

நல்லபடியா எல்லாம் முடிச்சு போன சமத்து போல தோஹாவுக்கு திரும்பி வந்தாச்சு.